நாளை(13/7/2022) ஆனி மாத பௌர்ணமி! இந்த மாலை சாற்றி மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ மழை பொழியும் தெரியுமா?

pournami
- Advertisement -

ஆனி மாத பௌர்ணமி ரொம்பவே விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த 2022 சுபகிருது வருடத்தின் ஆனி மாத பௌர்ணமி, நாளை புதன் கிழமையில் வர இருக்கிறது. இந்த நாளில் மகாலட்சுமி தேவியை எப்படி வழிபட்டால் நமக்கு செல்வ மழை பொழியும்? மகாலட்சுமிக்கு உகந்த இந்த மாலையை சாற்றி வழிபட்டால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

pournami

ஆனி மாத பௌர்ணமி மட்டுமல்லாமல், எல்லா பௌர்ணமியிலும் பொதுவாக நல்ல விஷயங்களை செய்யலாம். நாளை முகச் சவரம் செய்வது, முடி வெட்டுவது, மொட்டை போடுவது, நகம் வெட்டுவது போன்றவற்றை கட்டாயம் செய்யக்கூடாது. முடிந்தவரை சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது ரொம்பவே நல்லது. பௌர்ணமி மாதத்தில் பிரபஞ்சத்தின் சக்தி அதிகரித்து காணப்படும். இந்நாளில் நாம் வேண்டும் வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்கிற ஐதீகமும் உண்டு. அதனால் தான் பெரும்பாலான பரிகாரங்கள் பௌர்ணமி நாட்களில் செய்யப்படுகின்றன.

- Advertisement -

பௌர்ணமியில் கிரிவலம் வருவது ரொம்பவே விசேஷமானது. நிலவின் ஒளி நம் மீது பட நம் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் யாவும் தீரும். இந்நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். பௌர்ணமியில் வீடு கட்டுவது, சுப காரியங்கள் செய்வது, வீடு புதுப்பிப்பது போன்றவற்றை செய்யலாம். மேலும் இந்நாட்களில் மௌன விரதம் மேற்கொள்வது ரொம்பவே நல்லது. தேவையற்ற அசுப வார்த்தைகளை பிரயோகிக்க கூடாது. இந்நாளில் சுப வார்த்தைகளை பிரயோகப்படுத்தி இறைவனை நினைத்து தியானம் மேற்கொண்டால் நாம் ஒரு வருடம் தவம் செய்வதற்கு சமமாகும்.

kolam1

பௌர்ணமி நாளில் காலையிலேயே வீடு முழுவதும் சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து, குளித்து சுத்தப்படுத்தமாகி நீங்கள் வாசலில் வண்ண கோலங்கள் வரைவது, தாமரை பூ கோலம் இடுவது அல்லது தெய்வீக கோலங்கள் வரைவது ரொம்பவே நல்ல பலன்களை கொடுக்கும். இந்நாளில் மகாலட்சுமி உங்கள் வீட்டிற்கு மனம் மகிழ்ச்சியுடன் வருவதற்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் நீங்கள் செய்யலாம். மகாலட்சுமியின் மனம் குளிர செய்ய அவளுக்கு பிடித்தமான இந்த ஒரு பொருளால் மாலையை கட்டி சாற்றுங்கள்.

- Advertisement -

நல்ல வாசத்திற்கு பெயர் போன மூலிகை பொருளாக இருக்கக்கூடிய ஏலக்காய் தான் அந்த பொருள் ஆகும். சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஏலக்காயை பயனுள்ள வகையில் மகாலட்சுமிக்கு மாலை போல மஞ்சள் நூலால் கோர்த்து சாற்றுங்கள். பின்னர் மகாலட்சுமிக்கு உரிய நைவேத்தியங்கள் படைத்து, இனிப்பு பண்டங்கள் வைத்து, குத்து விளக்கு இரண்டில் ஐந்து முகத்திலும் 5 திரி இட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அதே போல என்னதான் குத்து விளக்கு, காமாட்சி அம்மன் விளக்கு போன்றவற்றை ஏற்றினாலும் பௌர்ணமி அன்று ஒரு அகல் விளக்காவது பூஜை அறையில் எரிய வேண்டும்.

elakkai-maalai

அதே போல தலைவாசலிலும் இரண்டு அகல் விளக்குகளை இருபுறமும் வைத்து இரண்டு திரிகளை போட்டு தீபத்தை நேச்சுடர் ஆக எரிய விட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் யாவும் நீங்கும். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும். கடன் தொல்லைகள் தீரும் என்கிற ஐதீகம் உண்டு. மாலை ஆறு மணிக்கு மேல் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. அதே போல கடன் நீங்க கடன் தொகையிலிருந்து ஒரு பகுதியை அன்றைய நாள் 6 மணிக்குள் கொடுத்து விட்டு வரலாம். இதனால் விரைவில் கடன் அடையும் என்கிற ஐதீகமும் உண்டு. இது போல எண்ணற்ற பலன்களை தரக்கூடிய நாளைய ஆனி மாத பௌர்ணமியை தவற விட்டு விடாதீர்கள்.

- Advertisement -