ஐஸ்வர்யம் பெருக இந்த விலங்கு பொம்மைகளை தவறாமல் உங்கள் வீட்டின் இந்த பகுதியில் வைத்து விடுங்கள்

elephant
- Advertisement -

பலரின் வீடுகளில் அலங்கார அறைகள் அமைத்து இருப்பார்கள் அதில் பலவிதமான பொம்மைகளை வைத்து இருப்பார்கள் வீட்டில் வளர்க்க வேண்டிய விலங்குகள் விலங்குகள் பறவைகள் போன்ற பல பொம்மைகளை வைத்து இருப்பார்கள் இவ்வாறு அழகுக்காக வைக்கப்படும் பொம்மைகள் நமது வீட்டிற்கு கிடைக்கும் பலன்கள் பற்றி தெரியுமா ஒருசில பொம்மைகளால் நல்ல விதமான பலன்களும் ஒருசில பொம்மைகளால் கெட்ட விதமான பலன்களும் கிடைக்கின்றன அவ்வாறு எந்தெந்த பொம்மைகளை வீட்டில் எந்தெந்த பகுதிகளில் வைத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

7-horse1

பல விசேஷமான கோவில்களுக்கு சென்று வரும் பொழுது அங்கு இருக்கும் கடைகளில் இவ்விதமான விலங்கு பொம்மைகள் விற்பதை பார்த்திருப்போம். அவைகள் கோவிலில் விற்கப்படுவதற்க்கு ஒரு சில உள்ளார்ந்த அர்த்தங்கள் இருக்கின்றன. அதனைப் பற்றி தெரிந்து கொண்டு இந்த பொம்மைகளை நமது வீட்டில் வாங்கி வைக்கும் பொழுது பல விதமான நன்மைகளை பெறமுடியும்.

- Advertisement -

அவ்வாறு வீட்டில் வாங்கி வைக்க கூடிய மிகவும் பலம் வாய்ந்த ஒரு பொம்மை யானை பொம்மை ஆகும் யானை பொம்மையில் மூன்றுவிதமான பொம்மைகள் இருக்கின்றன ஒரு யானை சாதாரணமாக நடந்து கொண்டிருக்குமாறும், மற்றொன்று தும்பிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்யுமாறும், மீதமிருக்கும் ஒன்று இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு நிற்பது போன்றும் இருக்கும்.

elephant

இதில் முதல் இரண்டு பொம்மைகளை மட்டும் வீட்டில் வைத்து கொள்ளலாம். மூன்றாவதாக இருக்கும் பொம்மையை நிச்சயம் வீட்டில் வைக்கக் கூடாது. அது நன்மையைத் தரக்கூடியதாக இருக்காது. இந்த யானை பொம்மையை ஒற்றையில் வைக்கக்கூடாது ஜோடியாகத்தான் வைக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது அதற்கு நேர் திசையில் இதனை வைத்து வந்தால் வீடு முழுவதும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும்.

- Advertisement -

அடுத்ததாக குதிரை பொம்மையை வீட்டில் வைக்கலாம். குதிரை ஓடும் வகையிலும் அல்லது இரண்டு கால்களை தூக்கி கனைக்கும் வகையிலலும் இருக்கின்ற பொம்மைகளை வீட்டில் வைப்பதன் மூலம் வெற்றிகளை தேடித் தரும். இதனை வீட்டின் ஹாலிலும், தொழில் செய்யும் கடைகளிலும் வைப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கிறது. அதுபோல ஒற்றை அல்லது இரட்டை பொம்மைகளை வைக்கலாம். ஆனால் இரண்டு குதிரைகளும் ஒன்றோடு ஒன்று நேராக பார்க்கும் வகையில் வைக்கக் கூடாது.

pecock

அடுத்ததாக தோகை விரித்து கொண்டிருக்கும் மயில் பொம்மையை வீட்டில் வைப்பதன் மூலம் நல்ல அனுக்கிரகம் கிடைக்கிறது. இதனை பூஜை அறையிலோ அல்லது ஹாலிலோ வைக்கலாம். குறிப்பாக படுக்கை அறையில் வைத்து இந்த மயில் பொம்மையின் மீது காலை எழுந்தவுடன் கண் விழித்தால் மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

snake

நாக சம்பந்தமான பொம்மைகளை வீட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை ஒரு சிலர் பூஜை அறையில் வைத்திருப்பார்கள். ஆனால் முடிந்தவரை இவ்வாறான பொம்மைகளை வீட்டில் வைப்பதை தவிர்ப்பது என்பது தான் மிகவும் சிறந்ததாகும்.

- Advertisement -