நாளை 21/7/2023 முதல் ஆடி வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்க மறக்காதீர்கள்! செல்வம் கொழிக்க ஆடி வெள்ளியில் செய்ய வேண்டியவை?

mari-amman-kal-uppu
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே வீட்டிலும், கோவில்களிலும் இறை வழிபாடுகளில் அதிக அளவிற்கு ஆர்வம் செலுத்த துவங்கி வருகிறோம். அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த ஆடி மாதத்தில் முதல் வெள்ளி நாளை 21/7/2023 அன்று வருகிறது. ரொம்பவும் விசேஷமான இந்த நாளில் இந்த ஒரு பொருளை வாங்கும் பொழுது வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படியான பொருள் என்ன? எப்பொழுது அதை எப்படி வாங்க வேண்டும்? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் குறித்த பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.

ஆடி முதல் வெள்ளியில் மகாலட்சுமிக்கு உரிய இந்த ஒரு பொருளை நீங்கள் வாங்கி வீட்டில் வைப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணு பகவானுக்கு அருகில் உள்ள மகாலட்சுமிக்கு கடலில் இருக்கக்கூடிய உப்பு என்றால் அவ்வளவு விருப்பமாம்! கடல் முழுவதும் வியாபித்து இருக்கும் இந்த உப்பில் மகாலட்சுமியின் ஸ்வரூபம் இருக்கிறதாம்.

- Advertisement -

அதனால் தான் இந்த ஒரு உப்பிற்கு இவ்வளவு மகத்துவம் வாய்ந்த பலன்கள் இருக்கிறது. உப்பு குறையாத வீட்டில் செல்வமும் குறையாது என்பது ஐதீகம். அப்படிப்பட்ட இந்த உப்பை பயன்படுத்துபவர்கள் கல் உப்பாக பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும் நல்லது. தூள் உப்பை விட கல் உப்பு தான் சிறந்தது மற்றும் கலப்படம் இல்லாதது.

கல் உப்பை வெள்ளிக்கிழமைகளில் வாங்கினால் நல்லது என்று கூற கேட்டிருப்போம், அதிலும் குறிப்பாக ஆடி முதல் வெள்ளியில் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்திலிருந்து நீங்களே உங்களுடைய கைகளால் கடைக்கு சென்று காசு கொடுத்து கல் உப்பு பாக்கெட் ஒன்றை வாங்கி வைத்து அதை வீட்டில் இருக்கும் சமையல் அறையில் உள்ள உப்பு ஜாடியில் நிரப்பி விட வேண்டும். உப்பு நிரப்புவதற்கு எப்பொழுதும் பீங்கான் ஜாடியை அல்லது மண் ஜாடியை பயன்படுத்துவது தான் நல்லது.

- Advertisement -

பிளாஸ்டிக்கில் போட்டால் உப்பு நீர் விடுவது போல ஆகிவிடும், இதனால் செல்வம் குறையும். அதே போல எவர்சில்வர் டப்பாவில் நீங்கள் உப்பு போட்டு வைத்தால் அடியில் துரு பிடிக்க ஆரம்பித்து விடும், இது குடும்பத்திற்கு நல்லது அல்ல! எனவே இதற்கென தனியாக ஒரு ஜாடியை வைத்து அதை அடுப்பிற்கு பக்கத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும். காலம் காலமாக நம் முன்னோர்கள் இப்படித்தான் அடுப்பங்கரையில் அடுப்பிற்கு அருகிலேயே கல் உப்பை ஜாடியில் வைத்து பயன்படுத்தினர். அதே மாதிரி உப்பை எடுக்கும் பொழுது கைகளால் தான் எடுக்க வேண்டும், கரண்டி எதுவும் பயன்படுத்தக்கூடாது.

இதையும் படிக்கலாமே:
நாளை ஆடி மாதம் வெள்ளிக்கிழமை துர்கை அம்மனை இந்த மந்திரத்தை சொல்லி இப்படி வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியம் யாவும் நினைத்த வண்ணம் நிச்சயம் நிறைவேறும்.

பெண்களுடைய கைகளில் உப்பை எடுத்து அளவாக போட்டு சமைக்கும் பொழுது அதன் ருசியே அலாதியானதாக இருக்கும். இப்படிப்பட்ட இந்த கல் உப்பை ஆடி முதல் வெள்ளியில் வாங்க மறக்காதீர்கள்! அதே போல இந்த ஆடி வெள்ளியில் சிறு தங்கம் வாங்குவதும் மென்மேலும் தங்கம் சேர வழி வகுக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. தங்கம் வாங்க முடியாதவர்கள் அதற்கு இணையாக இருக்கக்கூடிய மஞ்சள் கிழங்கை வாங்கி வைத்து பூஜைகளை துவங்கலாம். இதனாலும் மென்மேலும் செல்வங்களும், பொன் நகைகளும் சேரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -