அரிசி மாவு வீட்டில் இருந்தால் அடிக்கடி சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இதே அரிசி மாவை வைத்து நம்முடைய முகத்தையும் பராமரித்துக் கொள்ளலாம் என்பது எவ்வளவு பேருக்கு தெரியும்? அரிசி மாவு சிறந்த ஸ்கிரப்பராக மட்டுமல்லாமல், முகத்தை இறுக செய்து இளமையையும் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. ஒரு ஸ்பூன் அரிசி மாவை எந்தெந்த வகைகளில் செலவில்லாமல் முகத்திற்கு பயன்படுத்தினால் எப்போதும் யங்காக இருக்கலாம் என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
நாம் சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய அரிசி, எந்த அரிசியாக இருந்தாலும் பரவாயில்லை, அதை இடித்து கிடைக்கும் மாவிலிருந்து பத்து பைசா செலவில்லாத அழகிய இளமையான சருமத்தை பெற முடியும். அரிசி மாவில் இருக்கும் சொரசொரப்பு தன்மை நம்முடைய முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகளை முதலில் வெளியேற்றக் கூடிய ஸ்க்ரப்பராக செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் அரிசி மாவை எடுத்து முகத்தில் தூவி லேசாக அழுத்தம் கொடுக்காமல் ஸ்க்ரப் செய்வது போல செய்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள், எண்ணெய் பிசுக்குகள், இறந்து செல்கள் அனைத்தும் வெளியேறும். பிறகு குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை அலசி விட்டால் முகம் பளிச்சன இருக்கும்.
பின்னர் இதே அரிசி மாவை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு குழைய கரைத்துக் கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் தடவி ஒரு 15லிருந்து 20 நிமிடம் ஊற வைத்தால் முகத்திற்கு நல்ல ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். முகம் இறுகி முக சுருக்கங்கள் மறையும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை அலம்பி விடுங்கள். தொட்டாலே சருமம் மிருதுவாக இருக்கும் அந்த அளவிற்கு எபக்ட்டிவ் ஆன இந்த ஒரு பேக் வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டே பயன்படுத்தி பயனடையலாம்.
முகத்தில் முகப்பருக்கள் அதிகம் இருப்பவர்களுக்கு மற்றும் கரடு முரடான முகம் மிருதுவான தன்மை அடைய ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் ஒரு ஸ்பூன் முல்தானிமட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு, தேவையான அளவு ரோஸ் வாட்டர் மற்றும் கால் ஸ்பூன் கிரீன் டீ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். கெட்டியாக பேக் போல கலந்து இதை முகம் முழுவதும் தடவி ஊற விட்டு விட வேண்டும்.
அரை மணி நேரம் நன்கு ஊறிய பின்பு முகத்தை அலசி பாருங்கள், உங்களுடைய முகம் எவ்வளவு கரடு முரடாக இருந்தாலும், மேடும் பள்ளமுமாக இருந்தாலும், குழிகள் அதிகம் இருந்தாலும், முகப்பருக்கள் வலியுடன் கூடியதாக பெரிது பெரிதாக இருந்தாலும் ரொம்ப சுலபமாக மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். இதை கண்டிப்பாக வாரம் இரண்டு முறை ட்ரை பண்ணுங்க.
அப்போது தான் ஒரு மாதத்தில் நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட்டு உங்களுடைய முகத்தில் கிடைக்கும். இதனுடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய சருமத்திற்கு அதிக அளவு செயற்கை விஷயங்களை பயன்படுத்தினால், இரவு தூங்கும் முன்பு கொஞ்சம் கற்றாழை ஜெல்லை அப்ளை செய்து கொண்டு தூங்குங்கள். இதனால் சருமம் டேமேஜ் ஆகாமல் இருக்கும்.