குருபகவான் அருள் கிடைத்து புத்திர பாக்கியம் பெற இந்த விசேஷ கோவில்களுக்கு சென்று வந்தால் சிறந்த பலனை பெறமுடியும்

guru
- Advertisement -

தனகாரகன், புத்திரகாரகன் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் ஆவார். இவர் ஒரு மனிதன் சம்பாதிக்கும் பணத்திற்கும், அவனுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் காரணமான கிரகம் ஆவார். ஒரு மனிதன் பிறந்ததின் அடிப்படை நோக்கமான வம்ச விருத்திக்கு காரணமான கிரகமாகுவும் குரு பகவான் இருக்கிறார். இதன் அடிப்படையிலேயே குருபகவான் அனைத்து நிலைகளிலும் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார். எனவே தான் குழந்தை பாக்கியம் பெற குரு பகவானின் அருள் நிச்சயம் தேவைப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் குரு நீச்சம் அல்லது பகைமை அடைந்திருந்தால் அவற்றில் இருந்து விடுபட சில கோவில்களுக்கு சென்று வருவது மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும். அவ்வாறு குருபகவான் அருள் பெற செல்ல வேண்டிய கோவில்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.

baby

நவ கிரகங்களில் பூரண சுபகிரகம் என்று போற்றப்படுபவர் குருபகவான். உயர்கல்வி, மழலை பாக்கியம் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பவர் குரு பகவானாவார். ஜாதகத்தில் குரு பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து தான் ஒருவருக்கு நன்மைகளும், தீமைகளும் உண்டாகிறது.ஒருவருடைய ஜாதகத்தில் குருபகவான் வலிமை பெற்றவராக இருந்தால் அவர்களுக்கு பலவித நன்மைகள் நடைபெறும்.

- Advertisement -

பணத்திற்கு அதிபதியாக இருக்கும் குரு பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது என்றால் ஒருவர் விரைவில் பணக்காரராகிவிடும் பாக்கியம் கிடைக்கும். எனவே எந்த ஒரு கிரகங்கள் வலுவிழந்து இருந்தாலும் குரு கிரகம் மட்டும் நம்முடைய ஜாதகத்தில் எப்போதும் வலுவிழந்து இருக்கக் கூடாது. அது போல என்னதான் பணம் அதிகமாக இருந்தாலும் வாழ்வில் ஒரு குழந்தை இல்லை என்றால் எப்போதும் மகிழ்ச்சி இருக்காது. குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் குரு பகவானின் அருளும், ஆசியும் நிரந்தரமாக இருக்க வேண்டும்.

cash

ஜாதகத்தில் குரு திசை பலம்பெற செல்ல வேண்டிய கோயில்கள்:
நவகிரகத் ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமாக விளங்கும் கும்பகோணம் அருகே இருக்கும் ஆலங்குடிக்கு சென்று குருவருள் பெற்று வந்தால் நமக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து சுபகாரியங்கள் நடைபெறும்.

- Advertisement -

சென்னையில் உள்ளவர்கள் பாடியிலிருக்கும் திருவல்லீஸ்வரர் ஆலயம் மற்றும் சேக்கிழார் பெருமானால் போரூரில் ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுப்ப்பட்ட ராமநாதீஸ்வரர் பெருமான் கோவிலுக்கு வியாழக்கிழமை தோறும் சென்று வழிபட்டு வருவது வாழ்வில் மேன்மையை உண்டாக்கும். இந்த திருத்தலத்தை “வட ஆலங்குடி” என்றே பக்தர்கள் அனைவரும் அழைக்கிறார்கள்.

ayyar-malai-kovil

குரு பகவான் ஆசி பெறுவதற்கு எம்பெருமான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு வருவதன் மூலமும் குரு தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

rasi1

ஒருவருடைய ஜாதகத்தில் குரு வலுவிழந்து இருக்கிறது என்றால் வியாழக்கிழமைதோறும் கோவிலுக்கு சென்று, குரு பகவானுக்கு உரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் லட்டுவை நைவேத்தியமாக செய்து, தட்சிணாமூர்த்திக்கு படைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதன் மூலம் குரு தோஷத்தில் இருந்து விடுபட்ட நல்ல பலனை பெற முடியும். அது மட்டுமல்லாமல் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மங்கலப் பொருட்களையும் தானமாக கொடுத்து வந்தால் விரைவில் மங்களம் உண்டாகி உங்கள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த பரிகாரங்கள் செய்து நீ சொல்லு கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பெறும் பாக்கியம் உண்டாகும்.

- Advertisement -