பெண்களிடன் ஐஸ்வர்யம் குறைய இந்த 5 விஷயங்களும் காரணமாம் தெரியுமா? ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

aishwaryam
- Advertisement -

ஒரு குடும்பத்தில் ஐஸ்வர்யம் என்பதை சகல, சவுபாக்கியங்களையும் கொடுக்கக் கூடிய ஒரு விஷயமாக பார்க்கபடுகிறது. ஐஸ்வரியம் என்பது வீட்டில் இருக்கும் பெண்கள் மூலம் வரக் கூடியது ஆகும் என்பதால் இதில் பெண்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படுகிறது. பெண்கள் செய்யும் சாதாரண விஷயங்களில் கூட ஐஸ்வர்யம் வந்து ஒட்டிக் கொண்டு விடும். எல்லா காலகட்டத்திலும் ஐஸ்வர்யம் பெண்களிடம் வந்து சேர்வதில்லை. குறிப்பிட்ட காலத்தில் வரக்கூடிய இந்த ஐஸ்வர்யத்தை பெண்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஐஸ்வர்யம் குறைய பெண்கள் செய்யும் இந்த சில விஷயங்களும் காரணமாக இருக்கின்றன. இந்த ஐஸ்வர்யத்தை தக்க வைத்துக் கொள்ள பெண்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது போன்ற ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mahalakshmi1

ஐஸ்வர்யம் பெருக ஒரு பெண் முதலில் சுத்தமான ஆடை தரித்திருக்க வேண்டும். ‘கந்தையானாலும் கசக்கி கட்டு’ என்று சொல்வார்கள். பழைய துணியாக இருந்தாலும் பரவாயில்லை, சாயம் போன வெளுத்த துணியாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் கிழிந்த துணிமணிகளை ஒருபொழுதும் பெண்கள் அணியக் கூடாது. கிழியும் நிலையில் இருக்கும் துணிமணி, கிழிந்த துணி மணிகளை ஒரு பெண் அணிந்து கொண்டால் அங்கு ஐஸ்வர்யம் குறைந்து விடுகிறது.

- Advertisement -

குடும்பத்தில் இருக்கும் பெண்களை இப்படி கிழிந்த துணிகளை போடும் வரை வேடிக்கை பார்க்கும் ஆண்களுக்கும் பணவரவு என்பது தடைபடுகிறது. எனவே இதில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. ஐஸ்வர்யம் பெருக பெண்களின் உடை கிழிந்து இருக்கக் கூடாது. சில சமயங்களில் நன்றாக இருக்கும் துணியில் நெருப்பு பட்டு ஓட்டையாகி விடும் அல்லது எங்காவது ஆணியில் மாட்டி கிழிந்துவிடும். இப்படி நல்ல வஸ்திரம் கிழிந்தால் அந்த துணியை கண்டிப்பாக நீங்கள் பயன்படுத்த கூடாது. வஸ்திரத்திலும் தோஷம் உண்டு எனவே வஸ்திரத்தை சரியாக அணியும் பெண்களிடம் ஐஸ்வர்யம் வர வேண்டிய நேரத்தில் வந்து சேரும்.

green saree

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் கட்டாயம் பெண்கள் நகத்தை வெட்ட கூடாது. புருவத்தை திருத்தக் கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் பெண்களிடம் கட்டாயம் ஐஸ்வரியம் வந்து சேர்வதில் தடை ஏற்படும். எனவே ஐஸ்வர்யத்தை தடை செய்யும் இந்த சில விஷயங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதே போல ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் உண்டு.

- Advertisement -

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள் எனவே பெண்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றால் அங்கே இருக்கும் கோபுரத்தை பார்த்து தரிசனம் செய்து கொள்ள வேண்டும். இதனால் உங்களிடம் ஐஸ்வரியம் மேலும் பெருகும். கோபுரம் இல்லாத குலதெய்வக் கோவில்களில் மூலவருக்கு மேலே இருக்கும் எந்த ஒரு விஷயமும் கோபுரம் தான் எனவே அவற்றை தரிசனம் செய்து வணங்கினால் கோபுரத்தை வணங்கிய கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும். இதனால் உங்களிடம் சேர வேண்டிய ஐஸ்வர்யமும் வந்து சேரும் என்பது ஐதீகம்.

temple

பெண்கள் கட்டாயம் வெள்ளிக் கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து வந்தால் ஐஸ்வரியம் பெருகும் என்பதும் நம்பிக்கை. எனவே வெள்ளிக் கிழமைகளில் தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்களிடம் வர வேண்டிய ஐஸ்வரியம், வர வேண்டிய நேரத்தில் தானாகவே வந்து சேரும். இதனால் குடும்பத்தில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -