ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் அமாவாசை தினமான இன்று இரவு இப்படி திருஷ்டி கழித்தால், உங்கள் குடும்பத்தை பிடித்த கண் திருஷ்டி கெட்ட சக்தி அனைத்தும் படபடவென வெடித்து சிதறிவிடும்.

amavasai
- Advertisement -

இன்று அமாவாசை. அதிலும் மகாளய அமாவாசை என்பது மிக மிக சிறப்பு வாய்ந்த நாள். இன்றைய தினம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் வழிபாட்டு முறைகளை தவறாமல் செய்து விடுங்கள். அது உங்கள் குடும்பத்திற்கு நன்மையை கொடுக்கும் என்று நம்முடைய சாஸ்திரம் சொல்கிறது. சாஸ்திரம் சொல்லுவதை பின்பற்றுபவர்கள், நிச்சயம் சாதிக்கப் பிறந்தவர்கள் ஆகத்தான் இருப்பார்கள். இன்றைய தினம் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வதோடு, குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வதோடு, சேர்த்து கண் திருஷ்டி கழிக்க கூடிய வேலையையும் கட்டாயம் செய்து விட வேண்டும்.

ஒரு குடும்பத்திற்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் இந்த கண் திருஷ்டியை கழிப்பது. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையில் கண் திருஷ்டி கழிக்கலாம். அப்படி முடியாதவர்கள் மாதம் வரக்கூடிய அமாவாசை தினத்தில் ஆவது கட்டாயம் கண் திருஷ்டி கழிக்க வேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்ந்து வந்திருக்கும் மஹாளய அமாவாசை. இந்த நாளை தவிர விடாதிங்க. உங்களுக்கு தெரிந்த படி, உங்கள் வீட்டின் வழக்கப்படி திருஷ்டியை கழித்து கொள்ளலாம். தவறு கிடையாது. அப்படி இல்லை என்றால் உங்களுக்கு சக்தி வாய்ந்த திருஷ்டி கழிக்கும் முறை ஒன்று இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பலன் பெறுங்கள்.

- Advertisement -

இந்த திருஷ்டியை கழிப்பதற்கு நமக்கு தேவையான பொருள் வெண் கடுகு, பச்சை கற்பூரம். கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு சதுர துணி. ஒரு ஸ்பூன் அளவு வெண்கடுகை எடுத்து, கருப்பு நிற துணியில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளேயே பச்சை கற்பூரத்தையும் வைத்து சிறிய முடிச்சு போல கட்டிக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சை வலது கையில் வைத்துக்கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு திருஷ்டியை சுற்றுங்கள்.

வீட்டில் இருப்பவர்களை எல்லாம் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்துவிட்டு, வீட்டில் மூத்தவர் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். பிறகு இந்த முடிச்சை ஒரு சிறிய மண் அகல் விளக்கில் வைத்து இதன் மேலே நல்லெண்ணெயை ஊற்றி நெருப்பு மூட்டி விடுங்கள். இதை வாசலுக்கு வெளியில் வைத்து தான் நெருப்பு மூட்ட வேண்டும். வீட்டிற்கு உள்ளேயே பற்ற வைக்க கூடாது.

- Advertisement -

அமாவாசை இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை மாதம் தோறும் செய்து கொள்ளலாம். உங்களை பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் இந்த வெண் கடுகின் உதவியை கொண்டு படபடவெனப் பொரிந்து வெடித்து விடும். சில பேருடைய தொழில் நிறுவனங்கள் கூட சரியாக நடக்காது. நஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உங்களுடைய கடை, தொழிற்சாலை, அலுவலகம் இப்படிப்பட்ட இடங்களிலும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: செய்த பாவக் கருமங்கள் தீர தினமும் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து வழிபடுங்கள்!

வேலை செய்யக்கூடிய இடத்தில் இப்படி இந்த பரிகாரத்தை செய்யும் போது கொஞ்சம் பெரிய துணியில், ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை போட்டு கொள்ளுங்கள். கொஞ்சம் பெரிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிலை வாசலுக்கு வெளியே வந்து இந்த முடிச்சை கையில் வைத்துக் கொண்டு, அப்படியே உங்களுடைய கடையை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். பூசணிக்காய் சுற்றுவது போலவே தான். ஆனால் உங்கள் கையில், நீங்கள் தயார் செய்த இந்த வெண்கடுகு முடிச்சு இருக்க வேண்டும். திருஷ்டி கழித்த பின்பு இந்த முடிச்சை கடைக்கு வாசலில் வைத்து நெருப்பு மூட்டி விடுங்கள். அவ்வளவுதான். கண் திருஷ்டியால் உங்களுக்கு வந்த கஷ்டங்கள் அனைத்தும் இந்த நெருப்போடு பொசுங்கிவிடும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -