அடுத்தவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முகம் அழகாக மாற வேண்டுமா? வெறும் 3 நாட்களில் அந்த அதிசயம் நடக்கும். இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.

face10
- Advertisement -

அழகா கலரா இருக்கணும்னு ஆசைப்படாதவங்க இந்த உலகத்துல யாரும் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதல் எந்த பாராபட்சமும் கிடையாது. பெண்கள், ஆண்கள் என அனைவருமே தங்களை அழகாகவும், நல்ல நிறத்துடனும், காட்டிக்கொள்ள அதிக அளவில் மெனக்கெடுக்கிறார்கள். இதற்காக அழகு நிலையங்களுக்கு சென்று அதிக அளவில் பணத்தையும் வாரி இறைக்கிறார்கள். இனி இதற்கெல்லாம் அவசியமே இல்லை, இந்த ஒரே ஒரு ஆளி விதை இருந்தால் போதும் உங்களை நல்ல நிறமாகவும், சருமத்தை மென்மையாகவும் மாற்றி உங்களை பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு உங்களின் அழகை இது அதிகப்படுத்தி விடும்.

இதற்கு ஆளி விதை – ஒன்றை ஸ்பூன், ஆரஞ்சு பழத்தோல் – பாதி பழத்தின் தோல் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு பழ தோலை பச்சையாக சேர்த்துக் கொள்ளலாம். காய வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. இதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் ஒன்றரை ஸ்பூன் அளவுக்கு இந்த ஆளி விதைகளையும், ஆரஞ்சு பழ தோலையும் இத்துடன் சேர்த்து ஒரு பதினைந்து நிமிடம் வரை கொதிக்க விட்டால், இந்த தண்ணீர் ஜெல் போல மாறிவிடும்.

- Advertisement -

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி சிறிது நேரம் அப்படியே ஆற விடுங்கள். இந்த ஜெல்லை ஒரு சுத்தமான மெல்லிய வெள்ளைத்துணியில் ஊற்றி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டியில் ஊற்றியவுடன் இது வந்து விடாது, கொஞ்சம் அழுத்தி தான் இந்த ஜெல்லை எடுக்க வேண்டும். இப்படி அழுத்தும் போது ஜெல் சூடாக இருக்கும். இதனால் கை சுட்டு விட வாய்ப்பு அதிகம் அதனால் ஜெல் ஆறிய பிறகு வடி கட்டுவதே நல்லது.

இதை உபயோகிக்கும் முன் உங்கள் முகத்தை ஒரு முறை சாதாரண தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பிறகு ஒரு காட்டன் துணி வைத்து லேசாக துடைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஜெல்லை தேய்த்து முகத்தை மசாஜ் செய்யுங்கள். பிறகு ஒரு பத்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரண தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விடுங்கள்.

- Advertisement -

இது முகத்திற்கு மட்டுமல்லாமல் உங்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் கறுமைகளையும், அக்குள் பகுதிகளில் உள்ள கருமைகளையும், இதைக்கொண்டு சரி செய்து விடலாம். முகத்தை தவிர, உடம்பில் வேறு இடங்களில் போடும்போது இரண்டு அல்லது மூன்று கோட்டிங் இது போல போட்டுக் கொள்ளுங்கள். ஏனென்றால் முகத்தின் தோலை விட இந்த கழுத்து, அக்குள் பகுதியில் உள்ள தோல் சற்று கடினமாக இருக்கும். இந்த ஜெல்லை தொடர்ந்து தேய்த்து வர நல்ல கலர் கிடைக்கும்.

இந்த ஜெல் தயார் செய்த இரண்டு நாட்கள் வரை வெளியில் வைத்தாலும் கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் வைக்க தேவையில்லை. ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் வரை இந்த ஜெல் கெட்டுப் போகாது. தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பேக்கை போட்டு வர நம்ப முடியாத வித்தியாசம் உங்கள் முகத்தில் வரும். பிறகு வாரத்தில் இரண்டு நாள் இந்த ஜெல்லை முகத்திற்கு போட்டு வர வேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நீங்களும் ரொம்ப ரொம்ப அழகா மாறிடலாம்.

- Advertisement -