அம்மனுக்கு இந்த 1 பொருளை கொண்டு அர்ச்சனை செய்தால், எவ்வளவு பெரிய பண கஷ்டத்திற்கும் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும். வீட்டில் சகல சௌபாக்கியமும் நிறைவாக இருக்கும்.

amman2
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் மனிதர்கள் எவ்வளவு பெரிய பண கஷ்டத்தில் எல்லாம் சிக்கி, என்ன பரிகாரம் செய்வது என்று தேடி தவித்து வருகிறார்கள். ஆனால், எவ்வளவு பெரிய பண கஷ்டமாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும், அதை குறைக்கக்கூடிய சக்தி அம்பாள் வழிபாட்டிற்கு உண்டு. அம்மனை நினைத்து மனம் உருகி, இந்த ஒரு பொருளை கொண்டு அர்ச்சனை செய்து வந்தாலே போதும். அந்த அம்பாள் உங்களுக்கு கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து விடுவாள். வீட்டில் குறைவில்லாத செல்வ வளத்தைப் பெற அம்மன் வழிபாட்டை எந்த மந்திரத்தை சொல்லி, எப்படி மேற்கொள்வது என்பதைப்பற்றிய விரிவான பதிவு உங்களுக்காக.

amman

இந்த வழிபாட்டை செய்வதற்கு வீட்டில் நிச்சயமாக ஒரு சிறிய அளவில் அம்மன் சிலை இருக்க வேண்டும். எந்த அம்மனின் சிலையாக இருந்தாலும் பரவாயில்லை. எந்த உலோகத்தில் இருந்தாலும் பரவாயில்லை. அம்மன் சிலையாக இருப்பது மிகவும் சிறப்பு. அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்தபடியாக அந்த அம்மன் சிலையை ஒரு சிறிய தாம்புல தட்டில் வைத்து, அம்மனுக்கு சந்தன குங்கும பொட்டு வைத்து, வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பூஜை அறையில் இந்த அம்மன் சிலையை வைத்துவிட்டு, இந்த சிலைக்கு முன்பு நீங்களும் அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் மணக்க மணக்க தாழம்பு குங்குமத்தை வைத்துக்கொள்ள வேண்டும். இந்த குங்குமத்தை ஒவ்வொரு சிட்டிகையாக எடுத்து அம்மனின் சிரசு மேல், அதாவது தலையின் மேல் போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

kungumam

உங்களுடைய மோதிர விரல் கட்டை விரல் இரண்டு விரலில் குங்குமத்தை எடுத்து அம்மனின் தலையில் அப்படியே மெதுவாக அபிஷேகம் செய்வது போல போடுங்கள். இப்படி ஒவ்வொரு முறை குங்கும அர்ச்சனை செய்யும் போதும் ‘ஓம் ஸ்ரீ வரவர சுவாகா’ என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். 108 முறை இந்த மந்திரத்தை சொல்லி அர்ச்சனையை செய்ய வேண்டும்.

- Advertisement -

வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை வீட்டில் தவறாமல் செய்து வர, நிச்சயமாக வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வழியில் விமோசனம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீட்டும் நடக்கும். அம்பாள் மெய்சிலிர்த்து உங்களுக்கு வரங்களை அள்ளித் தருவாள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பூஜை இது. சுலபமான பூஜை தானே என்று நம்பிக்கை இல்லாமல் யாரும் செய்ய வேண்டாம். மன உறுதியோடு மனம் உருகி அம்மனுக்கு, முழு பக்தியை அர்ப்பணம் செய்து இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக கைமேல் பலன் உண்டு முயற்சி செய்து பாருங்கள்.

amman1

சக்தி தேவிக்கு இணையான சக்தி இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. தினமும் வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் இந்த பூஜை செய்தாலும் தவறு கிடையாது. முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை செய்யலாம். குங்கும அர்ச்சனை செய்கிறீர்கள் அல்லவா. அதற்கு தினமும் புது குங்குமத்தை தான் பயன்படுத்த வேண்டும். நிறைய குங்குமம் வீட்டில் சேர்ந்து விட்டால் அந்த குங்குமத்தை அருகில் இருக்கும் கோவிலுக்கு கொண்டு போய்க் கொடுக்கலாம். கோவில் குருக்கள் நீங்கள் கொடுத்த அந்த குங்குமத்தை அங்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு, பிரசாதமாக கொடுத்துவிடுவார். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -