துரதிஷ்டம் உங்களை விட்டு தூர செல்லவும், அதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் அருகில் வரவும் இந்த 1 பூவை வரவேற்பு அறையில் வைத்தால் போதும்.

- Advertisement -

ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்பது எந்த ரூபத்தில் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. நல்ல நேரம் பிறந்து விட்டால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிடும். இதற்காக நல்ல நேரம் வரும் வரை நாம் எத்தனை நாட்கள் தான் பார்த்திருப்பது. அதிர்ஷ்டம் நம் பக்கம் திரும்பி பார்க்க வேண்டும் என்றால் அயராத உழைப்பு முதலில் வேண்டும். விடாமுயற்சி இருக்க வேண்டும். இந்த உலகம் முழுவதும் நம்முடைய பெயர் புகழ் தெரிய வேண்டும் என்று உழைத்தால் தான், நம்முடைய சுற்று வட்டாரத்திலாவது நல்ல பெயர் புகழோடு நல்ல அந்தஸ்துடன் வாழ முடியும். ஏன்னா கனவுகள் பெரியதாக இருக்கும் போது தான், லட்சியங்கள் சிறிய அளவிலாவது ஜெயிக்கும் என்பது நமக்கு பாடம் சொல்லித் தந்த முன்னோர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

லட்சியங்களை பெரியதாக வைத்து உழைக்க தொடங்குங்கள். நிச்சயம் ஒருநாள் இல்லை என்றாலும் ஒரு நாள் உங்களுடைய புகழ் வானுயர்ந்து இந்த உலகை தொடும். நல்ல நேரமும் அதிர்ஷ்டமும் தானாக உங்கள் வீடு தேடி வரும். சரி முயற்சிகள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தோல்வி விடாமல் துரத்துகின்றதே இதை சரி செய்ய என்ன செய்வது. கண்ணுக்குத் தெரியாமல் நம் முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய எதிர்மறை சக்தியிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள சில விஷயங்களை முயற்சி செய்து பார்க்கலாம். இதற்கான ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் வெள்ளருக்கன் பூ. வெள்ளருக்கண் கட்டையில் செய்த விநாயகரின் அருமை பெருமைகள் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

- Advertisement -

வெள்ளருக்கன் விநாயகர் வழிபாடு நமக்கு பல நன்மைகளைக் கொண்டு வந்து சேர்ப்பதாக சொல்லப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் வீட்டில் வெள்ளருக்கு விநாயகரை வாங்கி வைத்து வழிபாடு செய்யலாம். வெள்ளருக்கன் பூவை வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகருக்கு சாத்தி வழிபாடு செய்வோம்.

விநாயகருக்கு சாத்தக்கூடிய இந்த வெள்ளருக்கன் பூவிற்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய சக்தி நிறைவாக இருக்கின்றது. இந்த வெள்ளருக்கன் பூ இருக்கும் இடத்தில் எதிர்மறை ஆற்றல் அண்டாது. கெட்ட சக்திகள் நெருங்காது. வீட்டிற்குள் இருக்கும் கெட்ட சக்தி கண் திருஷ்டி அனைத்தையும் விரட்டி அடிக்கக்கூடிய தன்மையும் இந்த வெள்ளெருக்கம் பூவுக்கு உள்ளது.

- Advertisement -

வெள்ளருக்கன் செடியிலிருந்து வெள்ளருக்கன் பூவை நீங்களே பறித்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு யாரிடமாவது சொல்லி வைத்து இந்த வெள்ளருக்கன் பூவை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டாலும் சரிதான். அதை வீட்டிற்கு கொண்டுவந்து முதலில் தண்ணீரில் கழுவி விடுங்கள். அதன் பின்பு ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, அந்த தண்ணீரில் இந்த வெள்ளருக்கன் பூவை போட்டு உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஏதாவது ஒரு மூலையில் இதை பத்திரமாக வைத்து விடுங்கள். அடுத்தவர்கள் கைப்பட்டு தண்ணீர் கீழே கொட்டும்படி வைக்க வேண்டாம்.

வெள்ளருக்கன் பூ, தண்ணீரில் இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வாடாமல் இருக்கும். பூ வாடிய பின்பு டம்ளரில் உள்ள பழைய தண்ணீரையும் பூவையும் மாற்றிவிட்டு மீண்டும் வெள்ளருக்கன் பூவை புதிய தண்ணீரில் போட்டு வரவேற்பரையில் வைக்கலாம். வெள்ளெருக்கு பூ உங்களுக்கு கிடைக்கும் போதெல்லாம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். உங்களுடைய துரதிஷ்டம் உங்களை விட்டு தூர சென்று விடும். அதிர்ஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நெருங்க தொடங்கும்.

வெள்ளருக்கன் செடி இருக்கக்கூடிய இடத்தில் பாம்புகள் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நீங்களே பூக்களை பறிப்பதாக இருந்தால் அந்த இடத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த காலத்திலேயே சித்தர்கள் பல நன்மைகளுக்காக இந்த வெள்ளருக்கன் செடியை பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பில் நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில் அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -