சமையலறையில் இருக்கக்கூடாத 5 பொருட்கள் என்ன? தரித்திரம் தரும் இந்த 5 பொருட்கள் சமையலறையில் இருந்தால் உடனே இடத்தை மாற்றி விடுங்கள்!

kitchen-broom
- Advertisement -

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக சமையல் கட்டில் நுழையும் பொழுது நல்ல ஒரு நேர்மறை ஆற்றல் இருக்க வேண்டும். அப்போது தான் அந்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயலாற்ற முடியும். சமையலறை என்பது மகாலட்சுமியும், அன்னபூரணியும் வாசம் செய்யும் இடமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் வீட்டின் மற்ற அறைகளை காட்டிலும், சமையலறை சுத்தமாக இருந்தால் அந்த வீடு செல்வ செழிப்புடன் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சமையலறையில் நீங்கள் கட்டாயம் வைக்க கூடாத 5 பொருட்கள் என்ன? இவற்றை வைப்பதால் தரித்திரம் ஏற்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

gas-stove

ஒவ்வொரு முறை சமையல் ஆரம்பிக்கும் பொழுதும் அடுப்பை அன்னபூரணி தாயாக நினைத்து விட்டு தொட்டு கும்பிட்டு ஆரம்பிக்கலாம். இதனால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் அன்ன குறை ஏற்படாது. மேலும் அரிசி அளக்கும் அளவையில் மட்டுமே அரிசியை அளந்து போட வேண்டும். அதற்காக பிளாஸ்டிக் டம்ளர், எவர்சில்வர் டம்ளர் என்று எதையாவது உபயோகிக்க வேண்டாம். அரிசி அளக்கும் படி அளவையிலும் அன்னபூரணி இருக்கின்றாள். எப்பொழுதும் அன்னத்தை வீணாக்காமல் இருக்க அளவை சரியாக அளந்து போட வேண்டும்.

- Advertisement -

நீங்கள் ஒரு நாள் முழுவதும் சமையல் செய்யும் கழிவுகளை அப்படியே சமையலறையில் வைத்திருக்கக் கூடாது. இது தரித்திரத்தை ஏற்படுத்தும். மேலும் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்கும். நிறைய பேருடைய வீட்டில் குப்பைத்தொட்டி சமையலறையில் தான் இருக்கும். இது முற்றிலும் தவறான ஒரு செயலாகும். குப்பை தொட்டி எப்பொழுதும் வெளியில் தான் வைத்திருக்க வேண்டும். சமையல் செய்யும் பொழுது அப்போதைய கழிவுகளை அப்போதைக்கே ஒரு பாத்திரத்தில் சேகரித்து உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும்.

dust-bin

அதேபோல் வீடு பெருக்கும் துடைப்பம், சமையல் அறையில் இருப்பது வறுமையை உண்டாக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. துடைப்பத்தை கூட பெரும்பாலும் சமையல் அறையில் வைப்பவர்கள் இருக்கிறார்கள். சமையலறையில் எதெல்லாம் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருக்கிறது என்றால் எப்படி அந்த இடத்தில் செல்வம் நிலைக்கும்?

- Advertisement -

சமையல் அறையில் மருத்துவம் சார்ந்த மருந்துகள் எதுவும் வைத்திருக்கக் கூடாது. சமையலறையில் இயற்கையாக கிடைக்கும் மருந்து பொருட்களுக்கு இடையே, செயற்கை மருந்து, மாத்திரைகள் இருப்பது ஒரு விதமான எதிர்மறை ஆற்றல் ஏற்படுத்தும். மருந்து, மாத்திரைகளை படுக்கையறையில் வைக்கலாம். சமையல் அறையில் வைத்துக் கொள்வது தவிர்ப்பது மிகவும் நல்லது.

medicine

வீட்டில் எப்படி உடைந்த கண்ணாடி பொருள் இருக்கக்கூடாது என்று கூறப்படுகிறதோ! அதேபோல சமையலறையில் உடைந்த பாத்திரங்கள் எப்பொழுதும் வைத்திருக்க கூடாது. நாம் அடிக்கடி உபயோகிக்கும் கண்ணாடி பொருட்கள், பீங்கான் பொருட்கள் அல்லது உடையக்கூடிய எந்த வகை சமையல் பொருட்ளாக இருந்தாலும் அதனை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். அதை ஒரு ஓரமாக அப்படியே போட்டு வைத்து இருந்தால் தரித்திரம் தான் ஏற்படும்.

- Advertisement -

steal-vessels3

அதுபோல சமையலறையில் எவர்சில்வர் பாத்திரங்கள் சிலவற்றில் விரிசல் விட்டிருக்கும். விரிசல் விழுந்த எவர்சில்வர் பாத்திரங்களை சமையலறையிலிருந்து வெளியேற்றி விடுங்கள். விரிசல் விழுந்த பாத்திரங்களை தேய்க்கும் பொழுது எரிச்சலாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் விரிசல் விழுந்த பாத்திரங்களை சமையலறையில் வைத்திருப்பது தரித்திரத்தையும் உண்டாக்கும். விரிசல் விழுந்த பாத்திரங்களை எல்லாம் சேகரித்து, புதிய பாத்திரமாக மாற்றி வாங்கிக் கொள்ளலாம். அல்லது மற்ற வெளி உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் சமையல் அறையில் மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் இப்படி மட்டும் செய்தால் பாவங்கள் நீங்கி, பணவரவு மேலும் மேலும் பெருகும் கட்டாயம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -