செலவில்லாத அழகை விரும்புவீர்களா நீங்கள். பொலிவிழந்த சருமத்தை 5 நிமிடத்தில் வெள்ளையாக்க, 5 ரூபாய் ரெமிடி!

face2
- Advertisement -

சில பேருக்கு அழகின் மீது அதிக ஆசை இருக்கும். ஆனால் பணம் காசு செலவு செய்ய மாட்டாங்க. செலவே செய்யாமல் அழகா வெள்ளையா இருக்கணும் அப்படின்னு நினைப்பாங்க. அப்படிப்பட்டவர்களுக்காக இந்த சுலபமான எளிமையான செலவில்லாத குறிப்பு. மிஸ் பண்ணாம படிச்சு பாருங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருந்திட்டுக்கள், சுருக்கம், முகப்பரு போன்ற பலவிதமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய சக்தி இதற்கு உண்டு. காசு செலவு இல்லை என்பதால் இதற்கு பலன் கிடைக்காது என்று குறைவாக எடை போட வேண்டாம்.

குறிப்பு 1:
இந்த குறிப்புக்கு நான் பயன்படுத்த போகும் பொருள் 2 உருளைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு நன்றாக துருவி உங்கள் கையை கொண்டு பிழிந்தால் அதிலிருந்து சாறு கிடைக்கும். தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுக்கக் கூடாது. உருளைக்கிழங்கை துருவி அதிலிருந்து வரும் சாறை மட்டும்தான் பிழிந்து எடுக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு கிடைத்தால் கூட போதும்.

- Advertisement -

அந்த உருளைக்கிழங்கு சாறுடன், 1/4 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சளை சேர்த்து நன்றாக கலந்து பேக் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேக்கை உங்கள் முகம் கழுத்துப் பகுதிகளில் போட்டு வட்ட வடிவில் மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட வேண்டும். உங்களுடைய முகத்தில் நிச்சயமாக பொலிவு கூடி இருக்கும். (சாதாரண மஞ்சள் தூள் கூட இந்த குறிப்புக்கு பயன்படுத்தலாம். ஆனால் சாதாரண மஞ்சள் தூள் லேசாக நிறம் முகத்தில் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

சாதாரண மஞ்சள் தூள் மிக குறைந்த அளவு சேர்த்து விட்டு, தேவைப்பட்டால் கொஞ்சமாக காய்ச்சாத பாலை அதில் ஊற்றி கலந்து கூட முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். வாரத்தில் இரண்டு முறை இந்த ப்ளீச் உங்களுடைய முகத்திற்கு செய்யும்போது முகம் படிப்படியாக வெள்ளையாக மாறத் தொடங்கிவிடும்.

- Advertisement -

குறிப்பு 2:
ஒரு சிறிய பவுல் எடுத்துக்கோங்க. அதில் கஸ்தூரி மஞ்சள் 1 ஸ்பூன், இதை கலக்க தேவையான அளவு ஆலோவேரா ஜெல், இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்தால் உங்களுக்கு ஒரு ஃபேஸ் பேக் கிடைத்திருக்கும். இதை முகத்தில் நன்றாக அப்ளை செய்து விட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி பாருங்கள் முகம் இன்ஸ்டன்ட் ஆக பொலிவு பெறும். ரொம்பவும் ட்ரையாக இருக்கும் ஸ்கின் சாஃப்ட்டாக பொலிவாக மாறிவிடும்.

இயற்கையாக கிடைக்கும் ஆலோவேரா ஜெல்லை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தும் சேர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் கலர் இல்லாத ஆலோவேரா ஜெல்லையும் இந்த குறிப்புக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் உங்களுடைய விருப்பம் தான். மேலே சொன்ன குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -