பூஜை செய்ய இயலவில்லையா? இந்த ஒரு சிவ மந்திரத்தை முறையாக இப்படி உச்சரித்தாலே போதும். நம்முடைய ஞாயமான ஆசைகள் எதுவாயினும் நிறைவேறும்.

sivan mantram
- Advertisement -

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறினாலும், நாம் அனைவரும் ஏதாவது ஒரு ஆசையை நம் மனதில் நினைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். அப்படி மேற்கொள்ளும் முயற்சிகளில் நமக்கு வெற்றி கிடைத்து விட்டால் மிகவும் சந்தோஷப்படுவோம். வெற்றி கிடைக்காத பட்சத்தில் நம் ஆசை நிறைவேற வேண்டும் என்பதற்காக அந்த முயற்சியோடு சேர்ந்து சில வழிபாடுகளையும், பரிகாரங்களையும் மேற்கொள்வோம். அந்த வகையில் இன்று நாம் சிவபெருமானை எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நம் மனதில் இருக்கக்கூடிய நியாயமான ஆசைகள் நிறைவேறும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஆதியும் நீயே, அந்தமும் நீயே, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனும் நீயே என்று சிவபெருமானை கூறி வழிபடுவோம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை நாம் எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். கோவிலுக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. உண்மையான பக்தியில் அவரை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம். இதற்கு பல உதாரணங்கள் புராணங்களில் இருக்கின்றன. அதுபோல்தான் எந்த பூஜையும் செய்யாமல் அவரை நினைத்து அவருடைய மந்திரத்தை உச்சரித்தால் அவர் நம்முடைய நியாயமான, நிறைவேற கூடிய ஆசையை நிறைவேற்றுவார்.

- Advertisement -

ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று விடியற்காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, முடிந்தால் சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு யாரும் தொந்தரவு செய்யாத ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அந்த இடத்தில் ஒரு சிவப்பு நிற துணியை விரித்துக் கொள்ள வேண்டும். அதன்மேல் கிழக்கு முகம் பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம் கையில் ருத்ராட்ச மாலை இருந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். இயலாதவர்கள் ஸ்படிக மாலையோ அல்லது துளசி மாலையோ உபயோக படுத்தலாம்.

மந்திரம்:
“ஓம் சிங் நமசிவய”
இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறும்பொழுது சுத்தமாக இருக்க வேண்டும். மது, மாமிசம், வெற்றிலை பாக்கு, உடல் உறவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இந்த முறையில் நாம் தொடர்ந்து 21 நாட்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது, சிவபெருமான் நமக்கு பரிபூரணமாக அருள் புரிந்து, நம் மனதில் இருக்கக்கூடிய நியாயமான ஆசையை நிறைவேற்றுவார் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: பூஜை விரதம் எதுவும் இல்லாமல் தூங்கி எழுந்தவுடன் இந்த ஒரு வரி மந்திர வார்த்தையை மூன்று முறை உச்சரித்தாலே போதும். உங்கள் தலையெழுத்தே மாறி ராஜ போக வாழ்க்கையை வாழலாம்.

இந்த மந்திரத்தை முறையாக கூறி உங்களுடைய நியாயமான ஆசையை சிவபெருமானிடம் ஒப்படைத்தீர்கள் என்றால், அவர் கண்டிப்பாக உங்களின் ஆசையை நிறைவேற்றுவார்.

- Advertisement -