இந்த 1 பொருளை நீங்கள் வீட்டில் அதிக அளவில் செலவு செய்தால் பண பற்றாக்குறை என்பதே வராதாம் தெரியுமா?

temple-kirambu
- Advertisement -

ஆன்மீகத்தில் ஒரு சில பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை உண்டு. இந்த பொருட்களின் வாசம் மகாலட்சுமிக்கு ரொம்பவும் பிடித்தமானதாக இருக்கிறது. இதனால் இந்த வாசம் நிறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் செல்வம் கொழிக்கும் என்கிற ஐதீகம் உண்டு. அந்த வகையில் இந்த ஒரு பொருளை நம் வீட்டில் அதிக அளவில் செலவு செய்யும் பொழுது பணம் பற்றாக்குறை என்பது ஏற்படாதாம். அப்படியான பொருள் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கிராம்பு என்பது ஒரு வகையான மூலிகை பொருள் ஆகும். பாரம்பரிய சமையலில் அதிகம் சேர்க்கப்பட்டு வந்த இந்த கிராம்பு மருத்துவ குணங்கள் நிறைந்ததாக இருக்கிறது. இது ருசியை கூட்ட மட்டும் அல்லாமல், நல்ல ஒரு மணத்தையும் கொடுக்கிறது. இதனால் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிறைய பிரச்சனைகள் தீர்கிறது. ஆரோக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீகத்திலும் பெரும் பங்கு வகிக்கும் இந்த கிராம்பு மகாலட்சுமியின் இஷ்டமான பொருட்களில் ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை பூஜைகளில் கிராம்பு மாலை சாற்றி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும் என்று குறிப்புகள் உள்ளன. கிராம்பை பூ காட்டுவது போல மாலையாக கோர்த்துக் கொள்ள வேண்டும். 108 கிராம்புகளை கொண்டு கட்டப்பட்ட மாலையை வெள்ளிக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமிக்கு போட்டு தூபம் காண்பிக்க குடும்பத்தில் இருக்கும் வறுமையெல்லாம் நீங்கி செல்வங்கள் குறிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க கிராம்பை வீட்டில் எப்பொழுதும் அதிக அளவில் செலவு செய்ய வேண்டும். கிராம்பை சமையலில் அதிகம் சேர்க்கலாம். கிராம்பினால் ஏற்படக்கூடிய நன்மைகள் நமக்கு நிறைய கிடைக்கும். இனிப்பு வகைகளில் கொஞ்சம் கிராம்பை எப்பொழுதும் சேர்த்து செய்யும் பொழுது அதன் வாசம் ஆளையே தூக்கி சாப்பிட்டு விடும். குறிப்பாக லட்டு பிடிக்கும் பொழுது கிராம்பு சேர்ப்பது உண்டு. கிராம்பு பெருமாள் கோவில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவது உண்டு. இதனால் தெய்வீக அருளை பெற முடியும் என்பதும் உறுதியாகிறது எனவே நீங்கள் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் வைக்கும் தண்ணீரில் ஒன்று, இரண்டு கிராம்புகளை எப்பொழுதும் போட்டு வைத்திருங்கள்.

- Advertisement -

இந்த பஞ்ச பாத்திர தண்ணீரை எப்பொழுதும் வீணாக்காமல் பூஜை முடிந்த பின்பு வீட்டில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து சாப்பிட்டு விட வேண்டும். எனவே பஞ்ச பாத்திரத்தில் வைக்கப்படும் தீர்த்தத்தை வெறும் தண்ணீராக மட்டுமல்லாமல், அதில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, துளசி இலைகள் போன்றவற்றை போட்டு வைக்கலாம். ஆரோக்கியத்திற்கு அருமருந்தாக செயல்படும் இந்த கிராம்பை சமையலிலும் அதிகம் சேர்க்க வேண்டும். மற்ற மசாலா பொருட்களை விட கிராம்பை ஒன்றிரண்டு கூடுதலாக சேர்ப்பதால் பிரச்சனை ஒன்றும் இல்லை.

கிராம்பு கொண்டு செய்யப்படும் உணவுப் பொருட்களை அடிக்கடி செய்தால் நம்முடைய பல், ஈறு பிரச்சனைகள், தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள், ஆஸ்துமா, சிறுநீரகக் கோளாறுகள் போன்றவையும் நீங்கும். கிராம்பு சேர்க்கப்பட்ட நீரை அடிக்கடி பருகி வர உடல் சுத்தம் அடையும். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இந்த கிராம்பை எப்பொழுதும் பணம் இருக்கும் இடங்களில் எல்லாம் போட்டு வையுங்கள். இதன் வாசம் வீச வீச உங்களுடைய எண்ண அதிர்வலைகளுக்குள் மாற்றங்கள் நிகழும். நீங்கள் வேலை செய்யும் இடங்களில் கிராம்பை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். மனம் சோர்வுறும் போது எல்லாம் கிராம்பை எடுத்து முகர்ந்து பாருங்கள், மனம் தெளிவு பெறும்.

- Advertisement -