48 நாளில் வேண்டுதல் நிறைவேற அம்மன் வழிபாடு

amman6
- Advertisement -

நம்முடைய மனதில் எத்தனையோ நிறைவேறாத வேண்டுதல்கள் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று கோவில் கோவிலாக ஏறி இறங்குவோம். எவ்வளவோ பரிகார பூஜை முறைகளை செய்திருப்போம். ஆனால் நம்முடைய வேண்டுதல் மட்டும் பலித்திருக்காது. உதாரணத்திற்கு வீட்டில் சுபகாரியத் தடை, கணவர் சொல்பேச்சு கேட்காமல் தவறான பாதைக்கு போகிறார், கடன் தொல்லை, பண பிரச்சனை, சொந்த வீடு கட்ட வேண்டும், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தேவை, இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

அந்தப் பிரச்சினையை சரி செய்யத்தான் கோவிலுக்கு போகின்றோம் இறைவழிபாடு செய்கின்றோம் வேண்டுதலையும் வைக்கின்றோம். உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து ஏதாவது ஒரு பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வேண்டுதலை மனதில் நினைத்து தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம், 48 நாட்களுக்குள் நல்லது நடக்கும்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற அம்மன் வழிபாடு

இந்த வழிபாட்டை பெண்கள் ஆண்கள் யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். வீட்டில் இருந்தபடியே அம்மனின் திருவுருவப்படத்திற்கு முன்பு இந்த விளக்கை போடலாம். தவறு கிடையாது. உங்களால் கோவிலுக்கு செல்ல முடியும். 48 நாள் தொடர்ந்து வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியும் என்றாலும், இந்த வழிபாட்டை கோவிலிலேயே தொடரலாம்.

அது உங்களுடைய விருப்பம். ஆனால் முதல் நாள் வீட்டில் விளக்கு போட்டால், 48 நாளும் தொடர்ந்து வீட்டில் விளக்கு போட வேண்டும். முதல் நாள் கோவிலில் விளக்கு போட்டால், தொடர்ந்து 48 நாள் கோவிலில் தான் விளக்கு போட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழிபாட்டிற்காக மண் அகல் விளக்கு பயன்படுத்துங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

- Advertisement -

விளக்கு எண்ணெயில் தீபம் நின்று எரியும் என்று சொல்லுவார்கள். பஞ்சு திரியை இதில் போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அம்பாளை மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதை அம்பாளின் பாதங்களில் இறக்கி விடுங்கள். ஒரு வேண்டுதலாக வைக்கவும். மொத்த வேண்டுதலையும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது.

தினமும் காலை அல்லது மாலை நேரம் ஏதாவது ஒரு நேரம் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அம்பாளிடம் வேண்டுதலை சொன்னால் நீங்கள் வைத்த வேண்டுதலானது நிச்சயம் 48 நாட்களுக்குள் பலிக்கும். பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் இடையில் மாதவிடாய் நாட்கள் வரும். அதை தவிர்த்து விட்டு 48 நாளை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடங்கக் கூடிய நாள் வெள்ளிக்கிழமையாக இருக்கட்டும். வழிபாட்டை தொடங்கும் போது அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதமாக செய்து வைக்கவும். வழிபாட்டை முடிக்கக்கூடிய நாளிலும் சர்க்கரை பொங்கல் செய்து வைத்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளவும். இடையே இருக்கக்கூடிய மற்ற நாட்கள் வெறும் விலக்கு மட்டும் போட்டால் போதும்.

இதையும் படிக்கலாமே: காரியத்தடை நீங்க செய்ய வேண்டிய தானம்

பிரசாதம் வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. முடிந்தவர்கள் உங்களால் முடிந்த பழம் உலர் திராட்சை பேரிச்சம்பழம் இவைகளை பிரசாதமாக வைக்கலாம் தவறு கிடையாது. சுலபமான வழிபாடாக தெரியும். ஆனால் இந்த வழிபாட்டை செய்தால் இந்த அம்பாளின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறுவீர்கள், உங்கள் மனதில் நினைத்த வேண்டுதல் 48 நாட்களுக்குள் பலிக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -