நாளை, கோடி செல்வத்தைத் தேடித் தரும் ஆடி பௌர்ணமி. தீர்க்க முடியாத கடனில் இருந்து வெளிவர இந்த பரிகாரத்தை செய்ய மறக்காதீங்க.

aadi-pournami
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே அம்பாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளின் சிறப்பை பற்றி சொல்ல வேண்டுமா என்ன. இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கக்கூடிய நாள் இது. இந்த நாளில் அம்பாள் வழிபாடு செய்வது மிக மிக நல்லது. குறிப்பாக நாளை வீட்டில் இருக்கும் பெண்கள் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். நாளைய தினம் கஷ்டங்கள் தீர அம்மனை எவ்வாறு வழிபாடு செய்வது என்பதை பற்றியும், கடன் தீர சந்திர பகவானை நினைத்து என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும், ஆன்மீக ரீதியான, தாந்திரீக ரீதியான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் விரிவாக தெரிந்து கொள்ள போகின்றோம்.

ஆடி பௌர்ணமி ஆன்மீக ரீதியான அம்மன் வழிபாடு:
நாளைய தினம் பெண்கள் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக தலைக்கு குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி வைத்துவிட்டு அம்மனை வணங்கி இந்த பௌர்ணமி நாளை தொடங்க வேண்டும். விரதம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாது என்பவர்கள் வயிறார சாப்பிட்டும் இந்த பூஜையை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

நேரம் கிடைக்கும் போது பௌர்ணமி நாளன்று ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளைய தினம் மாலை 6:00 மணிக்கு முன்பாக ஒரு முறை சுத்தமாக குளித்து விடுங்கள். அதன் பின்பு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்மனுக்கு நிவேதனமாக ஏதாவது ஒரு பிரசாதம், முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து வைத்து தீபம் ஏற்றி குலதெய்வத்தையும், அம்பாலையும் வேண்டிக் கொண்டு மனதார குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

உங்களுடைய குடும்பத்திற்கு அந்த அம்பாளின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும். இந்த வழிபாட்டை செய்து முடித்துவிட்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு வீட்டில் தீராத கஷ்டம் இருக்கிறது குறிப்பாக வீட்டில் இருப்பவர்களுக்கு திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லை, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதில் தடை என்பவர்கள் நாளைய தினம் அம்பாள் கோவிலுக்கு சென்று வளையல் தானம் கொடுக்க வேண்டும். அம்பாளுக்கு விருப்பமான சிவப்பு, பச்சை, மஞ்சள் இந்த மூன்று வண்ணங்களில் உங்களால் முடிந்த வளையலை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய வளையல்களை அம்மன் பாதங்களில் வைத்து பூஜை செய்துவிட்டு, அந்த வளையலை எடுத்து கோவிலுக்கு வரக்கூடிய பெண் பக்தர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இந்த வளையல் தானம் உங்களுடைய குடும்பத்தில் சுப காரியத் தடையை நீக்கும். குடும்பத்தில் ஏதேனும் தீராத கஷ்டங்கள் துயரங்கள் இருந்தால் அதை சரி செய்து உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் செல்வ செழிப்போடு சந்தோஷமாக வாழ்வதற்கு உண்டான வழியையும் காட்டித்தரும்.

பௌர்ணமி அன்று சந்திர பகவானை நினைத்து கடன் தீர செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்:
இந்த பரிகாரத்தை ஆண்கள் பெண்கள் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். மாலை 6.00 மணிக்கு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். உங்கள் வீட்டிற்கு வெளியே சந்திர தரிசனம் கிடைக்கக்கூடிய இடத்தில் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யுங்கள். மாலை சந்திரம் உதயமான பின்பு, 7.00 மணிக்கு ஒரு தாம்பூல தட்டில் ஒரு மஞ்சள் நிற துணியை விரித்து வைத்து விட்டு, அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1 கைப்பிடி கல் உப்பு, 1 ரூபாய் நாணயம், துளசி இலையை வைத்துவிட்டு சந்திர பகவானை பார்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குலதெய்வத்தையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். 5 லிருந்து 10 நிமிடங்கள் தரையில் அமர்ந்து தியான நிலையில் முழு மனதோடு சந்திர பகவானை வேண்டி இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டும். மனதில் ஒரு துளி கூட சஞ்சலம் இருக்கக் கூடாது.

- Advertisement -

வேண்டுதலை முடித்துவிட்டு இந்த மஞ்சள் முடிச்சை ஒரு மூட்டையாக கட்டி அப்படியே நிலை வாசல் படியில் கொண்டு வந்து மாட்டி விடுங்கள். பிறகு கடனை அடைப்பதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் பௌர்ணமி வரை அந்த முடிச்சு நிலை வாசலிலேயே இருக்கட்டும். அடுத்த மாதம் பௌர்ணமிக்கு முந்தைய நாள் இந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் பொருட்களை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து ஏதாவது ஒரு கோவிலில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

கடன் பிரச்சனை தீரும் வரை மாதம் மாதம் பௌர்ணமி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் படிப்படியாக உங்களுடைய கடன் சுமை குறைந்து கொண்டே வரும். இது சுலபமான தாந்திரீக பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்தால் கோடி ரூபாய் கடன் கூட சுலபமாக அடைவதற்கு உண்டான வழியை அந்த சந்திர பகவான் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார்.

அதிலும் நாளை ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினம். இந்த பிரபஞ்சமே நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட தினத்தில் நீங்கள் வைக்கக்கூடிய வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நாளை வரக்கூடிய இந்த அற்புதம் வாய்ந்த பௌர்ணமி தினத்தை அனைவரும் பயன்படுத்தி பலன் அடைய அந்த அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -