இந்த ஒரு செடி உங்கள் கையில் கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இந்தச் செடி மட்டும் உங்கள் கண்ணில் பட்டுவிட்டால் அதனை தவற விட்டு விடாதீர்கள்

plant-
- Advertisement -

மனிதனின் வாழ்க்கையில் நம்பமுடியாத அதிசயங்கள் நடந்தால் அனைவருக்கும் கஷ்டம் என்ற ஒன்று மறைந்து, அனைவரின் வாழ்க்கையிலும் சந்தோஷம் நிறைந்திருக்கும். பல திரைப்படங்களில் ஒரே பாடலில் அவர்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறுவது போல் காண்பித்திருப்பார்கள். இதனை பார்க்கும் பொழுது இவ்வாறு நமது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு மேஜிக் நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று தோன்றும். ஆனால் மனிதனின் வாழ்க்கையிலும் கண்ணுக்குத் தெரியாத பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறு நமது வாழ்க்கையிலும் அதிசயத்தை உண்டாக்க கூடிய ஒரு அற்புத செடியினை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். வாருங்கள் அவற்றால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்றும் அறிந்து கொள்வோம்.

sunrise

பலமுறை நான் வெளியில் செல்லும்பொழுது பாழடைந்த கட்டிடங்களில் ஆங்காங்கே பல செடிகள் முளைத்து இருப்பதைப் பார்க்க முடியும். இப்போது நாம் பார்க்கக்கூடிய ஒரு செடியும் அனைத்து இடங்களிலும் வளரக்கூடிய ஒன்று தான். இந்தச் செடியின் பயன்பாடுகள் அதிகமாக இருந்தாலும் அவற்றை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நமக்கு அத்தியாவசியமான தண்ணீரை எப்படி நாம் அலட்சியப் படுத்துகின்றோமோ அவ்வாறு தான் இந்த செடியையும் பலரும் கண்டு கொள்வதில்லை. எளிதில் கிடைக்கும் எந்த பொருளின் முக்கியத்துவத்தையும் நாம் எப்பொழுதும் தெரிந்து கொள்வதில்லை.

- Advertisement -

அவ்வாறு பழைய கட்டிடங்களில் தானாக முளைக்க கூடிய மூன்று செடிகள் உள்ளன. அரச மரம், ஆல மரம் மற்றும் வேப்ப மரம். ஒரு செடி வளர வேண்டுமென்றால் அதற்கு பூமியின் ஆதாரம் நிச்சயம் தேவைப்படும். பிறகு சாம்பல் சத்து. நீர்ச் சத்து மற்றும் சூரிய ஒளி இவை அனைத்தும் இருந்தால் மட்டுமே ஒரு செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.

arasa-maram1

இவ்வாறு அங்கு வளரக்கூடிய செடிகள் தானாக வளர்வதற்கு வாய்ப்பு கிடையாது. அதன் விதைகளை ஏதேனும் பறவைகள் உண்டு அதன் எச்சம் அந்த கட்டிடத்தின் மீது விழுந்தால் மட்டுமே இவ்வாறான செடிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. ஆனால் அந்த இடத்தில் மண் இல்லாமல், நீரில்லாமல் அது தானாக வளர ஆரம்பிக்கிறது. இவ்வாறு வளரக்கூடிய செடிகளை அதிசய பிறவிகள் என்று கூறலாம்.

- Advertisement -

இந்தச் செடிகளில் வேப்பஞ்செடியை எங்கு பார்த்தாலும் தவறாமல் அதனைப் பறித்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய செடியாக இருந்தால் போதும். அதனை வீட்டிற்கு கொண்டு வந்து, பசு கோமியத்தில் நன்றாக அலசி கொண்டு, அதனை சிறிய மண் குடுவையில் வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனை இரண்டு, மூன்று நாட்கள் வெயிலில் வைத்து, நன்றாக காய வைத்து, பின்பு ஒரு துணியில் மூட்டையாக கட்டி அதனை பணம் வைக்கும் பீரோ அல்லது பூஜை அறையில் வைத்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் நம்பமுடியாத பல நல்ல விஷயங்கள் வீட்டில் நிகழ்வதை உணர முடியும்.

neem

அப்படி இல்லாமல் பெரிய செடியாக இருந்தது என்றால் அதன் வேர் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். வேரினை கத்தி பயன்படுத்தி வெட்டி எடுக்கக்கூடாது. ஏதேனும் ஒரு சிறு கல்லை பயன்படுத்தி அதன் வேர் பகுதியை மட்டும் தனியாக நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அதில் இருக்கும் ஆன்மீக சக்தியை முழுமையாக பெற முடியும். இந்த வேர்ப்பகுதியை பச்சைக் கற்பூரத்துடன் சேர்த்து, சிறிய பாட்டிலில் வைத்து, மூடி போட்டு, அதனையும் பீரோ அல்லது பூஜை அறையில் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமும் வீட்டில் பல அற்புதங்கள் நிகழ்வதை உணர முடியும்.

- Advertisement -