இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். அதிர்ஷ்டம், தன தானியம், சுபம் இவை மூன்றும் உங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்கிவிடும்.

annasi-poo
- Advertisement -

இந்த அதிர்ஷ்டம் என்பது நமக்கு எந்த நேரத்தில் எப்போது அடிக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. நம் வீட்டில் இருக்கும் ஒரு பொருளை எடுத்து மற்றொரு இடத்தில் மாற்றி வைக்கும் சமயத்தில் கூட அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீசலாம். ஆக உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ, உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, நம்பிக்கையோடு மனப்பூர்வமாக அந்த மாற்றங்களை செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. பரிகாரங்களும் அந்த வரிசையில் தான் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் மனதிற்கு சரி என்று பட்டு, இதை செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டும் பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் பரிகாரத்தை செய்து பார்க்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டம் மிக மிக அவசியமாக தேவைப்படும் ஒன்று. இரண்டாவதாக தன தானியத்திற்கு வீட்டில் குறைவு இருக்க கூடாது. மூன்றாவதாக வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த மூன்றையும் நாம் பெற்றுவிட்டால் வாழ்க்கையினை நல்லபடியாக வாழ்ந்துவிடலாம்.

- Advertisement -

தனத்தையும் தானியத்தையும் நம் வீட்டில் நிறைவாக வைப்பது துவரம்பருப்பு. புது வீடு குடி போகும் போதும் இந்த துவரம் பருப்புக்கு நாம் முதலிடம் கொடுக்கின்றோம். லட்சுமி கடாட்சத்தை கொடுப்பதிலும் இந்த துவரம் பருப்புக்கு முதலிடம். இதனால் தான் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் துவரம்பருப்பு சமைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு உரிய தானியம் துவரை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஒரு வீட்டில் துவரம்பருப்பு நிறைவாக இருந்தால் அந்த வீட்டில் தன தானியத்திற்கு நிச்சயம் பஞ்சம் வராது.

thuvaram-paruppu

அடுத்தபடியாக அதிர்ஷ்டத்தை நமக்கு கொண்டு வந்து சேர்க்கக் கூடிய சக்தி அன்னாசி பூவுக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. அன்னாசிப்பூ ஒருவிதமான வாசனை நிறைந்த பொருள். பிரியாணிக்கு இதை சேர்த்து சமைப்பார்கள். இந்த வாசனைக்கு அதிர்ஷ்டம் வசியப்படும். எதிர்பாராத அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீச அன்னாசிப் பூ.

- Advertisement -

அடுத்தது வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும். சுபகாரியங்களுக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது. இதற்கு உண்டான கிரகம் குரு. குரு பகவானுக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை. கருப்பு கொண்டை கடலை அல்லது வெள்ளை கொண்டைக்கடலை எதை வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்.

kondai-kadalai

ஆக மொத்தமாக மூன்று பொருட்கள் ஒரு மஞ்சள் நிற துணியில் கொண்டைக்கடலை 11, அண்ணாச்சி பூ ஒன்று, ஒரு கைப்பிடி துவரம்பருப்பு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு ஒன்றாக கட்டி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய ஆணியில் மாட்டி விடலாம் அல்லது அலமாரியில் வைத்து விடலாம்.

manjal-mudichu

மாதத்திற்கு ஒரு முறை இந்த முடிச்சின் உள்ளே இருக்கும் பழைய பொருட்களை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு மீண்டும் புதியதாக இஷ்ட தெய்வத்தை வேண்டி இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கட்டி வையுங்கள் போதும். அவ்வளவு தான் நிச்சயமாக ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு நன்மை உங்களை தேடி வரும். முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் உண்டு.

- Advertisement -