முகப்பரு, கரும்புள்ளி, கருவளையம், கருந்திட்டுக்கள், எது இருந்தாலும் 7 நாட்களில் அது கண்ணுக்குத் தெரியாமல் மறைய தொடங்கும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

face2
- Advertisement -

கரும்புள்ளி, கருந்திட்டு, முகப்பரு, கருவளையம், இதில் ஏதாவது ஒரு பிரச்சனை முகத்தில் இருந்தாலும் நம்முடைய முகத்தில் இருக்கும் அழகு குறைவாக காணப்படும். சில பேருக்கு இதில் எல்லா பிரச்சனையும் முகத்தில் இருக்கும். விலை அதிகமான கெமிக்கல் கலந்த நிறைய கிரீமை பயன்படுத்தி வந்தாலும், பலன் எதுவுமே இருக்காது. உங்கள் வீட்டில் இருக்கும் மஞ்சளும் கொத்தமல்லி தழையும் போதும். உங்கள் சரும பிரச்சனைக்கு 7 நாட்களில் தீர்வைப் பெற முடியும். வாங்க இந்த ரெமிடியை எப்படி நம்முடைய முகத்துக்கு பயன்படுத்துவது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.

இரண்டிலிருந்து மூன்று இனுக்கு கொத்தமல்லி தழைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பச்சை மஞ்சள் கிடைத்தால் அதில் இருந்து 2 இன்ச் அளவு மஞ்சளை எடுத்து தோல் சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் கழுவிய கொத்தமல்லி தழையும், வெட்டி வைத்திருக்கும் மஞ்சளையும் போட்டு கொஞ்சமாக ஒரு ஸ்பூன் தண்ணீர் விட்டு விழுது போல அரைத்து, இதிலிருந்து வடிகட்டி சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நமக்கு இந்த இரண்டு பொருட்களும் சேர்த்து அரைத்த சாறு மட்டும் தான் தேவை. (பச்சை மஞ்சள் இல்லை என்றால், கஸ்தூரி மஞ்சள் அல்லது சாதாரண மஞ்சள் பொடியை கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.)

- Advertisement -

ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாவை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன் அளவு உங்கள் தேவைக்கு ஏற்ப அலோ வெற ஜெல் சேர்த்து, தயாராக எடுத்து வைத்திருக்கும் கொத்தமல்லி மஞ்சள் சேர்த்து அரைத்து சாறை இந்த ஜெல்லுடன் சேர்த்து நன்றாக ஒரு ஸ்பூனை வைத்து கலக்கினால் முகத்துக்கு பயன்படுத்தப் போகும் லிக்விட் நமக்கு தயாராக கிடைத்திருக்கும். இதை ஒரு ஜெல் பக்குவத்தில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் தண்ணீர் போலவும் இருக்க வேண்டாம். ரொம்பவும் கெட்டியாகவும் வேண்டாம்.

இதை அப்படியே பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் ஏழுநாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். தினமும் இரவு தூங்கச் செல்லும் போது முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். அதன் பின்பு முகத்தை துடைத்துவிட்டு, தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஜெல்லை முகம் முழுவதும் அப்ளை செய்து 2 லிருந்து 3 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து விட வேண்டும். அதன் பின்பு இது அப்படியே முகத்தில் உலர்ந்துவிடும். இந்த ஜெல் இரவு முழுவதும் அப்படியே உங்களுடைய முகத்தில் இருக்கலாம். மறுநாள் காலை எப்போதும் போல எழுந்து குளிர்ந்த தண்ணீரில் கெமிக்கல் அதிகம் கலக்காத சோப்பை போட்டு முகத்தை கழுவிக் கொண்டால், முகம் பளிச்சென மாறும்.

- Advertisement -

தினந்தோறும் தொடர்ந்து இந்த ஜெல்லை முகத்தில் பயன்படுத்தி பாருங்கள். ஏழு நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளில் வித்யாசம் தெரியும். தினம் தோறும் பயன் படுத்தி வர கொஞ்சம் கொஞ்சமாக கருவளையம் முகப்பரு கருந்திட்டுகள் அனைத்தும் மறையத் தொடங்கும்.

எந்த இடத்தில் அதிகமாக கருவளையம் கருந்திட்டுக்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இந்த ஜெல்லை கொஞ்சம் திக்காக அப்ளை செய்து கொள்ளலாம். 13 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -