கல் உப்புடன் இந்த 2 பொருட்களை கலந்து வைத்தாலே போதும். நல்லது முன்வாசல் வழியாக ஓடி வரும். கெடுதல் பின் வாசல் வழியாக தெரித்து ஓடி விடும்.

uppu
- Advertisement -

என்ன செய்தும் உங்கள் வீட்டில் நல்லது மட்டும் நடக்கவே மாட்டேங்குது, என்பவர்கள் மட்டும் இந்த பதிவினை படித்தால் போதும். வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக பூஜை புனஸ்காரங்களை செய்வார்கள். கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வார்கள். தானங்களைச் செய்து வருவார்கள். மற்ற நல்ல காரியங்களையும் செய்து வருவார்கள். ஆனால் அவர்களுடைய வீட்டில் நல்லது மட்டும் நடக்க வாய்ப்பே இருக்காது. ஏதாவது ஒரு ரூபத்தில் தடங்கல் வரும். நல்லது நடக்கப் போகும் சமயத்தில் அந்த நல்லதை தட்டிப் பறித்துக் கொள்ளும்.

fight-1

மன நிம்மதி கெடும். வீட்டில் சந்தோஷம் இருக்காது. சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். உறவுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்காது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுடைய வீட்டில் இருந்தால், இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். சுத்தமான கல் உப்பை புதியதாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். பரிகாரம் செய்ய போகும் அன்றுதான் கல் உப்பை கடையில் இருந்து வாங்க வேண்டும்.

- Advertisement -

மண் அகல் தீபத்திலேயே கொஞ்சம் பெரிய அளவில் அகண்ட தீபம் என்று கிடைக்கும். அதை வாங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் மண் கிண்ணங்கள் சிறிய அளவில் இருந்தால் அதையும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த புதிய மண் கிண்ணத்தை வாங்கி தண்ணீரில் நன்றாக ஊற வைத்து கழுவி உலர வைத்துக் கொள்ளுங்கள்.

vilakku2

அந்த மண் கிண்ணத்தில் கல் உப்பைப் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த கல் உப்புக்குள் 1/2 ஸ்பூன் அளவு கஸ்தூரி மஞ்சள் பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். லேசாக உப்பு மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும். அந்த மஞ்சள் நிற கல் உப்பின் மேல் 11 மிளகுகளை, மேலே தெரியும் படி வைத்து விடுங்கள். கல் உப்பின் மேலே அப்படியே அடக்கி வைத்தால் மிளகு நிற்கும்.

- Advertisement -

தயார் செய்த இந்த மண் கிண்ணத்தை உங்களுடைய வீட்டில் வரவேற்பறையில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் வைக்கலாம். எல்லோர் கண்களுக்கும் தெரியும் படி வைத்தாலும் தவறு இல்லை. யார் கண்ணுக்கும் தெரியாமல் உயர்ந்த இடத்தில் வைத்தாலும் தவறு இல்லை. ஆக மொத்தத்தில் உப்பில், கஸ்தூரி மஞ்சளும் மிளகும் சேர்த்து உங்கள் வீட்டில் இருக்க வேண்டும்.

uppu

இந்த மண் அகல் கிண்ணத்தை உங்களுடைய வீட்டில் வைத்த பின்பு நிச்சயமாக நல்ல மாற்றத்தை உங்களால் உணரமுடியும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கசப்பான சம்பவங்கள் நடப்பது குறையும். படிப்படியாக உங்களுக்கு சந்தோஷம் வந்து குவியும். வீட்டிற்குள்ளே நல்லது நுழையும்.

Milagu benefits in Tamil

வீட்டிற்குள்ளே இருக்கக்கூடிய கெடுதல் பின்வாசல் வழியாக வெளியே செல்லும். ‘உடனே உங்களுடைய வீட்டில் பின் வாசல் இல்லை என்று சொல்லாதீர்கள்’. முன்னோர்கள் சொல்லுவார்கள் அல்லவா? வீட்டில் இருக்கும் கெடுதல் பின்வாசல் வழியாக ஓடி விடும் என்று! உங்களுடைய வீட்டில் பின் வாசல் இல்லை என்றாலும் கெடுதல் உங்களை விட்டு, உங்கள் பின் பக்கமாக போய் விடும். முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -