பாவம் நீங்க தானம்

amavasai thanam
- Advertisement -

இன்று நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நம்முடைய பாவ புண்ணியங்களளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் தான் இந்த ஜமாத்தில் நம்முடைய வாழ்க்கையை துன்பமாக நடத்துவதும் இன்பமாக நடத்துவதற்கும் காரணமாக அமைகிறது இதை தான் கர்ம வினை என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த பிறவியில் நாம் செய்யக் கூடிய பாவங்கள் முன் ஜென்ம கர்மாக்களில் இருந்தும் முழுமையாக விடுபட பல ஆன்மீக வழிமுறைகள் இருந்தாலும், அமாவாசை அன்று செய்யக் கூடிய சில வழிமுறைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாம் பெற்றோர்களின் ஆசியையும் ஒரு சேர பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.

- Advertisement -

அப்படியான இந்த நாளில் நாம் செய்யக்கூடிய இந்த ஒரு செயல் நம்முடைய அனைத்து தோஷம, பாவம், கர்மா நீங்கி பித்ருக்கள் ஆசி அனைத்தும் பெற்றுத்தரும் அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாவம் கர்மா குறைய தானம்

இன்று வைகாசி மாதத்தின் மாதத்தின் அமாவாசை. இந்த அமாவாசை திதியில் நம் வீட்டில் இருந்தவருக்கு திதி கொடுப்பது நமது குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்க வழி வகுக்கும். இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்துடன் சேர்த்து இந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் என்று ஆன்மீகம் சார்ந்த குறிப்புகள் சொல்லப்படுகிறது.

- Advertisement -

அது வேறொன்றும் இல்லை தானம் தான் இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய தானமானது நம்முடைய அத்தனை பாவங்களையும் கர்மாக்களையும் தீர்க்கும் அந்த தானத்தை நீங்கள் பசு மாட்டிற்கு தான் செய்ய வேண்டும். ஏனெனில் பசுவில் தான் 30 முக்கோடி தெய்வங்களும் வாசம் செய்ததாக சொல்லப்படுகிறது. அப்படியான பசு மாட்டிற்கு இன்றைய தினத்தில் அகத்தி கீரை, வாழைப்பழம், பச்சரிசி இவை மூன்றில் ஏதேனும் ஒன்றை தானமாக கொடுக்க வேண்டும்.

இதை செய்யும் பொழுது உங்களுடைய கர்மாக்கள் நிச்சயம் குறையும் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் காகத்திற்கு இன்றைய தினம் வெள்ளை சாதத்தில் தயிர் எள் கலந்து வைக்க வேண்டும். இது நம்முடைய பித்ருக்களின் ஆசியை முழுமையாக நமக்கு பெற்றுத் தரும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர்த்து இன்றைய நாளில் குலதெய்வ வழிபாடு செய்வது நம்முடைய குலத்தை மேலும் தழைக்க செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

இவைகளை செய்வதோடு மட்டும் அல்லாமல் இன்றைய தினத்தில் இயலாதவருக்கு அன்னதானம் செய்வது நம்முடைய அத்தனை பாவங்களையும் கரைக்க கூடியதாக அமையும் இன்றி சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி சனியின் தோஷத்தால் துன்படுபவர்களும் இன்றைய தினத்தில் உடல் ஊனமுற்றோர்களுக்கு அல்லது படித்து வசதி இல்லாதவர்களுக்கு படிக்க ஏதேனும் உதவி செய்வது பெரும்பயனை பெற்றுத் தரும் என்று சொல்லப்படுகிறது.

நாம் செய்யும் எந்த காரியங்களாக இருப்பினும் அது செய்யக் கூடிய நாளை பொறுத்து அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் நான் இந்த டாமி செய்யக் கூடிய இந்த தானங்களும் உதவிகளும் நம்முடைய வாழ்க்கையை மேலும் செம்மையாக வாழ உதவி புரியும்.

இதையும் படிக்கலாமே: பணம் சேர பணப்பெட்டி ரகசியம்

இந்த வழிமுறைகளில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இவைகளை பின்பற்றி வாழ்க்கையில் நல்ல முறையில் முன்னேறலாம் என்ற இந்த கருத்துடன் பதிவினை முடிவு செய்து கொள்வோம்.

- Advertisement -