அடமானத்தில் இருக்கும் நகைகளை விரைவில் மீட்டெடுக்கவும் மறுபடியும் நகை அடகிற்க்கு செல்லாமல் இருக்கவும் இந்த ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் போதும்

jwell
- Advertisement -

கடன் பிரச்சனை இல்லாத மனிதர் என்று இன்றைய காலகட்டத்தில் எவருமில்லை. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ கடன் வாங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். கடன் என்பது நமக்கு வரும் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும் பொழுது மற்றவரிடம் பணம் கேட்டு வாங்குவது தான் கடன் எனப்படும். இவ்வாறு கடன் வாங்குவதை எவரும் விருப்பத்துடன் செய்வதில்லை. இக்கட்டான சூழ்நிலையில் ஏற்படும் பணத்தேவைக்காக முதலில் நமது வீட்டில் இருக்கும் தங்க நகைகளை தான் அடமானம் வைக்கிறோம். அதன் பிறகே பிறரிடம் கடன் வாங்குகிறோம். இவ்வாறு பிரச்சனை என்று வரும் பொழுது முதலில் நம் நினைவிற்கு வருவது நமது வீட்டிலிருக்கும் தங்க நகைகள் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த தங்க நகைகள் அடமானத்திற்க்கு செல்வது பெண்களுக்கு மிகவும் வருத்தத்தையே கொடுக்கிறது. எனவே அடமானத்தில் இருக்கும் நகைகளை விரைவில் திருப்பி எடுப்பதற்கும், மீண்டும் அவை அவமானத்திற்கு செல்லாமல் இருக்கவும் செய்ய வேண்டிய பூஜை மற்றும் சொல்லவேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

gold

தங்க நகைகள் நமது வீட்டில் இருக்க வேண்டும் என்றால் முதலில் மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். எனவே வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தவறாமல் மகா லட்சுமி தேவிக்கு பூஜை செய்து வணங்கிட வேண்டும்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் சுக்கிரன் மற்றும் குருபகவானின் அருளும் நமக்கு இருந்தது என்றால் தங்க நகைகள் தானாகவே நம்மை வந்து சேரும். இதற்காக வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு மஞ்சள் நிற மலர்களை படைத்தும், சுக்கிரன் அவர்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் வெண்மை நிற மலர்களை படைத்தும் பூஜை செய்துவர வேண்டும். இந்த பூஜையை தொடர்ந்து செய்து வருவது மிகவும் நன்மையை அளிக்கும்.

guru-bhagavan

முதலில் புதியதாக தங்கம் வாங்கப் போகிறவர்கள் அதற்காக எடுத்து வைத்துள்ள பணத்திலிருந்து சிறிய தொகையை எடுத்து அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சிறிய அளவில் தங்கம் அல்லது வெள்ளியை வாங்கி கொடுத்தோம் என்றால் நாம் வாங்கும் தங்கம் பன்மடங்கு பெருகி கொண்டே இருக்கும். அதுமட்டுமல்லாமல் இந்த தங்க நகைகள் எப்பொழுதும் அடகிற்க்கு செல்லாமல் இருக்கும்.

- Advertisement -

அதுபோல அடமானத்தில் இருக்கும் தங்கநகைகளை கடையில் இருந்து மீட்டு வீட்டிற்கு திருப்பி எடுத்து வரும் பொழுது அதனை அப்படியே அணிந்து கொள்ளக் கூடாது. பொதுவாக மார்வாடி கடைகளிலும், பேங்கிலும் தான் நாம் நகைகளை அடகு வைக்கின்றோம். அங்கு அவர்கள் தொழில் விருத்திக்காக பலவித பூஜைகளை செய்து இருப்பார்கள். அவ்வாறு அந்த பூஜைகளின் தாக்கம் நாம் வைக்கும் நகைகளின் மீதும் இருக்கும்.

Turmeric

எனவே அந்த நகைகள் மீண்டும் மீண்டும் அடகிற்கு தான் செல்லும். இதனை தவிர்ப்பதற்காக முதலில் வீட்டிற்கு கொண்டு வரும் அந்த தங்க நகையை ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பை நிரப்பிக்கொண்டு அதன் மீது ஒரு பத்து நிமிடம் வைக்க வேண்டும். அதன் பின் அதனை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து அதனுள் சிறிது நேரம் வைத்து மறுபடியும் அவற்றை வெளியே எடுத்து, வீட்டில் இருக்கும் அம்மன் படத்தின் மீது சாத்தி விட்டு ஸ்வர்ண அகர்ஷன பைரவ மந்திரத்தை சொல்லி இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு மறுநாள் காலை அதனை எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தங்கநகைகள் மீண்டும் மீண்டும் அடகிற்க்கு செல்வதை தவிர்க்க முடியும்

Today Gold rate.

ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ மந்திரம்:
“ஓம் நமோ பகவதே சஸ்வர்ணாகர்ஷண
பைரவாய தனதான்ய விருத்தி கராயமா
சீக்கிரம் தனம் தானியம் வஸ்து வாகனம்
சரணம் குருகம் வியாபாரம் லாபம் தேஹி தேஹி
வஸ்ய வஸ்ய குரு ஸ்வாஹா”

- Advertisement -