தீர்க்கவே முடியாத பல நாள் கஷ்டத்தை கூட உடனடியாக தீர்க்க 1 கட்டு அகத்திக்கீரை இருந்தால் போதும்.

agathi-keerai
- Advertisement -

வாழ்க்கையில் எதனால் இவ்வளவு துன்பங்கள் வருகிறது என்று தெரியாமல் கஷ்டத்தோடு கஷ்டமாக வாழ்க்கையை நடத்தி செல்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு அவர்களுக்கு அந்த கஷ்டம் பழகிப் போய் இருக்கும். இயல்பான சந்தோஷமான வாழ்க்கை என்றால் என்னவென்றே சிலருக்கு தெரியாது. போராடி போராடியே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு, கஷ்டத்திலிருந்து விமோசனம் கிடைக்க ஒரு சின்ன பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பரிகாரம் என்றால் இதை செய்வதற்கு நீங்கள் பெரிய சிரம பட வேண்டாம். நிறைய செலவு செய்ய வேண்டாம். சொல்லப்போனால் இந்த பரிகாரம் உங்களுக்கு இருக்கும் கஷ்டத்தை சரி செய்வதோடு, பல மடங்கு புண்ணியத்தை தரக்கூடிய பரிகாரம் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருள். ஒரு கட்டு அகத்திக்கீரை. அவ்வளவு தான். பெரும்பாலும் இந்த அகத்திக் கீரையை அமாவாசை தினத்தன்று தான் பசு மாட்டிற்கு வாங்கி தருவதை நாம் வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் ஊரில் இருக்கும் அத்தனை பேரும் அமாவாசை தினத்தன்று பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கிக் கொடுத்தால், பாவம் அந்த பசு எவ்வளவு கீரைகளை சாப்பிடும்.

- Advertisement -

பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை அமாவாசை தினத்தில் வாங்கி தர வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். அதில் எந்த தவறும் கிடையாது. அமாவாசைக்கு பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை வாங்கி கொடுங்கள். ஆனால், அன்று மட்டும்தான் பசுவுக்கு கீரை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தினம் ஒரு அகத்திக் கீரை கட்டை பசு மாட்டிற்கு வாங்கிக் கொடுப்பது நம் வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

உங்களால் முடிந்தவரை தினமும் ஒரு அகத்திக் கீரை கட்டை வாங்கி ஒரு பசு மாட்டிற்கு கொடுத்தால் தவறு கிடையாது. அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு வாங்கிக் கொடுப்பது நமக்கு நிறைய நல்ல பலன்களை கொடுக்கும். வாரம் தொடங்கக்கூடிய முதல் நாள், சூரிய பகவானுக்கு உரிய நாளான அன்றைய தினம், இந்த பரிகாரத்தை செய்தால், அந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நன்மை நிறைய நடக்கும்.

- Advertisement -

இதே அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு வாங்கிக் கொடுப்பதோடு இல்லாமல் சிறிதளவு வீட்டிற்கு வாங்கி வந்து உங்களுடைய உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். அசைவம் சாப்பிடாமல் ஞாயிற்றுக்கிழமை அகத்திக் கீரையை சாப்பிட்டு வந்தால் தீராத துன்பமும் ஒரு சில வாரங்களில் தீர்ந்துவிடும். எவ்வளவு பெரிய கஷ்டம் தரக்கூடிய சோதனையையும் சீக்கிரமாக சரி செய்து விடலாம்.

செவ்வாய்க்கிழமை அகத்திக் கீரையை உங்கள் கையால் பசு மாட்டிற்கு வாங்கி கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். வெள்ளிக்கிழமை அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு வாங்கி கொடுத்தால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு மட்டுமல்லாமல் வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் துவரம் பருப்பு சேர்த்த சமையலை உங்களுடைய வீட்டில் கட்டாயம் செய்ய வேண்டும். இது வீட்டிற்கு அவ்வளவு சுபிட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய மொச்சையை தண்ணீரில் போட்டு ஊற வைத்து கொஞ்சமாக வெள்ளம் போட்டு பிசைந்து பசு மாட்டிற்கு கொடுப்பது குடும்பத்தில் சந்தோஷத்தை இரட்டிப்பாக அதிகரிக்கும்.

நம்முடைய பயன்பாட்டில் அகத்திக்கீரை என்பது அமாவாசை அன்று மட்டும்தான் இருக்கிறது. மாதத்தில் ஒரு நாள் இந்த அகத்திக் கீரையை பயன்படுத்தும் போதே அவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்றால் தினந்தோறும் அகத்திக் கீரையை வாங்கி பயன்படுத்தும் போது எண்ணிலடங்காத நன்மைகள் வரிசை கட்டி நடக்கத் தொடங்கி விடும். அகத்திக் கீரையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு இனி தினம் தினம் அதை வாங்குவதற்கு பத்து ரூபாய் செலவழியுங்கள். பல மடங்கு வருமானம் பெருகுவதோடு, பல வகையான கஷ்டங்களும் உங்களை விட்டு தூர ஓடிவிடும் என்ற இந்த தகவலுடன் இன்றைய இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -