நம் உடம்போடு ஒட்டி இருக்கும் அமானுஷ்யமான கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க ஒரே 1 எலுமிச்சம் பழம் போதும். லட்ச ரூபாய் செலவு செய்து சரி செய்ய முடியாத பிரச்சனைக்கு கூட சீக்கிரம் ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

சில பிரச்சனைகளுக்கு எல்லாம் லட்சம் லட்சமாக பணத்தை செலவு செய்தாலும் அதற்கு உண்டான சரியான தீர்வு என்பது கிடைக்காது. எல்லா விஷயத்தையும் மருத்துவத்தால் மட்டுமே சரி செய்யவும் முடியாது. உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. சிறிய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும். மருத்துவரை பார்த்து ஆயிரக்கணக்கில் மருந்து வாங்கி கொடுத்திருப்போம். ஆனால் சரியாகி இருக்காது. மசூதிக்கு கொண்டு போய் மந்தரித்து ஒரு தாயத்து போட்டு வந்தால் அந்த குழந்தையின் உடல்நிலை சரியாகிவிடும். இந்த நம்பிக்கை காலம் காலமாக நம்மிடம் இருந்து வருகிறது. இதை சில பேர் நம்புவார்கள். சில பேர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் பிரச்சினையை அனுபவித்து, சரியானவர்களுக்கு தெரியும். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி இந்த பூமியில் இருப்பது உண்மைதான் என்பது.

இது போன்ற கண்ணுக்குத் தெரியாத பிரச்சனைகள் என்று பார்த்தால் நிறைய இருக்கிறது. காத்து கருப்பு சேஷ்டை, கண் திருஷ்டி, ரோட்டில் செல்லும் போது தேவையில்லாத அடுத்தவர்களுடைய கழிப்பை தாண்டுவது, போன்ற பிரச்சனைகளில் நாம் சிக்கிவிட்டால் நமக்கும் பல பிரச்சனைகள் வந்து தொற்றிக் கொள்ளும். நன்றாக இருந்த உடல்நிலை சரியில்லாமல் போகும். சுறுசுறுப்பாக வேலை செய்தவர்களால், வேலை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று வேலை போகும். பணக்கஷ்டம் ஏற்படும். முகம் பேய் அடைந்தது போல இருக்கும். இப்படி தொடர்ந்து பாதிப்புகள் ஒருவருக்கு வருகிறது என்றால் காரணம் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தி தான். இதை சரி செய்ய எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு சின்ன தாந்திரீக பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

கரும்புள்ளிகள் இல்லாத ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சம் பழத்தை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பூஜையறையில் இந்த பிரார்த்தனையை செய்யலாம். என்னுடைய உடலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தி அல்லது கண் திருஷ்டி அல்லது காத்து கருப்பு போன்ற செய்வினைப் பிரச்சினை எது இருந்தாலும், அது வெளியேறிவிட வேண்டும். என்னுடைய உடல்நிலை பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும். நான் எப்போதும் போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். என்று மனதார சொல்லுங்கள். கையில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை ஒரு நாள் முழுவதும் உங்கள் உடம்பில் படும்படி வைத்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றில் தொப்புள் பகுதியில் எலுமிச்சம் பழத்தை வைத்து விட்டு, ஒரு துண்டு போட்டு கட்டிக் கொண்டாலும் சரி. 24 மணி நேரம் இந்த எலுமிச்சம் பழம் உங்கள் உடம்போடு உரசி இருக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து கொண்டாலும் சரி அல்லது ஒரு கவரில் போட்டுக் கொண்டாலும் சரி , அந்த எலுமிச்சம் பழத்தை கொண்டு போய் ஊருக்கு ஒதுக்க பக்கமாக முடிந்தால் மண்ணைத் தோண்டி புதைத்து விட்டு வரலாம். முடியவில்லை என்றால் கால் படாத இடத்தில் தூரமாக தூக்கிப்போட்டு விட்டு வந்துவிடலாம். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் எந்த நாளில் வேண்டும் என்றாலும் செய்யலாம். மாதம் ஒருமுறை அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும். (அமாவாசை நாள் முழுவதும் இந்த எலுமிச்சம் பழம் உங்கள் உடம்போடு உரசி இருக்க வேண்டும். அடுத்த நாள் கொண்டு போய் தூக்கி போடுங்கள்.)

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது. நாள்தோறும் நாம் வெளியிடங்களுக்கு செல்லும்போது நம்முடைய உடம்பில் கண்ணுக்கு தெரியாமல் சில கெட்ட சக்திகள் ஊடுருவத்தான் செய்யும். அதை விரட்டி அடிக்க வேண்டும் என்றால் மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் அவசியம் தேவை. ரொம்பவும் சிறிய குழந்தைகள் பயந்து பயந்து இரவில் அழுகிறது என்றால் இப்படி ஒரு எலுமிச்சம் பழத்தை வேண்டி அந்த குழந்தை தூங்கும் போது தலையணைக்க அடியில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை அந்த எலுமிச்சம்பழத்தை கொண்டு போய் தூர போட்டுவிட்டு வந்து விடுங்கள். குழந்தை தெளிவாக மாறிவிடும்.

கண்ணுக்குத் தெரியாத எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய சக்தி இந்த ஒரு சின்ன எலுமிச்சம்பழத்துக்கு உள்ளது. நீங்கள் என்ன நினைத்து இந்த எலுமிச்சம்பழத்தை கையில் வைத்து பிரார்த்தனை செய்து கொள்கிறீர்களோ அதை அப்படியே உங்களுக்கு செய்து தரும் அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த எலுமிச்சை பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். வாழ்வில் வரக்கூடிய மாற்றத்தை உங்களால் உணர முடியும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -