5.3.2024 இன்று வாஸ்து நாள் வழிபாடு

vasthubagavan
- Advertisement -

ஒவ்வொரு வீடும் கோவிலாக மாற, குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்க, வாஸ்து தோஷம் விலக, வாஸ்து பகவானின் ஆசீர்வாதம் ரொம்ப ரொம்ப முக்கியம். சொந்த நிலம் வாங்க வேண்டும், சொந்த வீடு வாங்க வேண்டும், என்பவர்களுக்கும் இந்த வாஸ்து பகவானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைத்தால், அவர்களுடைய ஆசை சீக்கிரம் நிறைவேறும்.

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியேறவும் இந்த வாஸ்து பகவானின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்க வேண்டும். வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இந்த வாஸ்து பகவான் கண்விழிப்பதாக சாஸ்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அந்த ஐந்து நாட்களைத் தான் வாஸ்து நாளாக, நம்முடைய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வரிசையில் 05-03-2024 ஆம் தேதியான இன்று வாஸ்து நாள்.

- Advertisement -

இன்றைய தினம் உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வாஸ்து பகவானை நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாஸ்து பகவானின் ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். சாதாரணமாக இருக்கும் உங்களுடைய வீடு, வாஸ்து பகவானின் ஆசிர்வாதத்தால் சந்தோஷம் நிறைந்த கோவிலாக மாறும். வாஸ்து நாளில் நம் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டைப் பற்றிய விரிவான தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வாஸ்து நாள் வழிபாடு

இன்று மாலை 6:00 மணி அளவில் பூஜை அறையில் எப்போதும் போல விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வாஸ்து பகவானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் என்ன பிரச்சனை இருக்கிறது. அந்த பிரச்சனையை வாஸ்து பகவானிடம் வேண்டுதலாக வையுங்கள். இன்று செவ்வாய்க்கிழமை, நிலம் சம்பந்தப்பட்ட செவ்வாய் பகவானுக்கும், முருகப்பெருமானுக்கும் உரிய நாள். ஆகவே அவர்களையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பிறகு உங்களுடைய வீட்டில் வடக்கு திசை எந்த பக்கம் இருக்குதோ, அந்த திசையில் ஏதாவது ஒரு இனிப்பு பலகாரத்தை வைத்து, வாஸ்து பகவானை மனதார நினைத்து வடக்கு பக்கம் பார்த்தவாறு நீங்கள் அமர்ந்து கொண்டு பின் சொல்லக்கூடிய மந்திரத்தை 27 முறை சொல்ல வேண்டும். வாஸ்து பகவானின் தலைப்பகுதி வடக்கு பக்கத்தில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஆகவே தான் இந்த வழிபாட்டை வடக்கு நோக்கி செய்கின்றோம். வாஸ்து பகவானின் மந்திரம் இதோ உங்களுக்காக.

ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி தந்நோ
வாஸ்து புருஷ ரசோதயாத்

- Advertisement -

தினமும் இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. வாஸ்து பகவானின் ஆசீர்வாதம் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். வாஸ்து பிரச்சினையால் சிக்கித் தவித்து வருபவர்கள், இந்த மந்திரத்தை தொடர்ந்து 48 நாள் சொன்னால், அந்த பிரச்சனைக்கு நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: பணத் தடையை நீக்கும் பச்சையம்மன் வழிபாடு

தொடர்ந்து 48 நாள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாது என்பவர்கள் வாஸ்து நாளை பயன்படுத்திக்கோங்க. வாஸ்து நாளான இன்று இந்த மந்திரத்தை சொல்லி, வாஸ்து பகவானை வழிபாடு செய்தால் தொடர்ந்து 48 நாள் வாஸ்து பகவானை வழிபாடு செய்த பலனை நம்மால் பெற முடியும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -