இந்தியா முழுவதும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும் 8 சிவன் கோவில்கள்

ner-kotil-ulla-sivalayangal1
- Advertisement -

சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் உள்ள கேதார்நாத்தும் கூட இந்த நேர்கோட்டிலே அமைந்துள்ளது. கிட்டதட்ட 1000 வருடங்களுக்கு முன்பு எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாத ஒரு கால கட்டத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில்கள் அனைத்தும் எப்படி ஒரே நேர்கோட்டில் வடிவமைக்கப்பட்டது என்பது நிச்சயம் வியப்பின் உட்சமாகவே உள்ளது.

பஞ்ச பூத ஸ்தலங்கள் :
நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்

- Advertisement -

கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை உள்ள இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள். இதற்கு இடையில் தான் எட்டு கோவில்களும் ஒரே தீர்க்கரேகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

நேர்கோட்டில் அமைத்துள்ள சிவாலயங்கள்:

- Advertisement -

1) கேதார்நாத் – கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)

2) காலேஷ்வரம் – காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067

- Advertisement -

3) ஸ்ரீ_காலஹஸ்தி – ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)

4) காஞ்சிபுரம் – ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)

5) திருவானைக்காவல் – ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)

6) திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)

7) சிதம்பரம் – நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)

8) ராமேஸ்வரம் – ராமநாத கோயில் (9.2881, 79.3174)

இது தவிர இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் அமைந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த கோவில்கள் அனைத்தும் ஏதோ எதேச்சையாக அமைக்கப்பட்டது போன்று தோன்றவில்லை. அனால் தொழில் நுட்பம் இல்லாத காலகட்டத்தில் எப்படி இவளவு கட்சிதமாக கோவில்கள் அமைக்கப்பட்டன என்ற ரகசியமும் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

- Advertisement -