உறவினர்களுக்கோ நண்பர்களுக்கோ பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து விட்டீர்களா? இந்த மரத்தை 9 முறை சுற்றி வந்தால் நமக்கு வர வேண்டியது கேட்காமலே வந்து சேரும்.

- Advertisement -

நமக்கு தெரிந்தவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது நம்மிடம் உதவி என்று வந்து கேட்பார்கள். அவர்களுடைய கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று நினைத்து நாமும், நல்ல மனதோடு இறக்கப்பட்டு உதவியும் செய்வோம். நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தையோ அல்லது நகையையோ அவர்கள் கஷ்டத்தை தீர்ப்பதற்காக கொடுப்போம். உதவி என்று வந்து கேட்டவர்களும், உதவியை பெறும்போது மிகவும் தாழ்மையுடன், சீக்கிரம் திருப்பித் தருகிறேன் என்று சொல்லி உதவியை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், சிலர் அதை திருப்பித் தராமல் இருப்பார்கள். நாம் கொஞ்சம் அதை அழுத்தமாக கேட்டாலே, மன கசப்பு வந்து விடும். இது போன்ற சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போம்.

அப்படி நமக்கு வரவேண்டியதை, திரும்பவும் பெற ஒரு பரிகாரத்தைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அப்படி நமக்கு வரவேண்டியதை, திரும்ப பெற தேவையான ஒரு பொருள் தான் இந்த ஆவாரம் பூ. ஆவாரம் பூவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. இது பெரும்பாலும் சர்க்கரை வியாதி வந்தவர்களுக்கு, அந்த நோயின் தாக்கத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதில் இன்னும் பல மருத்துவ குணங்கள் உண்டு. ஆனால் ஆன்மீகத்தில் இந்த ஆவாரம் பூவை வைத்து நீங்கள் இழந்ததை எப்படி திரும்ப பெறுவது என்று பார்க்கலாம்.

- Advertisement -

முதலில் ஆவாரம் பூவுடன் பூத்து குலுங்கும் ஒரு மரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த மரம் உங்களின் பூஜைக்கு உகந்த இடத்தில் இருக்கிறதா என்று பார்த்து கொள்ளுங்கள். அப்படி இருந்தால் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், இவையெல்லாம் வைத்து பூஜக்கலாம். ஆனால் இப்போது எல்லாம் அப்படி ஒரு இடம் கிடைப்பது அரிது. மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இது போன்று எல்லாம் செய்தீர்கள் என்றால், பலரும் பல கேள்விகள் கேட்க வாய்ப்பு ண்டு. இது போன்ற இடங்களில் ஆவாரம் மரம் இல்லை என்றால், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் இவையெல்லாம் தவிர்த்து விட்டு, வெறும் கற்பூரம், ஊதுவத்தி, மஞ்சள் மட்டும் வைத்து இந்த பூஜையை நீங்கள் தொடங்கலாம். இதற்கு கட்டாயமாக ஒன்பது கற்பூரம் வேண்டும்.

முதலில் மரத்தின் அடியில் வேரில் கொஞ்சமாக மஞ்சள் தண்ணீர் தெளித்து, கிழக்கு பக்கம் பார்த்து ஊதுவத்தி ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு கற்பூரம் ஏற்றி மரத்தை சுற்றி வரவேண்டும். நீங்கள் சுற்றும் இந்த சுற்றானது கிளாக் வைஸில் இருக்க வேண்டும். அதாவது இடது தொடங்கி வலது புறமாக முடிக்க வேண்டும். ஒவ்வொரு சுற்றின் தொடக்கத்திலும் ஒரு கற்பூரம் ஏற்ற வேண்டும். ஒன்பதாவது சுற்று தொடங்கும் போது உங்கள் கையில் உள்ள ஒன்பதாவது கற்பூரத்தை ஏற்றி விட்டு மரத்தை சுற்ற தொடங்க வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒன்பது சுற்று சுற்றி பூஜையை செய்து முடித்த பிறகு, இந்த மரத்திலிருந்து ஒரு பூவை பறித்துக் கொள்ளுங்கள். கீழே உதிர்ந்திருக்கும் பூக்களை எடுக்கக் கூடாது, மரத்திலிருந்து தான் பறிக்க வேண்டும். மரத்திலிருந்து பறித்த பூவிடம், உங்களுக்கு இருக்கும் வேண்டுதலை மனதார சொல்லி வணங்கிய பிறகு, இந்த பூவை கொண்டு வந்து, உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இந்த பூஜையை பிரம்ம முகூர்த்தத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும். இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்து வந்தால், உங்களுக்கு வர வேண்டியது நிச்சயமாக உங்களுக்கு திரும்ப கிடைக்க இந்த பூஜை வழி செய்யும்.

- Advertisement -