அடமானம் வைத்த நகைகளை மீட்டெடுக்க பரிகாரம்

perumal1
- Advertisement -

தங்கத்தை மீட்டெடுக்கக்கூடிய தங்கமான நேரம் என்றால் அது இந்த மார்கழி மாதம் தான். மார்கழி மாதம் இறைவனிடம் நாம் வைக்கக்கூடிய வேண்டுதல் உடனே பலிக்கும் என்பது ஒரு நம்பிக்கை நம்மிடம் உண்டு. நீங்கள் உங்களுடைய தங்க நகைகளை அடமானம் வைத்திருக்கிறீர்களா, அந்த ஸ்வர்ணலட்சுமியை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர, ஆசைப்படுகிறீர்களா. கூடிய சீக்கிரம் நீங்கள் நினைத்த அந்த நல்ல விஷயம் நடக்கும். மார்கழி மாதத்தில் இதை மட்டும் செய்து பாருங்கள்.

தங்க நகையை மீட்டெடுக்கும் துளசி பரிகாரம்

மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாள் கோவில்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும். இந்த மார்கழி மாதத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கு துளசி இலைகள் பிரசாதமாக கிடைக்கும். அந்த துளசி இலைகளை நேராக வீட்டிற்கு கொண்டு வரவும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு தாம்பூல தட்டில் முதலில் அடமானம் வைத்த சீட்டு இருக்கும் அல்லவா அதை வையுங்கள். அதன் மேலே பெருமாள் கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட துளசி இலைகளை வைத்து மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடகு வைத்த நகையை சீக்கிரம் மீட்க வருமானம் தேவை. அதற்கு உண்டான வழியை காட்டு பெருமாளே, மகாலட்சுமி தாயே என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

உங்களுடைய நகையை திரும்பவும் மீட்டு எடுப்பதற்கான நல்ல சந்தர்ப்பங்களை அந்த ஆண்டவன் உங்களுக்கு காட்டிக் கொடுப்பான். வராத பணம் கூட வீடு தேடி வர தொடங்கி விடும். இந்த பரிகாரத்தை குறிப்பாக மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். பெருமாளுக்கு புதன்கிழமையும் சனிக்கிழமையும் சிறப்பு. மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு.

- Advertisement -

குறிப்பாக இந்த மார்கழி மாதத்தில் வரக்கூடிய இந்த மூன்று கிழமைகளில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்களால் முடியும் என்றால் தினம் தினம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். தினம் தினம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாளை போய் பாருங்க. துளசியிலையை வாங்கி வந்து வீட்டில் இந்த அடமான சீட்டுக்கு மேலே வைத்து பிராத்தனை செய்து கொள்ளுங்கள். ஆத்மார்த்தமான வழிபாட்டை செய்தால், சொர்ண லட்சுமி இந்த மார்கழி மாதம் முடிவதற்குள் வீடு திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதேபோல வீட்டில் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த தண்ணீரில் இந்த மார்கழி மாதம் முழுவதும் ஒரு  சிட்டிகை பச்சை கற்பூரமும், இரண்டு துளசி இலை, இரண்டு ஏலக்காயை போட்டு, பெருமாளுக்கு முன்பு வைத்து விடுங்கள். வீட்டில் அத்தனை லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: மார்கழி மாதம் வேதிபாதம் பற்றிய அரிய தகவல்.

தினமும் தண்ணீரை மாற்றிவிட்டு இந்த மூன்று பொருட்களையும் புதுசாக போட்டு பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றும் போது வீடு சுபிட்சம் பெறும் என்பதும் நம்பிக்கை. மேல் சொன்ன இந்த வழிபாட்டு முறையை எல்லாம் இந்த மார்கழி மாதத்தில் தவறாமல் பின்பற்றினால் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -