மார்கழி மாதம் வேதிபாதம் பற்றிய அரிய தகவல்.

perumal
- Advertisement -

நாளை 10 பேருக்கு அன்னதானம் செய்தால் 100 பேருக்கு அன்னதானம் செய்த பலனை பெறலாம் நாளை அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இந்த வேதிபாதம் என்றால் என்ன? ஜோதிடத்தின் அடிப்படையில் ஜாதக கட்டத்தில் 27 யோகங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த 27 யோகங்களில் இந்த வேதிபாதமும் ஒன்று.

ஆனால் மத்த யோகங்களைப் போல இந்த வேதிபாதம் யோகம் கிடையாது. ஒருவருடைய ஜாதகத்தை எடுத்து பார்த்தாலே ஜோதிடர்கள் சொல்லிவிடுவார்கள். நீங்கள் இந்த 27 யோகத்தில், எந்த யோகத்தில் பிறந்தவர்கள் என்று. அந்த அடிப்படையில் வேதிபாதம் யோகத்தில் பிறந்தவர்கள் மிக மிக துரதிஷ்டசாலிகளாக சொல்லப்படுகிறார்கள்.

- Advertisement -

பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாக வாழ்ந்தவர்கள் கூட ஒன்றும் இல்லாமல் போவார்கள், அந்த குடும்பத்தில் இந்த வேதிபாதம் யோகத்தில் யாராவது பிறந்து இருந்தால். அந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை சீரழிக்கும் யோகம்தான் வேதிபாத யோகம். இந்த வேதிபாத யோகம் என்பது இந்த மார்கழி மாதத்தில் வந்திருக்கிறது. மாதாமாதமும் இந்த வேதிபாத யோகம் வரும்.

ஆனால் இந்த மார்கழி மாதத்தில் வந்திருக்கும் வேதிபாதம் சிறப்பு.  அதாவது ஆங்கில தேதியின்படி 19.12.2023 ஆம் தேதி இரவு 9:00 மணிக்கு வேதிபாதம் ஆரம்பிக்க இருக்கின்றது. 20.12.2023 மாலை 6.00 மணி வரை இந்த வேதிபாதம் இருக்கின்றது.

- Advertisement -

மார்கழி மாதம் செய்ய வேண்டிய தானம்

நாளை புதன்கிழமை 20 ஆம் தேதி நீங்கள் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதற்கு வேதிபாதத்தில் தான் பிறந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், நல்ல பலனை அடைய முடியும். நாளை உங்களால் முடிந்த அன்னதானத்தை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்.

அதற்கு முன்பாக ஒரு விஷயம். நாளைய தினம் நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். 6 கிலோ பச்சரிசி, 6 கிலோ அச்சு வெல்லம், பாதாம் முந்திரி இந்த இரண்டையும் ஆறு என்ற கணக்கில் வாங்க வேண்டும். விலை உயர்ந்த இந்த பருப்பு வகைகளை ஆறு கிலோ நம்மால் வாங்க முடியாது.

- Advertisement -

60 கிராம் வாங்கலாம் அல்லது 6 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொண்டாலும் சரிதான். இந்த பொருட்களை எல்லாம் ஒரு தாம்பூல தட்டில் வைத்து வெற்றிலை பாக்கு துளசி பூ பழம் வைத்து, பெருமாள் கோவிலுக்கு தானம் செய்தால், அதை மார்கழி மாதம் பிரசாதம் செய்ய அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இதோடு கட்டாயம் 600 கிராம் அளவு பசு நெய்யையும் வாங்கி தானம் கொடுங்கள்.

முதலில் பெருமாளுக்கு நாளைய தினம் காலை 6.00 மணிக்கு இந்த தானத்தை செய்து விட்டு, அதன் பிறகு உங்களால் முடிந்த அன்னதானத்தை நீங்கள் ஏழை எளியவர்களுக்கு செய்யுங்கள். இத்தனை பேருக்குத் தான் என்று கணக்கு கிடையாது. உங்கள் நிதி நிலைமையை பொருத்து அன்னதானம் செய்யலாம். நாளை செய்யக்கூடிய இந்த தானம் உங்களுடைய கஷ்டத்தை போக்கும். நான் பிறந்ததே கஷ்டப்படுவதற்காக தான் என்று சொல்பவர்கள் கூட இந்த தானத்தை நாளைக்கு செய்தீர்கள் என்றால், உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல செல்வ செழிப்பு உண்டாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பின்குறிப்பு: ஏதோ தான தர்மம் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த தர்மத்தை செய்யக்கூடாது. மனதார அடுத்தவர்களுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுங்கள். ஏழை எளியவர்கள் இதுவரைக்கும் ருசிக்காத உணவு என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. அந்த உணவு இருபது 20, 30 ரூபாய் தான் இருக்கும். ஆனால் அதைக் கூட காசு கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத நிலை இன்று நிறைய பேருக்கு இருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர பரிகாரம்

அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் நாளை செய்யக்கூடிய தானம் உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைத் தரும். மாதா மாதம் இந்த வேதிபாதம் வரும் .ஆனால் மார்கழி மாதத்தில் வந்திருக்கக் கூடிய வேதிபாதம் மிக மிக சிறப்பு யாரும் இதை தவற விடாதீங்க என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -