பணத் தடையை நீக்கும் பச்சையம்மன் வழிபாடு

pachai amman pray
- Advertisement -

சக்தியின் மறு உருவமே இந்த பச்சையம்மன். இவரை பெரும்பாலான இடங்களில் கிராம தேவதையாக இன்றளவும் வழிபட்டு வருகிறார்கள். இந்த பச்சை அம்மன் அநேகம் பேருக்கு குலதெய்வமாக விளங்கி அருள் பாளித்து வருகிறார். பச்சையம்மன் குறித்த பல புராண கதைகள் உள்ளது. பச்சையம்மன் சிவபெருமானின் உடலில் பாதியை பெற வேண்டும் என்பதற்காக இந்த கோலத்தில் சிவ பூஜை செய்ததாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி சூரகோபன் என்ற அசுரனை கொல்ல பச்சை வண்ண அவதாரம் எடுத்ததாகவும், மன்னன் ஒருவனுக்கு கங்கை மகளாக பிறந்து பச்சையம்மன் ஆக மாறி வழிபட்டதாகவும் புராண கதைகள் சொல்லப்படுகிறது. இத்தனை சிறப்பு அம்சங்கள் நிறைந்த பச்சையம்மனை நம்முடைய பிரச்சனைகள், பணத்தடை, கடன் தீர எப்படி வழிபடுவது என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர பச்சையம்மன் வழிபாடு

பெண் தெய்வங்கள் வழிபாடு என்றாலே செவ்வாய் வெள்ளி தான். அந்த வகையில் பச்சையம்மன் வழிபாடும் செவ்வாய்க்கிழமையில் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. பச்சையம்மன் பலருக்கும் குலதெய்வமாக உள்ளபடியால் குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாளும் இந்த செவ்வாய் வெள்ளி தான்.

உங்கள் ஊரின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு பச்சையம்மன் ஆலயத்திற்கு செவ்வாய்க்கிழமை தோறும் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி செல்லும் வேளையில் பச்சை நிற குங்குமத்தை வாங்கி செல்லுங்கள். இந்த குங்குமத்தை அம்மன் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்யுங்கள் முடிந்தால் குங்குமச்சனை செய்ய முடியுமானால் அதையும் செய்யுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அர்ச்சனை செய்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த குங்குமத்தை தினந்தோறும் நெற்றியில் பச்சையம்மனை மனதார வேண்டிக் கொண்டு வைத்து வாருங்கள். இதில் குறிப்பாக நாம் பின்பற்ற வேண்டிய ஒரு விஷயம் பச்சையம்மனுக்கு பூஜை செய்து வாங்கி வந்த இந்த குங்குமத்தை வெளியில் உள்ள யாருக்கும் தரக் கூடாது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

இந்த வழிப்பாட்டு முறை மிக மிக எளிமையான ஒன்று தான். ஆனால் செவ்வாய்க்கிழமை தோறும் பச்சையம்மன் ஆலயத்திற்கு சென்று இது போல வழிபாடு செய்து வருபவர்கள் குடும்பத்தில் என்றென்றைக்கும் பணப்பிரச்சனையே வராது என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி உங்களுக்கு ஏற்படும் சகல விதமான பிரச்சனைகள் தீர இந்த வழிபாடு துணை புரியும்.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய கிராம்பு பரிகாரம்

சிவனின் பாதியான பச்சையம்மனின் இந்த முறையில் எளிமையாக வழிபட்டு நம்முடைய பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.

- Advertisement -