செலவு செய்யும் பணம் இரட்டிப்பாக திரும்பவும் நம்மிடமே வருவதற்கு, இந்த 5 ரூபாய் நாணயத்தை உங்கள் பர்ஸ்ஸில் வைக்க வேண்டும். அது எந்த 5 ரூபாய்? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

pournami
- Advertisement -

நமக்கு பணக்கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றால், அடிக்கடி அதிர்ஷ்டம் தரக்கூடிய சின்ன சின்ன விஷயங்களை செய்து பார்ப்பதில் ஒன்றும் தவறு இல்லை. அப்படி ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் எந்த ஒரு மாய மந்திர வித்தைகளும் கிடையாது. உண்மையிலேயே உங்களுக்கு அதிர்ஷ்டமானது தேடிவரும். சந்திர பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டமானது உங்களை தேடி வரப்போகின்றது. பொதுவாகவே பௌர்ணமி தினத்தில் குலதெய்வ பூஜை செய்தால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்.

அந்தப் பௌர்ணமி தினத்தன்று, நம் கையில் இருக்கும் 1 ஐந்து ரூபாய் நாணயத்தை அதிர்ஷ்டமான நாணயமாக எப்படி மாற்ற போகின்றோம், என்ற ஒரு சுலபமான முறையை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்க பர்ஸ்ல இருக்க பணம் செலவாகாமல் அப்படியே இருக்கணும்னு நினைக்க முடியாது. ‘செலவான பணம், இரட்டிப்பாக திரும்பி வரணும்’. அப்படிதானே வேண்டுதல் வைக்க முடியும். என்றால் ஏனென்றால் செலவு செய்தால்தான் அது பணம். செலவு செய்வதற்காக தான் பணம். சரி பதிவுக்கு செல்லலாமா?

- Advertisement -

முதலில், பௌர்ணமி தினத்தன்று இரவு 7 மணிக்கு மேல், உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றிவைத்து, குலதெய்வத்தை நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். முதலில் ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்து அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரைய வேண்டும். குங்குமத்தை தண்ணீரில் கரைத்து, அதை ஒரு தீக்குச்சியால் தொட்டு, அல்லது புது தென்னங் குச்சியால் தொட்டோ ஒரு வெள்ளைப் பேப்பரில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து கொள்ளுங்கள். பேப்பரின் நான்கு முனைகளிலும் மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள். இந்தக் காகிதத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். காகிதமானது அப்படியே இருக்கட்டும்.

five-rupee-coins

அடுத்ததாக, ஒரு ஐந்து ரூபாய் நாணயம் மட்டும் உங்கள் உள்ளங்கைகளில் இருக்க வேண்டும். இரு கைகளை கூப்பி வேண்டிக் கொள்ளும்போது, இரு உள்ளங்கைகளின் நடுவில் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள். ‘உங்கள் கையில் வரக்கூடிய வருமானத்திற்கு வீண்விரயம் ஆகக்கூடாது. சுபச்செலவுகள் தான் ஆகவேண்டும். செலவு ஆகும் பணம் இரட்டிப்பாக மீண்டும் உங்கள் கைகளுக்கு வரவேண்டும்’. என்ற வேண்டுதலை குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்டு, அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை தயாராக இருக்கும் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட பேப்பரின் மேல் வைத்து, இந்தத் தாம்பூலத் தட்டை அப்படியே மொட்டை மாடியிலோ அல்லது உங்கள் வீட்டு பால்கனியில் வைத்துவிடுங்கள். அதாவது சந்திர பகவானின் தரிசனம் இந்த ஐந்து ரூபாய்க்கு கிடைக்க வேண்டும்.

- Advertisement -

முடிந்தால் பௌர்ணமி இரவு முழுவதுமே சந்திரனின் ஒளியில் இந்த ஐந்து ரூபாய் நாணயம் இருக்கலாம். அந்த பேப்பர் காற்றில் பறக்காமல் இருப்பதற்கு, அதன் மேல் ஏதாவது எடை உள்ள பொருளை வைத்து விடுங்கள். பேப்பர் பறந்து சென்று விடக்கூடாது. அப்படி இல்லை என்றால், ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வைத்துக் கொள்ளலாம்.  இரண்டு மணி நேரம் சந்திரனின் ஒளி, இந்த ஐந்து ரூபாய் நாணயத்தை மேல் விழும் படி வைத்துக் கொள்ள வேண்டும்.

pournami-vilakku

நாணயத்தைச் சந்திர பகவான் ஒளியில் காட்டும்போதும் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுதலை இருகைகளை ஏந்தி, சந்திர பகவானிடம் கேட்டுக் கொள்ளுங்கள். சந்திர பகவானின் ஆசிர்வாதத்தை பெற்ற அந்த ஐந்து ரூபாய் நாணயமானது அதிர்ஷ்டமான நாணயமாக மாறி இருக்கும். பரிகாரம் அவ்வளவு தான்.

- Advertisement -

swastik symbol benefits tamil

மறுநாள் காலையில் அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை அந்த பேப்பரில் வைத்து மடித்து, உங்கள் பாக்கெட்டிலோ உங்கள் பர்ஸ்ஸிலோ, உங்கள் பேகிலோ அல்லது, உங்கள் பீரோவில் எங்கு வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். கட்டாயம் இந்த ஐந்து ரூபாய் இருக்கும் இடத்தில் பணம் சேராமல் இருக்காது.

one rupee

ஒரு ரூபாய் நாணயத்தை கூட இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம் தவறொன்றும் கிடையாது. நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். சக்சஸ் ஆகி விட்டால் லாபம் தானே. நஷ்டம் என்று சொல்ல எதுவுமில்லை. பணம் சேர்வதற்கு சின்ன பரிகாரம் செய்வது பார்ப்பதில் தவறு ஒன்றும் கிடையாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -