அமாவாசையில் குலதெய்வ பூஜை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது? அமாவாசை வழிபாடு இப்படி செய்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?

amavasai-kuladheivam
- Advertisement -

ஒவ்வொரு அமாவாசைக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் விசேஷமான சக்திகள் நிறைந்து காணப்படும் என்பது நியதி. அமாவாசை போல பௌர்ணமியிலும் பிரபஞ்ச சக்தி அதிகரித்து காணப்படும். அமாவாசையில் வழிபடும் வழிபாட்டு முறைகள் விசேஷமான பலன்களைத் கொடுக்கின்றன. ஒவ்வொரு அமாவாசையிலும் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? அன்றைய நாளில் குலதெய்வ பூஜையை வீட்டிலேயே எப்படி எளிதாக செய்வது? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்வோம் இப்பதிவை!

amavasai1

வளர்பிறை, தேய்பிறை என்று ஒவ்வொரு மாதமும் மாறி மாறி வரும் சுழற்சி முறையில் அமாவாசையில் குலதெய்வ வழிபாடு, பித்ரு வழிபாடு போன்றவை செய்யப்பட்டு வருகின்றன. அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் ஏற்படும்.

- Advertisement -

எனவே தவறாமல் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உங்கள் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து எளிதாக வீட்டிலேயே கூட பூஜை செய்து கொள்ளுங்கள். பித்ரு எனப்படும் நம் முன்னோர்கள் அமாவாசை தினத்தில் நம் வீட்டு வாசலில் வந்து நிற்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் இட்டு பின்னர் காகத்திற்கு முதல் உணவிட்டால் சிறப்பான பலன்களை தரும். அவர்களின் ஆசியை முழுமையாக நமக்கு கிடைக்க செய்யும்.

amavasai

அமாவாசையில் உணவேதும் உண்ணாமல் தினமும் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அமாவாசை விரதம் இருக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் புலால் உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை ஒளியின் போது புலால் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு உண்ணாமல் இருப்பது நல்லது மேலும் அதில் பூண்டு, வெங்காயம் போன்ற பொருட்களை சேர்த்த சைவ உணவையும் சேர்த்து தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சாப்பிட கூடாத பொருட்கள் இது ஆகும்.

tharpanam1

வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிப்பதும் அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும். பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கவும், குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

pongal-panai

ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.

- Advertisement -