உங்களிடம் குண்டுமணி தங்கம் இருந்தாலே போதும். அதன் மீது இதை ஒரே ஒரு சொட்டு தடவி விட்டால் நீங்களே வேண்டாம் என தடுத்தாலும் உங்களை தேடி தங்கம் வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

தங்க நகை சேர வேண்டும் என்று ஆசைப்படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அது எவ்வளவு தங்கம் வைத்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசை மட்டும் யாருக்கும் குறைவது கிடையாது. பணம் இருப்பவர்கள் எப்படியாவது வாங்கிக் கொள்வார்கள். ஆனால் இல்லாதவர்கள் கூட பெருமளவு தங்கத்தை சேர்த்துக் கொள்ள ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தங்க நகை அதிகமாக சேர பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையானது ஒரு சிறிய கடுகளவு தங்கமாவது அவசியம் இருக்க வேண்டும். ஒரு பச்சை நிற துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம்பு ஒரு ஏலக்காய் கொஞ்சம் சோம்பு, பச்சை கற்பூரம், பூங் கற்பூரம், மஞ்சள், குங்குமம் என அனைத்தையும் வைத்து சிறிய மூட்டை போல கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் உங்களிடம் இருக்கும் ஏதேனும் ஒரு நகையை எடுத்துக் கொள்ளுங்கள். அது இல்லை என்றால் ஒரு சின்ன குண்டுமணி தங்கத்தையாவது வாங்கி வைப்பது சிறந்தது. இது இரண்டையும் பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக வைத்து இந்த தங்கம் பல மடங்காக பெருக வேண்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தங்கத்தின் மீதும் நீங்கள் கட்டி வைத்திருக்கும் முடிச்சின் மீதும் கொஞ்சம் சந்தன வாசனை திரவியத்தை தெளித்து விட வேண்டும். இந்த சந்தன மணம் நகை பெருமளவு பெறுவதற்கான வாய்ப்பை தரும்.

அதாவது சந்தன மணமுடைய எந்த ஒரு சென்ட் ஆக இருந்தாலும் கூட, அதையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் சந்தனத்தின் மணம் வர வேண்டும். இது தான் மிகவும் முக்கியம். அதன் பிறகு இந்த முடிச்சும், நகையும் கொண்டு உங்கள் பீரோவில் வைத்து விடுங்கள். ஒரு மாதம் கழித்து இந்த முடிச்சை எடுத்து விட்டு மறுபடியும் வேறு முடிச்சை கட்டி வைத்து விடுங்கள்.

- Advertisement -

தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் நமக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அவர்களின் அனுகிரகம் நமக்கு முழுவதுமாக கிடைக்க வேண்டுமானால், அவர்களுக்கு பிடித்த அவர்கள் வசியமாக கூடிய வாசனை அந்த இடத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் தாயார் மனம் குளிர்ந்து விருப்பப்பட்டு அங்கு இருப்பார். அப்படியான ஒரு பரிகாரம் தான் இது.

இதைத் தொடர்ந்து செய்யும் போது உங்களிடம் நகை வாங்கக் கூடிய வாய்ப்பு பெருகிக் கொண்டே செல்வதுடன், ஒரு சிலருக்கு இருக்கும் நகையும் அடிக்கடி அடகு நகைக்கு செல்லும் அது போன்று வாய்ப்புகள் இனி வராது. ஒரு சிலருக்கு நகையை வாங்கி அணியக் கூடிய யோகமே இருக்காது. அப்படியான நிலையும் இந்த பரிகாரத்தின் மூலம் மாறும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஆடி முதல் நாள் எல்லோர் வீட்டு வாசலிலும் இந்த ஒரு விளக்கை ஏற்றி, உங்க வீட்டிற்குள் அம்மனை வர வைத்துக் கொள்ளுங்கள். ஆடி மாதம் முழுவதும் அம்மனின் அருள் உங்கள் குடும்பத்திற்கு நிறைவாக கிடைக்கும்.

நகையை அதிகமாக சேர்க்க வேண்டும் என்ற நினைப்பவர்களும் தன்னிடம் ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லையே என்று வருத்தப்படுபவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்யும் போது மேலும் மேலும் நகை பெறுவதற்கான வாய்ப்பை பெறலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -