வரக்கூடிய ஆபத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள சொல்லவேண்டிய 1 வரி மந்திரம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் ஆபத்து நம்மை நெருங்கவே நடு நடுங்கும்.

manthiram
- Advertisement -

ஆபத்து என்பது எந்த ரூபத்தில் எப்போது யாருக்கு வரும் என்று சொல்லமுடியாது. ஆனால் எதிர்பாராத சமயத்தில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணி விட்டு போகக் கூடிய ஒன்று தான் இந்த ஆபத்து. ஆபத்தை கண்டு பயந்து ஒடுங்கி வீட்டிலேயே அமர்ந்து கொண்டிருந்தாலும் இந்த பூமியில் வாழ்வதில் எந்த ஒரு அர்த்தமும் கிடையாது அல்லவா? அவரவர் வேலைகளை அவரவர் செய்தால்தானே நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும்.

உதாரணத்திற்கு நாம் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோம். நாம் சரியான பாதையில் விதிமுறைகளைக் கடைப்பிடித்து தான் செல்வோம். ஆனால் நம் எதிரே வருபவரோ, பின்னே வருபரோ விதிமுறைகளை பின்பற்றாமல் வந்து நம் மீது இடித்து விட்டால் ஆபத்து நமக்கு தானே. அந்த இடத்தில் நம்முடைய விதியும் கொஞ்சம் விளையாடி தான் இருக்கின்றது.

- Advertisement -

சரி, இந்த ஆபத்திலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சிறப்பான மந்திரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த மந்திரத்தை முதலில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 1,008 முறை உங்கள் வாயால் உச்சரித்து சித்தி செய்துகொள்ள வேண்டும். அதன் பின்பு தினந்தோறும் காலை எழுந்தவுடன் இந்த மந்திரத்தை 3 முறை, 11 முறை என்ற ஒற்றை படை கணக்கில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் உங்கள் வாயால் உச்சரிக்கலாம்.

வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பு, வண்டி வாகனங்களை வீட்டில் இருந்து முதன் முறையாக எடுப்பதற்கு முன்பு, நீண்ட தூர பயணத்திற்கு செல்லும்போது, இந்த மந்திரத்தில் ஒரே ஒரு முறை உச்சரித்தால் கூட உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் அமைந்துவிடும். நீங்கள் தனியாக இருக்கும்போது உங்களை காப்பாற்றும் ஒரு ஆயுதமாக இந்த மந்திரம் செயல்படும்‌‌. சரி அது என்ன மந்திரம். பெரிய அளவில் இருக்குமோ என்ற பயம் வேண்டாம். உங்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் போகும் உங்களுக்கான அந்த ஒரு வரி மந்திரம் இதோ.

- Advertisement -

ஓம் ஜூம் சக, சக ஜூம் ஓம்.
இவ்வளவு தாங்க. ஒரு நிமிடத்தில் இதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் எந்த கிழமையாக இருந்தாலும் சரி, முதலில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, நீங்கள் பூஜை அறையில் தீபத்திற்கு முன்பாக அமர்ந்து, இந்த மந்திரத்தை 1008 முறை தொடர்ந்து உச்சரித்து சித்தி செய்து கொண்டால்தான் மந்திரத்தின் மூலம் உங்களால் பலனை பெற முடியும்.

பெண்களுக்கு பேருந்தில் செல்லும்போது எதிர்பாராத விதத்தில் யார் மூலமாவது ஆபத்து வரும்போது கூட, இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கும். எந்த இடத்தில் உங்களுக்கு மனபயம் அதிகரிக்கின்றதோ, ஆபத்து வருவது போல தோன்றுகின்றதோ, அப்போது இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். உங்களுக்கே உள்ளுணர்வு சொல்லும். அப்போது புரிந்து கொள்வீர்கள் மந்திரத்தின் சக்தியை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்தி பலன் அடையலாம் என்று கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -