நாளை ஆடி மாதம் முதல் தேதி பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தை சொல்லி இப்படி தீபத்தை ஏற்றினால் வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி பணக்கஷ்டம் என்பதே உங்களை நெருங்காது.

lakshmi vilakku
- Advertisement -

ஆடி மாதம் என்றாலே ஞாபகத்திற்கு வருவது அம்மன் வழிபாடு தான். இந்த மாதம் முழுவதுமே வழிபாட்டிற்குரிய மாதம். பல்வேறு இடங்களில் ஆடி மாதத்தில் சிறப்பான வழிபாடுகள், பூஜைகள் என விசேஷமாக இருக்கும். இந்த மாதத்தில் இறந்தவர்களின் வழிப்பாடாக இருக்கட்டும், கன்னி தெய்வங்களின் வழிபாடாக இருக்கட்டும், அம்மன் வழிப்பாடாக இருந்தாலும் அனைத்துமே சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதிலும் இந்த மாதத்தில் கூழ்வார்த்தல் போன்ற அம்மனுக்கு உகந்த விசேஷங்களும் நிகழும. அவ்வளவு சிறப்புமிக்க இந்த மாதத்தில் நாம் வீட்டில் ஏற்றக் கூடிய ஒரு தீபம் நம்முடைய வீட்டில் இருக்கும் தரித்திரத்தை நீக்கி செல்வ செழிப்புடன் வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தரித்திரம் நீங்க ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை நாம் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தான் ஏற்ற வேண்டும். அதுவும் மூனேகால் மணி முதல் ஐந்தரை மணிக்குள்ளாகவே ஏற்றி விட வேண்டும். நம்முடைய தரித்திரம் அனைத்தும் நீங்கி வருடம் முழுவதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் செல்வ செழிப்புடன் வாழ நான் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் இந்த தீபத்தை காலையில் ஏற்றி விடுவது தான் சிறந்தது.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்ற இரண்டு அகல் விளக்கு, நல்லெண்ணெய் அல்லது சுத்தமான பசு நெய் பஞ்சு திரி, கொஞ்சம் மலர்கள், அகல் விளக்கை வைப்பதற்கு தட்டு, மஞ்சள், குங்குமம் இவற்றுடன் கொஞ்சம் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் மூன்றையும் இடித்து தூளாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் முதல் நாளே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் இதையெல்லாம் தயார் செய்ய நேரம் இருக்காது.

காலையில் எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் விளக்கை துடைத்து விட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் விளக்கு வைக்கும் தட்டிற்கும் வைத்து விளக்கே திரி போட்டு எண்ணெய் ஊற்றி தட்டில் வைத்து விடுங்கள். இந்த தட்டை சுற்றி மலர்களை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இந்த தட்டை வைக்கும் இடத்தில் அழகாக பச்சரிசி மாவில் ஒரு சிறிய கோலம் போட்டு விடுங்கள். இப்போது அந்தக் கோலத்தின் மேல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் தீபத்தட்டை வைத்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த மந்திரத்தையும் உச்சரித்த படியே தீபத்தை ஏற்ற வேண்டும். இது மிகவும் முக்கியம்.

- Advertisement -

மந்திரம்
ஸ்ரீ சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம்
தனசம்பதா சத்ரு புத்தி வினாசனம் தீபம்
ஜோதிர் நமஸ்தே

இந்த மந்திரத்தை ஜெபித்தப்படியே தீபத்தை ஏற்றிய பிறகு நாம் ஏற்கனவே பொடித்து வைத்திருக்கும் அந்த ஏலக்காய் பச்சைக் கற்பூரம் கிராம்பு பொடியை இந்த எண்ணெயில் போட்ட பிறகு மகாலட்சுமி தாயாரை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் துன்பம் துயரம் எல்லாம் நீங்கி நல்ல பணவரவுடன் குடும்பம் செழிப்பாக இருக்க வேண்டும் என நினைத்த படியே தீபத்தை தொட்டு வணங்கி விடுங்கள்.

இதையும் படிக்காலமே: உங்களிடம் குண்டுமணி தங்கம் இருந்தாலே போதும். அதன் மீது இதை ஒரே ஒரு சொட்டு தடவி விட்டால் நீங்களே வேண்டாம் என தடுத்தாலும் உங்களை தேடி தங்கம் வந்து கொண்டே இருக்கும்.

இந்த தீபத்தை நாளை ஒருநாள் ஏற்றுவது மட்டுமின்றி முடிந்தால் இந்த மாதம் முழுவதுமே காலையில் ஏற்றி வந்தால் உங்களுக்கு பணத்தட்டுப்பாடு என்பதே வராது என்பதுடன் வீட்டில் தரித்திரம் என்பது அறவே நீங்கி வீடு சுபிட்சமாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம். இந்த தீப வழிபாட்டை முடித்த பிறகு நீங்கள் அமாவாசை திதி கொடுக்க வேண்டிய வழிபாட்டை தாராளமாக செய்து கொள்ளலாம்.

- Advertisement -