நாளை தீபாவளி தினத்தன்று வரும் அமாவாசை திதியில் இவற்றை செய்தால் என்ன பலன்கள் தெரியுமா?

Deepavali
- Advertisement -

சூரிய பகவான் தட்சிணாயனம் என்கிற தென் திசை நோக்கிய பயணத்தில் துலாம் ராசியில் பிரவேசிக்கும் மாதமே ஐப்பசி மாதம் எனப்படுகிறது. நமது வேத சாஸ்திரங்கள் ஒரு வருடத்தில் மொத்தம் 96 தர்ப்பணங்கள் இருப்பதாக கூறுகின்றன. தமிழ் வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், அமாவாசை, மகாளய அமாவாசை உட்பட 96 தர்ப்பணங்களையும் ஒருவர் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அந்த சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. நாளை ஐப்பசி மாதத்தில் அதுவும் தீபாவளி தினத்துடன் சேர்ந்து அமாவாசை திதி பிறக்கிறது. மிக அற்புதமான அன்றைய தினத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Diwali

இந்திய ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரக நாயகர்களில் ஒருவரான “சனீஸ்வர பகவான்” என்பவர் ஒரு நபர் தனது முற்பிறவி மற்றும் தற்போதைய பிறவியில் செய்கின்ற பாவங்களுக்கு ஏற்ற தண்டனையை வழங்க கூடிய ஒரு கிரகமாக திகழ்கிறார். சிவபெருமானுக்கு அடுத்து ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே நவகிரகம் சனீஸ்வரன் ஆவார். ஒருவருக்கு வரக்கூடிய கேடு காலம் என்னும் கெட்ட நேரத்தில் அவர்கள் வாழ்வில் அவர்களை படாதபாடு படுத்தக் கூடிய செயலை இறைவனின் ஆணைக்கிணங்க விருப்பு, வெறுப்பின்றி செய்து வருகிறார் சனீஸ்வர பகவான்.

- Advertisement -

அத்தகைய சனீஸ்வர பகவானின் ஆற்றல் அதிகம் நிறைந்திருக்கும் ஒரு நாளாக சனிக்கிழமையில் வருகின்ற அமாவாசை தினம் திகழ்கிறது. பொதுவாக அமாவாசை தினங்களில் ஆண்கள் யாரும் தலைக்கு தேய்த்து குளிக்க கூடாது எனக் கூறப்படுவதுண்டு. ஆனால் தற்போது வருகின்ற தீபாவளி அமாவாசை சனிக்கிழமை அன்று வருவதால் அன்றைய தினம் நிச்சயமாக அனைவரும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். ஐப்பசி மாத அமாவாசை திதியில் பிறக்கின்ற தீபாவளி தினத்தன்று பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4 முதல் 6 மணிக்குள்ளான நேரத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து கங்கா ஸ்னாநம் எனப்படும் கங்கை நதியை மானசீகமாக வழிபட்டு குளிக்கும் முறையை பின்பற்ற வேண்டும். இப்படி குளிப்பதால் நம் ஜாதகத்தில் நம்மை பீடித்திருக்கும் ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, பாத சனி போன்ற சனி பகவானின் கிரகாச்சாரத்தின் கடுமைதன்மை குறையும். தரித்திர நிலை நீங்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

pithru dhosam

குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். நாளை வருகின்ற அமாவாசை தீபாவளி தினத்தில் வருவதாலும், சில பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் ஊரடங்கு காரணமாகவும் வெளியில் சென்று திதி, தர்ப்பணம் கொடுக்க முடியாத நிலை சிலருக்கு ஏற்படுகிறது. அத்தகைய நிலையிலிருப்பவர்கள் தங்கள் வீட்டில் லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக உங்கள் குலதெய்வத்தையும், மறைந்த உங்கள் பரம்பரையின் முன்னோர்களையும் மானசீகமாக வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

- Advertisement -

குளம்,ஆறு,கடற்கரைகள் போன்றவற்றிற்கு தர்ப்பணம் அளித்தவர்கள், வீடு திரும்பியதும், வீட்டிலிருக்கும் மறைந்த முன்னோர்களின் படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து, தூபங்கள் கொளுத்தி வணங்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் நோய்களால் பாதிக்கப்பட்டு உடல்நலம் தேறுபவர்கள் ஐப்பசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் அல்லது எலுமிச்சை பழம் வாங்கி வாங்கி, அதன் மீது கற்பூரம் கொளுத்தி உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய பூசணிக்காயை உடைத்தும், எலுமிச்சம் பழத்தை நசுக்கியும் திருஷ்டி கழித்திட வேண்டும். பிறகு உங்கள் தொழில், வியாபார கூடங்களில் புத்தம் புதிய நோட்டில் புது கணக்கு எழுதுவதால் குபேரன், லட்சுமி தேவியின் அருள்கிடைத்து லாபங்களை பெருகச் செய்யும்.

kuberan

ஐப்பசி மாதம் இறை வழிபாடு மேற்கொள்ளதக்க ஒரு சிறப்பான மாதமாக இருக்கிறது. அதிலும் இந்த ஐப்பசி மாதத்தில் தீபாவளி தினத்தன்று வருகிற அமாவாசை தினத்தில் மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் வீட்டில் தரித்திர நிலை நீங்குவதோடு, சுபிட்சங்கள் பெருகும். தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதம் ஆகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்களுக்கு பித்ருக்களின் ஆசிகளால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். குடும்பத்தில் நிலவி வந்த நிம்மதியற்ற நிலை , பிறருடனான விரோதங்கள் போன்றவை தீர்ந்து நிம்மதி கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

- Advertisement -