காலை எழுந்தவுடன் இதை செய்தால் உங்க நகை கடன் முழுவதுமாக அடைந்து, அடமானத்தில் இருக்கும் நகை விரைவில் வீடு வரும். ஒரு ரூபாய் கூட செலவில்லாத எளிய பரிகாரம்.

- Advertisement -

கடன் என்பது பெரிய சுமை தான். அதிலும் இந்த நகை கடன் என்பது இரட்டிப்பு சுமை என்றே சொல்லலாம். பணமாக கடன் வாங்கி செலவு செய்வதற்கும் ஆசைப்பட்ட வாங்கிய நகையை அடகு வைத்து செலவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இப்படி ஆசைப்பட்டு வாங்கிய பொருள் அடகில் இருந்து திரும்ப வர நாம் இந்த ஒரு சின்ன எளிய பரிகாரத்தை செய்தால் சீக்கிரம் அது நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த நகை என்பது வெறும் அழகிற்காகவும், ஆடம்பரத்திற்காவும் மட்டும் அணியும் ஒரு அணிகலனாக பலர் பார்த்தாலும் கூட, நடுத்தர வர்க்கத்தின் அத்தியாவசியமான, அவசியத் தேவைக்கு பயன்படும் ஒரு பொருளாகவே இன்றளவும் பார்க்கப்படுகிறது. அப்படி உள்ள சூழ்நிலையில் அவர்கள் ஒவ்வொரு குண்டுமணி தங்கத்தையும் கூட அரும்பாடு பட்டு தான் சேர்த்துக் இருப்பார்கள். அந்த நகையானது அணிய முடியாமல் அடகு கடைக்கு சென்று விட்டால், அந்த வேதனையை சொல்ல வார்த்தைகள் கிடையாது. இந்த ஒரு எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது அடகில் இருக்கும் நகைகள் அனைத்தும் விரைவில் மீட்கும் வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

இதற்காக நீங்கள் எந்த ஒரு செலவையும் செய்ய வேண்டியதில்லை. தினமும் காலை கண் விழிக்கும் போது முதலில் படுக்கையிலே அப்படியே மேற்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் முகம் மேற்கு திசையை நோக்கி பார்க்க வேண்டும். இப்படி அமர்ந்து கொண்டு 32 முறை சிவபெருமானின் உருவத்தையும் 32 முறை நீங்கள் அடகு வைத்த நகையின் உருவத்தையும் மாற்றி மாற்றி மனதுக்குள் நினைத்து கொள்ள வேண்டும். இப்படி நினைக்கும் பொழுது உங்களுடைய நகை சீக்கிரம் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஈஸ்வரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வளவு தான் பரிகாரம்.

ஒருவர் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் அந்த முதல் ஐந்து நிமிடங்கள் வரை அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அந்த எண்ணத்திற்கான சக்தி அதிகம் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் தூங்கி எழுந்தவுடன் முதலில் பார்க்கும் பொருளிலிருந்து செய்யும் செயல் வரைக்கும் பார்த்து, பார்த்து நாம் செய்கிறோம். இந்த ஒரு செயலை தொடர்ந்து செய்து வரும் போது நகையானது சீக்கிரம் திருப்ப நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி மேற்கு திசை என்பது செவ்வாய் கிரகத்திற்கான திசை. இந்த கடன் ஏற்படுவதற்கு நம்முடைய கர்மவினைகள் காரணமாக இருந்தாலும் கூட, இந்த கடன் ஆனது ஏற்பட செவ்வாய் கிரகத்தை அனுகிரகம் குறைவாக இருந்தால் தான் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே அந்த திசை நோக்கி அமர்ந்து இந்த ஒரு காரியத்தை செய்யும் போது நமக்கு அதன் பலன் விரைவில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த செடியை வீட்டில் வளர்த்தால் எமன் கூட உள்ளே நுழைய முடியாதாம்! தினமும் இதை நெற்றியில் வைத்துக் கொண்டால் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருந்தால் தினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஒரு காரியத்தை செய்து விடுங்கள். நம்பிக்கையுடன் செய்யும் எந்த ஒரு காரியத்திற்கும் நிச்சயம் நல்ல பலன் உண்டு. அத்துடன் நம்முடைய எண்ண அலைகளுக்கும் அதீத சக்தி உண்டு. இவை இரண்டும் இணையும் போது கட்டாயமாக உங்களுடைய நகை உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -