அடமானம் வைத்த நகையை மீட்க, அடமானம் வைத்த ரசீதை இந்த இலையில் சுற்றி வைத்தாலே போதும்.

gold
- Advertisement -

வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய பொருள் தான் தங்கம். அந்த தங்க நகைகளை நம்முடைய தேவைகளுக்காக சில சூழ்நிலையில் அடமானம் வைத்து விடுகின்றோம். அதில் தவறு ஒன்றும் கிடையாது. ஆனால் சில நேரங்களில் கையில் பணம் இல்லாத காரணத்தினால் நாம் அடமானத்தில் வைக்கக்கூடிய நகையை மீட்க முடியாமலேயே போய்விடும். இன்னும் சில பேரால், கையில் நிறையப் பணம் இருந்தும் நகையை மீட்க முடியாத சூழ்நிலை இருக்கும். இதை ஸ்வர்ண தோஷம் என்று சொல்லுவார்கள்.

நீங்கள் அடமானம் வைத்த நகையை எந்த சூழ்நிலையில் உங்களால் திருப்பி மீட்க முடியாமல் இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பயனடையலாம். இந்த பரிகாரத்தை செய்வதால் சுவர்ண தோஷம் நீங்கும். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு வெற்றிலையை வாங்கிக்கொள்ளுங்கள். அந்த வெற்றிலையின் மேல் நீல நிற பேனாவை வைத்து, ‘அடமானம் வைத்த நகையை சீக்கிரம் மீட்டு எடுக்க வேண்டும்’ என்று எழுதி விடுங்கள்.

- Advertisement -

அடமானம் வைத்த நகை ரசீது, அட்டை எதுவாக இருந்தாலும் அதை இந்த வெற்றிலைக்கு உள்ளே வைத்து, கூடவே உங்கள் வீட்டில் இருக்கும் நீங்கள் பயன்படுத்தும் ஒரு தங்கத்தை வைத்து, சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி இதை ஒரு டப்பாவில் போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். டப்பாவை மூட வேண்டாம். திறந்தபடியே இருக்கட்டும். இந்த வெற்றிலைக்கு தினமும் தீபம் ஏற்றும்போது ஊதுபத்தி காண்பிக்க வேண்டும் அவ்வளவுதான். பூஜை செய்யும்போது குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

vetrilai

மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த பூஜையை செய்து வாருங்கள். வெற்றிலையை மாற்ற வேண்டாம். அப்படியே இருக்கட்டும் மூன்று நாட்களும் பூஜை அறையில் தீபம் ஏற்றி சாதாரண ஊதுபத்தி கற்பூரம் மட்டும் காட்டி வந்தாலே போதுமானது. மூன்று நாட்கள் கழித்து அடமானம் வைத்த ரசீதையும், தங்க நகையையும் எடுத்து உங்களுடைய பீரோவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலையை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்த சில நாட்களிலேயே அடமானம் வைத்த நகையை மீட்க தேவையான பணம் உங்கள் கைக்கு வரத் தொடங்கும். கையில் பணம் இருந்தால், கூடிய சீக்கிரமே நீங்கள் அடமானம் வைத்த நகையை மீட்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்துவிடும். இதில் எதுவுமே நடக்கவில்லை என்றாலும் சரி, அடமானம் வைத்த நகையை மீட்பதற்கு வருமானத்திற்கான வழியையாவது இந்த பிரபஞ்சமும், குல தெய்வமும் ஏதோ ஒரு வழியில் காண்பிக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம் தான் இது.

Gold rate in Saravana stores

வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய எந்த விதமான தாந்த்ரீக பரிகாரமாக இருந்தாலும் அதை, நம்பிக்கையோடு செய்தால் அதில் நமக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -