நினைத்த ஆசைகள் நிறைவேற வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம் என்ன தெரியுமா? இந்த தீபம் ஏற்றினால் தீராத ஆசைகள் தீரும்.

vilakku-pray
- Advertisement -

எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒரு நிறைவேறாத ஆசைகளும், வேண்டுதல்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் நம்முடைய தீராத ஆசைகள் நிறைவேறுவதற்கு நாம் கடவுளிடம் பிரார்த்தனைகளையும் வைக்கின்றோம். இத்தகைய பிரார்த்தனைகள் நிறைவேற, வீட்டில் இந்த தீபம் ஏற்றினால் உடனடி பலன்கள் கிடைக்கும்? என்று சாஸ்திரங்கள் ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. அப்படியான தீபம் என்ன? அதை எப்படி ஏற்ற வேண்டும்? என்பது போன்ற ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மனதில் இருக்கும் மனக்குறைகள் நீங்க கோவிலுக்கு செல்கின்றோம். கோவிலுக்குள் சென்றதும் ஒருவிதமான நல்ல அதிர்வலைகள், நமக்குள் இருக்கும் இழந்த நம்பிக்கையை, மீண்டும் கொண்டு வருகின்றது. இனி நமக்கான பிரச்சினைகள் அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்கிற ஒரு உணர்வு கொடுக்கக்கூடிய ஆலயம் தான் நம்முடைய ஒரே நம்பிக்கையாக இருக்கிறது.

- Advertisement -

அதுபோல வீட்டிலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் வறுமை நீங்கி செல்வ வளம் செழிக்கும், குடும்பத்தில் பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும், நிம்மதி இருக்கும் என்று நம்புகிறோம். அப்படி ஏற்றும் தீபம் ஆனது வீட்டில் பூஜை அறையில் மட்டும் அல்லாமல் வீட்டின் நடு முற்றம், சமையலறை, துளசி மாடம் போன்ற இடங்களிலும் ஏற்றலாம் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.

முந்தைய காலங்களில் எல்லாம் நடுமுற்றம் வைத்து வீடு கட்டினார்கள். அன்று மிகப்பெரிய வீடுகள் எல்லாம் இவ்வாறு கட்டுவது சாதாரணமாக இருந்தது ஆனால் இப்பொழுது முற்றம் வைத்து எல்லாம் வீடு கட்டும் அளவிற்கு யாரிடமும் வசதி கிடையாது. அப்படி வசதி இருந்தாலும், அதற்கான இடமும் இருப்பதில்லை. முற்றத்தில் நம்மால் விளக்கை எல்லாம் ஏற்ற முடியாது, ஆனால் வீட்டின் சமையல் அறையில் விளக்கு ஏற்றலாம்.

- Advertisement -

துளசி மாடம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் அந்தி சாய்ந்த பிறகு விளக்கு ஏற்றி வைத்தால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும், நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதே போல வீட்டின் நடு பகுதியில் அதாவது உங்களுடைய ஹாலின் நடு பகுதியில் நீங்கள் அழகிய வண்ண மாக்கோலம் இட்டு அதன் நடுவில் ஒரு சிறிய அகல் தீபம் ஒன்றை வைக்க வேண்டும். இந்த அகல் தீபத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டும் ஊற்ற வேண்டும். வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்தக் கூடாது. பின்னர் இதில் மஞ்சள் நிற திரியை போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை தீர செவ்வாய்க்கிழமையில் விநாயகருக்கு செய்ய வேண்டிய பரிகாரம்? 1 ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் கடனை அடைத்து விடலாம்.

மங்களம் தரும் மஞ்சள் என்பதால் மஞ்சள் திரியிட்டு தீபம் ஏற்றினால் ஆசைகள் நிறைவேறும் என்று நம்பிக்கை உண்டு. வெள்ளை திரியை மஞ்சளில் தோய்த்து காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த திரியை கொண்டு நீங்கள் ஒவ்வொரு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையிலும் நடு முற்றத்தில் மாக்கோலம் இட்டு இப்படி தீபம் ஏற்றி, மனதார வழிபட்டால் எண்ணிய எண்ணம் அப்படியே நிறைவேறும். எத்தகைய தீராத ஆசைகளும் தீரும். வேண்டுதல்கள் அனைத்தும் தடையில்லாமல், இழுப்பறி இல்லாமல் அப்படியே நிறைவேறும். நம் எண்ணம் சரியாக இருந்தாலும், நம்முடைய ஆசைகள் நியாமானதாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த ஒரு விளக்கு பரிகாரம் செய்வதன் மூலம் எண்ணியதை அடையலாம். அடுத்தவர்களை பழிவாங்கும் ஆசைகளுக்காக இந்த தீபம் ஏற்றினால் அது உங்களுக்கே திரும்பும்.

- Advertisement -