பூஜை அறையில் இந்த வேர் இருந்தால் நீங்களும் நிச்சயம் பணக்காரர் ஆகலாம். நஷ்டம் நம்மை கண்டாலே நடுங்கி ஓடிவிடும்.

gajalakshmi-cash
- Advertisement -

கடின உழைப்பும், விடா முயற்சியும் பணம் சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளும் எவர் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் நிச்சயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் பணக்காரர் ஆவார்கள். இது நிதர்சனமான உண்மை. இவ்வளவு இருந்தும் முயற்சிகளில் தோல்வி, கடின உழைப்பின் மூலம் பணம் கிடைக்கவில்லை, குறிக்கோள் இருந்தும் அதில் வெற்றி காண முடியவில்லை, என்பவர்கள் முயற்சிகளில் வெற்றிக்கான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, இப்படி சில தாந்திரீக ரீதியான பரிகாரங்களை முயற்சி செய்து பார்ப்பதிலும் தவறு ஒன்றும் கிடையாது. இப்படிப்பட்ட பரிகாரங்கள் உங்களை சுற்றி இருக்கக் கூடிய நெகட்டிவ் எனர்ஜியை கட்டுப்படுத்தி, உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் கெட்ட நேரத்தை சரி செய்வதற்கு எடுக்கக்கூடிய ஒரு சிறிய முயற்சிதான். நம்பிக்கை இருந்தால் இந்த சிறிய பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய முன்னேற்றத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

நீங்களும் பணக்காரராக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். பணம் சேர்க்க முயற்சி செய்கிறீர்கள். ஆனால் தொழிலில் தடை இருக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் வருமானம் சரியாக கிடைக்கவில்லை. கடன் பிரச்சனை உள்ளது என்பவர்கள் பூஜை அறையில் இந்த ஒரு வேர் வைத்து தினம்தோறும் வழிபாடு செய்து வாருங்கள்.

- Advertisement -

நீங்கள் பூஜை அறையில் வைக்க வேண்டிய வேர் ஆலமர விழுது. ஆலமரத்தின் அடியில் இருக்கக்கூடிய வேர் கிடையாது. ஆல மரத்தில் விழுது இருக்கும் அல்லவா, அந்த விழுது கீழே விழுந்தால் அதிலிருந்து ஒரு ஆலமரம் வளரும். அந்த விழுது நமக்குத் தேவை. குறிப்பாக இந்த ஆலமர விழுதை அமாவாசை அல்லது பௌர்ணமி தினத்தன்று  நீங்கள் மரத்திலிருந்து எடுக்க வேண்டும்.

இந்த இரண்டு நாளில் இந்த பிரபஞ்சத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அந்த சக்தியை படர்ந்து விரிந்து இருக்கக்கூடிய ஆலமரம் தன்னகத்தே ஈர்த்து இருக்கும். அப்போது ஆலமரத்து விழுதை எடுப்பது மிகவும் நல்லது. ஆலமரத்திலிருந்து எடுக்கப்பட்ட விழுதை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு முறை சுத்தமான தண்ணீரில் கழுவி நிழலில் உலர வைத்து விடுங்கள். ஒரு வெள்ளை நிற துணியை மஞ்சள் தண்ணீரில் நனைத்து அதையும் காய வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆலமர விழுதை இந்த மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கட்டி பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். தினமும் காலையில் எழுந்து விளக்கு ஏற்றி இறை வழிபாடு செய்யும்போது இந்த ஆல மர விழுதை இரண்டு கைகளிலும் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டால் போதும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். லாபம் பெருகும். நஷ்டம் உங்கள் பக்கத்தில் வராது.

அந்த காலத்தில் எல்லாம் ஒவ்வொரு கிராமங்களிலும் கட்டாயமாக ஒரு ஆலமரம் இருக்கும். அந்த ஊர் பெரியவர்கள் ஏதாவது ஒரு பஞ்சாயத்து, தீர்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் அந்த ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்து தான் ஆலோசனை நடத்துவார்கள். ஆலமரத்துக்கு அடியில் நிழல் இருக்கும் என்பது ஒரு பக்கம் இருக்க, ஆலமரம் நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி எந்த ஒரு எதிர்மறையான எண்ணங்களையும் கொண்டு வந்து சேர்க்காமல் நடுநிலைமையான தீர்ப்பை வழங்கக்கூடிய ஆற்றலையும் கொடுக்கக் கூடியது என்பதும் ஒரு நம்பிக்கையாக இருந்து வந்தது. நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்விலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -