இழந்த பொன், பொருள், சொத்து, நகை, பதவி, மரியாதை எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக மீட்டெடுக்க அதி அற்புதம் வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.

sad
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்தது முதலிலிருந்தே எதுவுமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் கூட சந்தோஷமாகத் தான் வாழ்ந்திருப்பார்கள். ஆனால் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் ஓஹோவென வாழ்ந்து, வாழ்க்கையின் மறு கட்டத்தில் இருந்த பொருட்களை எல்லாம் இழந்து கஷ்டப்படுபவர்கள் துயரத்தை சொல்வதற்கு வார்த்தை இல்லை. அதாவது இப்படிப்பட்டவர்களை வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள். நன்றாக வாழ்ந்து கெட்டவன் மானம் மரியாதையோடு இந்த பூமியில் வாழ்வது மிக மிகக் கஷ்டமான ஒரு விஷயம். சரி, நம்முடைய கெட்ட நேரம் நம்முடைய உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து இப்போது கஷ்டப்பட்டு வருகின்றோம். அதற்கு என்ன செய்வது.

anaga-devi

இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டெடுக்க இழந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெறுவதற்கு, மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரும்பாடு படவேண்டும். நிச்சயமாக நம்பிக்கையோடு போராடினால் நாம் இழந்த அத்தனையையும் மீண்டும் மீட்டெடுத்து விடலாம். இதற்கு மிக மிக சுலபமான முறையில் ஆன்மீக ரீதியாக ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் விடாமுயற்சியோடு இந்த பரிகாரம் சேரும் போது விடாமுயற்சிக்கு சீக்கிரத்திலேயே நல்ல பலன் கிட்டும்.

- Advertisement -

வீட்டில் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டில், இரண்டு கைப்பிடி அளவு பச்சரிசியை பரப்பி கொள்ள வேண்டும். அதன் மேலே ஒரு தாமரைப் பூவை வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பூஜையை, பூஜை அறையில் செய்ய வேண்டாம் வரவேற்பறையில் செய்ய வேண்டும்.

anaga-devi1

இந்த தட்டின் முன்பு நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். முதலில் உங்களுடைய குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, அடுத்தபடியாக மகாலட்சுமியை மனதில் வைத்துக்கொண்டு ‘ஓம் அனக லட்சுமியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வெள்ளிக்கிழமை முழுவதும் இந்த தட்டு உங்கள் வீட்டு வரவேற்பறையில் இருக்கவேண்டும். சனிக்கிழமை இந்த தட்டில் உள்ள பொருட்களை கொண்டு ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும். ஓடும் ஆறு உங்கள் வீட்டின் அருகில் இல்லை என்றால் குளத்தில் போட்டுவிடலாம். குளத்தில் ஆற்றில் இருக்கும் மீன்கள் அந்த பச்சரிசியை சாப்பிட்டு விடும். முடியாதவர்கள் இந்த அரிசியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டுவிடலாம்.

- Advertisement -

இந்தப் பூஜையை நம்பிக்கையோடு செய்து வந்தால், அனக லட்சுமிதேவியை வேண்டிக்கொண்டால் நிச்சயமாக நீங்கள் இழந்த சொத்து சுகம் கௌரவம் பெயர் புகழ் பதவி அத்தனையையும் சுலபமாக மீட்டெடுத்து விட முடியும். அதற்கான அருளாசியை இந்த தேவி உங்களுக்கு நிச்சயமாக வழங்குவாள். இப்படி எத்தனை வாரங்கள் செய்வது. உங்கள் கஷ்டங்கள் தீரும் வரை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். தொடர்ந்து நாற்பத்தி எட்டு வாரங்கள் செய்யலாம்.

anaga-devi2

நேரமும் காலமும் கிரகங்களும் நமக்கு எதிராக மாறும் போது நமக்கு துன்பங்கள் வருவது இயற்கை தான். அதைக் கண்டு துவண்டு போய் அமர்ந்து விடாதீர்கள். துன்பத்தை எதிர்த்து நேர்மையான வழியில் போராடினால் நிச்சயமாக நம்முடைய வாழ்க்கை சூழ்நிலை மாறும். துன்பத்தைக் கண்டு துவண்டு போனால் துன்பம் நம்மை துரத்த தான் செய்யும். நேர்மையும் விடாமுயற்சியும் ஒரு மனிதனை எப்போதுமே மேலே உயர்த்திக் கொண்டே செல்லும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -