- Advertisement -
Homeஜோதிடம்பொது பலன்குரு பலன் இருந்தால் மட்டும் தான் திருமணம் கைகூடுமா?

குரு பலன் இருந்தால் மட்டும் தான் திருமணம் கைகூடுமா?

- Advertisement -

* குரு, வருடத்துக்கு ஒரு முறை ராசி விட்டு ராசி இடம் பெயருவார். கோசாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் மட்டும், திருமணம் நடைபெற்று விடுமா? என்றால் உறுதியாக அதைச் சொல்ல முடியாது.

navagaraga

* கோசாரத்தில் இருக்கும் குரு, திருமணம் கைகூடி வர 20 சதவிகிதப் பலன்களையே தருவார். இதனால் சிலர் வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமூர்த்திக்கு மாலையிட்டு வணங்கியும், விளக்கு வழிபாடு என பரிகாரங்கள பல செய்தும் திருமணம் நிறைவேறவில்லையே என வருந்துபவர்களும் உண்டு.

- Advertisement -

* தசாபுக்தி அனுகூலம், கிரகங்கள் இருக்கும் இடம், கிரகப் பார்வை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இதனால் ஒருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்துத்தான் சொல்லவேண்டும்.

astro wheel* நமது ஜாதகப் பலன்கள் ஒருவரது ஜாதகத்தில் முக்கியமானவைகளாக தசா புத்தி பலன்களைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் கோசாரப்படி பார்க்கும்போது லக்னத்தை உங்கள் ராசியாக்கி, அதற்கு ராசிபலன் பாருங்கள். எனவே, திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் தசா புக்தி உதவினால்தான் அது நடைபெறும்.

astrology wheel

* நாம் பார்க்கும் வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போதும். அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான தசை நடந்தாலோ, குரு பார்வை இருந்தலோ, திருமணம் நடந்து விடும். கோட்சாரத்தைப் பார்ப்பதை விட தசாபுக்தி பலன்களைப் பார்ப்பதே நல்லது.

சற்று முன்