வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்தது ஐஸ்வர்யம் பெருக பெண்கள் இதனை செய்தால் மட்டும் போதும்

bangle
- Advertisement -

நமது தமிழ் மரபின் படி பெண் என்றாலே தெய்வமாக தான் பார்க்கப் படுகிறார்கள். தெய்வங்களிலும் பலவித பெண் தெய்வங்கள் தான் இடம்பெறுகின்றன. அவ்வாறு வாழ்வின் ஆதாரமாக விளங்கும் நீரூற்றுகளான ஆறுகளுக்கும் பெண்களின் பெயர்கள் தான் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பெண்கள் என்பவர்கள் ஐஸ்வர்யம் நிறைந்தவர்களாகவும், தலைமுறையை தழைக்க வைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் ஆணை விட பெண்களுக்கு தான் சிறப்புகள் அதிகம் இருக்கின்றது. எனவே தான் வீட்டை ஆளும் பொறுப்பு இன்றளவும் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. ஆனால் இன்றைய காலத்துப் பெண்கள் தாங்கள் செய்யும் சிறு தவறுகளால் ஐஸ்வர்யத்தை இழந்து குடும்பத்தின் கஷ்ட நிலைமைக்கு காரணமாகி விடுகின்றனர். அவ்வாறு பெண்கள் செய்யும் தவறுகள் என்ன? அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

Durgai amman

ஒவ்வொரு வீட்டிற்க்கும் முதுகெலும்பாக இருப்பவர்கள் பெண்கள் தான் . என்னதான் ஆண்கள் சம்பாதித்து குடும்பத்திற்காக உழைத்தாலும் ஒரு வீட்டில் பெண் இல்லை என்றால் அந்த ஆணிற்கும் பலம் இல்லாமல் போய்விடும். அவ்வாறு ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பெண்கள் தான். இவ்வாறு பெண்களின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.

- Advertisement -

நமது முன்னோர்களின் கூற்றுப்படி பெண்களின் கையில் பணம் கொடுத்தால் அது பலமடங்காக பெருகும் என்பதற்காகத்தான் அவர்களிடம் குடும்பத்தின் நிதிப் பொறுப்பு அனைத்தும் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்து பெண்களிடம் பணம் கொடுப்பதால் வீட்டிற்கு நிதிப் பற்றாக்குறைதான் உருவாகிறது. இதற்கு காரணம் அவர்களையும் அறியாமல் அவர்கள் செய்யும் தவறுதான்.

cash

நமது பாட்டி காலத்தில் உள்ளவர்கள் அனைவரும் கையில் கண்ணாடி வளையல் அணிந்து இருப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறையினரோ பிளாஸ்டிக், அலுமினியம், மெட்டல் இதுபோன்ற வளையல்களை அணிந்து கொள்கின்றனர். இதற்கு காரணம் அந்த வளையங்கள் பல வித டிசைன்களில் இருப்பதுதான். அழகிற்காக மட்டுமே இன்றைய காலத்துப் பெண்கள் வளையல்களை அணிந்து கொள்கின்றனர்.

- Advertisement -

ஆனால் நமது முன்னோர்கள் கண்ணாடி வளையல் அணிந்து இருந்ததற்கு பலவித காரணங்கள் இருக்கின்றன. வளையலின் ஓசைக்கு மகாலட்சுமி நம் அருகிலேயே இருப்பார்கள். எப்பொழுதும் நமது வீடு ஐஸ்வர்யம் நிறைந்ததாக இருக்கும். அந்த கண்ணாடி வளையல் ஓசை நமது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

bangles

இப்பொழுதும் கூட பெண்களுக்கான சடங்குகள் என்றால் அதாவது பூப்பெய்வது, சீமந்தம், திருமணம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் அதுமட்டுமல்லாமல் இறை வழிபாட்டிற்கான பூஜை அலங்காரம் அனைத்திற்கும் இந்த கண்ணாடி வளையல்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. நாகரிகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்த போதிலும் இவ்வாறான சடங்குகளுக்கு கண்ணாடி வளையல்களை தவிர வேறு எந்த வளையலையும் யாரும் பயன்படுத்துவதில்லை. இவை ஒன்றே கண்ணாடி வளையல்களின் பெருமைக்குச் சான்றாகும்.

gold3

கையில் வளையல் அணிந்து கொண்டு பணத்தைக் கையில் வாங்கும் பொழுது அந்த பணம் பன்மடங்காகப் பெருகும். அவ்வாறு கடனை திருப்பிக் கொடுப்பதாக இருந்தாலும் கண்ணாடி வளையல் அணிந்த கையுடன் திருப்பிக் கொடுத்தோம் என்றால் அந்த கடன் விரைவாக கரைந்துவிடும். இவ்வாறு நகை வாங்கச் செல்லும் பொழுதும் கண்ணாடி வளையல் அணிந்து இருந்தாலும் நாம் வாங்கும் நகை நிரந்தரமாக நம்மிடம் தங்கும். அவை பல மடங்காகப் பெருகும். இவ்வாறு பல வகைகளில் ஐஸ்வர்யத்தை நமக்கு சேர்க்கும் கண்ணாடி வளையலை பெண்கள் தவறாமல் தங்கள் கைகளில் அணிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -