பணம் நகை பெருக பரிகாரம்

bero coin
- Advertisement -

ஒவ்வொரு மனிதரும் பணம் நகை சேர்த்து நல்ல அந்தஸ்துடனும் செல்வாக்குடனும் வாழத் தான் ஆசைப்படுவார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை. அந்த ஆசைக்கான முயற்சியை சரிவர செய்ய வேண்டும் நம்முடைய உழைப்பை போட வேண்டும் இதுதான் முக்கியம். சரி அப்படி முயற்சி எடுத்து செய்தும் கூட நம்மால் முன்னுக்கு வர முடியவில்லை என்று நினைப்பவர்களும் உண்டு. அப்படி யோசிப்பவர்களுக்காக தான் இந்த பதிவு.

வீட்டில் செல்வ வளம் பெருக பரிகாரம்

பணம் நம்மிடம் தங்கி பெருக்காததற்கு பல காரணங்கள் உண்டு. நம்முடைய கிரகநிலை சரியில்லாமல் இருக்கலாம். ஏதேனும் ஒரு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நம்முடைய கர்ம பலன்களால் இந்த பிறவியில் நாம் இத்தகைய துன்பத்தை அனுபவிக்கலாம். இவற்றுடன் பண ஈர்ப்பு தன்மை நம்மிடம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமாக கருதப்படுகிறது.

- Advertisement -

இந்த பணம் ஈர்ப்பு தன்மையினை அதிகரிக்க செய்யக் கூடிய ஒரு எளிய பரிகார முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். அதில் முக்கியமானதாக சொல்லப்படுவது நம் வீட்டில் வைக்கப்படும் பீரோ தான். இந்த பீரோவை முறையான இடத்தில் வைக்க வேண்டும் அதற்கே நிறைய வாஸ்து குறிப்புகளும் முறைகளும் உண்டு.

அப்படியெல்லாம் பார்த்து வைப்பதோடு மட்டும் அதில் பணம் நகை சேருமா? என்றால் அதிலும் சிலர் விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். பீரோவில் நகை பணம் வைக்கும் பொழுது முறையாக வைக்க வைக்க வேண்டும். நகைகளை கழட்டி அப்படியே போட்டு விடக் கூடாது. அது மட்டும் இன்றி தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் தனித்தனியாக தான் வைக்க வேண்டும்.

- Advertisement -

அதே போல் பணத்தை நாம் நன்றாக அடிக்கி வைக்க வேண்டும். இந்த பணம் வகை இருக்கும் இடத்தில் பச்சை கற்பூரம், ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் எப்பொழுதும் இருக்கும் படி பார்க்க கொள்ள வேண்டும். இந்த பொருட்களின் வாசனை தன்மை போனதும் அவற்றை மாற்றி வைத்து விட வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்வதோடு பீரோவில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை கட்டாயமாக வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது. கண்ணாடி வைத்தால் பெருகி விடுமா? என்றால் கண்ணாடி வைத்தால் அது பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம் இந்த கண்ணாடிக்கு அதன் மேல் எந்த பிம்பம் படுகிறதோ அதை பல மடங்காக பிரதிபலிக்கக் கூடிய தன்மை அதற்கு உண்டு.

- Advertisement -

ஆகையால் தான் இன்றளவும் பூஜை அறையில் கண்ணாடியை வைத்து வணங்கும் பழக்கம் உண்டு. பல கோவில்களில் கூட அலங்காரங்கள் முடிந்த பிறகு கண்ணாடியில் தெய்வங்களின் உருவம் தெரியும் படி வைத்திருப்பார்கள். அதே போல் ஆலயத்தில் இருந்து வெளியே வரும் பொழுது கண்ணாடியில் பார்த்தது போன்றொரு தோற்றத்தை வைத்திருப்பார்கள். இப்படி கண்ணாடி வைப்பதற்கான காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவான் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் செய்ய வேண்டியது

நம்முடைய வீட்டில் பணமும் நகையும் பெருக வேண்டுமெனில் பீரோவில் கண்ணாடி வைத்து அதன் முன்பு இவற்றையெல்லாம் வைப்பதை வழக்கமாகிக் கொள்வது நல்லது. எங்களிடம் நகை பணம் இல்லை என்பவர்கள் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சம் சில்லறை நாணயங்களை போட்டு அதை பீரோவில் வைக்கலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -