அமாவாசை அன்று வாராஹி அம்மனை இப்படி வழிபாடு செய்தால் போதும். எதிரி தொல்லை, ஏவல், பில்லி, சூனியம், எதுவும் நம்மை நெருங்க கூட முடியாது.

Varahi-amman
- Advertisement -

நம்மை வாழவே விடக்கூடாது என்று நமக்குப் பின்னால் ஒரு கூட்டம் சுற்றி கொண்டுதான் இருக்கின்றது. அந்த கூட்டம் நமக்கு எதிராக நிறைய எதிர்மறை ஆற்றலை ஏவி விடுகின்றது. வயிற்றெரிச்சலுடன் பொறாமை எண்ணத்தோடு ஒரு பார்வை பார்த்தாலே போதும். அது நம்மை துரத்தி துரத்தி அடிக்கும். இது அல்லாமல் சில பேர், சிலர் நன்றாக இருக்கக் கூடாது என்பதற்காக வைப்புகளையும் செய்வினையும் செய்து வருகிறார்கள். நாம் என்ன விதைக்கிறோமோ, அது தான் முளைக்கும்.

நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லது நினைத்தால், உங்களுக்கு நல்லது நடக்கும். நீங்கள் அடுத்தவர்களுக்கு கெட்டது நினைத்தால் உங்களுக்கும் கெடுதல் தான் நடக்கப்போகின்றது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அடுத்தவர்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் உங்களை திருத்திக் கொள்வது நல்லது. உங்களுடைய எதிரியாகவே இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று முதலில் நீங்கள் நினைக்க வேண்டும். வாழ்க்கையில் நீங்கள் ஜெயிக்க இந்த எண்ணம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சரி பதிவுக்குள் செல்வோம்.

- Advertisement -

அமாவாசை தினத்தில் வாராஹி அம்மனை எந்த முறையில், எந்த மந்திரத்தை உச்சரித்து, வழிபாடு செய்தால் எதிரி பிரச்சனை, ஏவல், பில்லி, சூனிய, பிரச்னையில் இருந்து விடுபட முடியும் என்பதை பற்றிய விரிவான தகவலை தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

இந்த பரிகாரத்தை குறிப்பாக அமாவாசை தினத்தில் செய்ய வேண்டும். வாராஹி அம்மனை மனதார நினைத்து கொள்ளுங்கள். உங்களுடைய கையில் சிறிதளவு கடுகை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். வலது உள்ளங்கையில் வைத்து கடுகை மூடிக்கொள்ள வேண்டும். நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். ‘வாராஹி தாயே, அறிந்தும் அறியாமலும் நான் செய்த தவறுக்காக என்னை மன்னித்து விடவேண்டும்’. எதிரிகளின் சூழ்ச்சியால் எனக்கும் என் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. எதிரிகள் என் பக்கம் தலை வைத்து கூட படுக்க கூடாது. என்று மனதார நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். எதிரியால் ஏவிப் ஈடுபடும் எதிர்மறை ஆற்றலால் என் குடும்பத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு வாராஹி தாயின் இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான எதிரிகளை துவம்சம் செய்யும் வாராகி அம்மனின் மந்திரம் இதோ.

வாராஹி ஸ்தம்பனம்:
ஓம் வாராஹி ஓம் வாராஹி,
ஜீவாஹி ஜீவாஹி ஜீவ ஸ் தம்பாய அணுவாகி அனுப்பிரமானமாய்.

மந்திரத்தை உச்சரித்து முடித்துவிட்டு உங்கள் கையில் இருக்கும் கடுகை அப்படியே நெருப்பில் போட்டு விட வேண்டும். சிறிய தட்டில் கற்பூரம் கொளுத்தி கூட, அந்த கற்பூரத்தில் இந்த நெருப்பை போட்டுவிடலாம். அந்த கடுகு வெடித்து சிதறுவது போல உங்களுடைய எதிரி பிரச்சனைகளும் வெடித்து சிதறிவிடும். எதிரியின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம் வேண்டாம். எதிரிகள் உங்கள் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டார்கள். எதிரிகளால் ஏவிவிடப்பட்ட எதிர்மறை ஆற்றல்கள் உங்களை விட்டு விலகிச் சென்றுவிடும்.

சில பேருக்கு சில சொத்து விஷயங்களில் கூட, பிரச்சனை இருக்கும். நம்முடைய சொத்தை நம்மால் விற்க முடியாது. விற்க முடியாத அளவிற்கு சில விஷயங்களை, எதிரிகள் செய்து வைத்திருப்பார்கள். அப்படி உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால், விற்க முடியாத நிலமாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் வாகனமாக இருந்தாலும் சரி, அந்த இடத்தில் உங்கள் உள்ளங்கையில் கடுகை வைத்துக்கொண்டு அந்த இடத்திலேயே இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரித்து, கையிலிருக்கும் கடுகை, குறிப்பிட்ட அந்த இடத்தில் தூவி விட வேண்டும். இதையும் அமாவாசை தினத்தில் செய்யுங்கள். எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம் அது உங்கள் சவுகரியம். நிச்சயமாக வாராகி தாய் உங்கள் கஷ்டங்களுக்கு உண்டான தீர்வினை காட்டிக் கொடுப்பது மட்டும் உறுதி.

- Advertisement -