IND vs AUS ODI : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா . இவர்கள் அணியில் இருப்பதால் வென்றே தீருவோம் – கோலி எச்சரிக்கை

Toss
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் முடிவு இந்த போட்டியின் முடிவில் தெரியும்.

Toss

டாஸ் போட்ட பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி பேசியதாவது : இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசவே விரும்பியது. ஏனெனில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியை முதலில் பந்துவீசி கட்டுப்படுத்துவோம் பிறகு சேஸிங்கில் நாங்கள் இன்று எங்களை நிரூபிப்போம். மேலும் இந்திய அணி சேஸிங்கில் சிறந்த அணி என்பது அனைவர்க்கும் தெரியும்.

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணியில் இருந்து சாஹல் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ஜடேஜா அணியில் இடம்பிடித்துள்ளார்.மேலும், ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷமி அணியில் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சாளரை சேர்ப்பதால் அணியின் பந்துவீச்சு பலப்படும் என்றே இன்றைய போட்டியில் ஷமியை சேர்த்தேன்.

Koli

இன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வெற்றிக்காக இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் அதனால் ஆட்டம் இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு சுவாரசியமாக அமையும்.

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -