11.1 இன்று, நினைத்தது நடக்க எழுத வேண்டிய ஸ்விட்ச் வேர்ட்

amavasai1
- Advertisement -

இன்று அப்படி என்ன அதிசயமான நாள் என்று தானே சிந்திக்கிறீர்கள். நாளும் கோளும் நமக்கு நல்லது செய்வதை போல, நல்ல மனிதர்தள் கூட நன்மை செய்ய மாட்டார்கள், என்ற ஒரு பழமொழி இருக்கிறது. அந்த வரிசையில் இன்று ஆற்றல் மிகுந்த அதிசய சக்தி வாய்ந்த ஏஞ்சல் நம்பரை தன்னுள்ளே வைத்திருக்கக் கூடிய சிறப்பான நாள்.

இன்றைய நாள் 11.1 பார்த்தால் ‘111’ என்ற கணக்கில் வருகின்றது. இந்த அதிசயம் வாய்ந்த நன்னாளில் அமாவாசை திதியும் இருக்கிறது. அனுமன் ஜெயந்தியும் இருக்கின்றது. ஆக இன்னும் இந்த பூமியில் மனிதர்களுடைய நல்ல பிரார்த்தனைகளும் நல்ல எண்ணங்களும் பூலோகம் முழுவதும் பரவி இருக்கும். அது மட்டுமல்லாமல் இயற்கையாகவே அமாவாசை அன்று இந்த பிரபஞ்ச சக்தியானது ஒரு படி உயர்ந்து இருக்கும் என்பது நாம் அறிந்த ஒரு விஷயமே.

- Advertisement -

இப்படிப்பட்ட இந்த நல்ல நாளில் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள, நாம் செய்ய வேண்டிய ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று பார்க்கப் போகின்றோம். மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள இன்று 11 முறை இந்த வார்த்தையை எழுதினால் போதும். நீங்கள் நினைத்தது அப்படியே நடக்கும். அது என்ன வார்த்தை அதை எப்படி எழுத போகின்றோம் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

வேண்டுதல் நிறைவேற பரிகாரம்

ஒரு வெள்ளை காகிதம் எடுத்துக்கோங்க. நீல நிற பேனாவையே பயன்படுத்தலாம். அல்லது பச்சை நிற பேனா பயன்படுத்தலாம். கோடு போடாத வெள்ளை காகிதத்தில் முதலில் மஞ்சள் பொட்டு நான்கு பக்கமும் வைத்துவிட்டு, கிழக்கு பார்த்தவாறு அமைதியாக அமர்ந்து ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அந்த கோரிக்கை உங்களுக்கு நடந்து முடிந்து விட்டது. அதனால் உங்கள் மனது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உதாரணத்திற்கு, அவசர தேவைக்கு 10,000 வேண்டும். அந்த பத்தாயிரம் உங்கள் கைக்கு கிடைத்ததாக நினைத்துக் கொண்டு அந்த வெள்ளை காகிதத்தில் ‘111’ என்ற எண்ணை மேலே எழுதி விட்டு, ‘great victory’ என்ற ஆங்கில வார்த்தையை 11 முறை எழுதுங்கள்.

இந்த வார்த்தையை எழுதி விட்டு உங்களுடைய ஆழ் மனதித்தில் நீங்கள் நினைத்த நல்லது நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதாக கற்பனை செய்து கொள்ளவும். வெறும் பண விஷயத்திற்காக மட்டும் இந்த பரிகாரம் கிடையாது. நல்ல வேலை கிடைக்க, நல்ல வாழ்க்கை துணை அமைய, சொந்த வீடு வாங்க, நோய்நொடி இல்லாமல் வாழ, என்று உங்களுக்கு எந்த வேண்டுதல் இருந்தாலும் சரி, அந்த நல்லது நடந்து விட்டதாக கற்பனையிலேயே நினைத்து, ஒரு பத்து நிமிடம் கற்பனையாக நீங்கள் நினைத்த சந்தோஷமான வாழ்க்கையை வாழ வேண்டும்.

- Advertisement -

நடக்காத ஒரு விஷயம் தான், ஆனால் நடந்ததாக கற்பனை செய்து கொள்ளப் போகிறீர்கள். இன்றைய நாளில் நடக்காத ஒரு நல்லதை நடந்ததாக கற்பனை செய்து கொண்டால், அந்த நல்லது நிச்சயம் உங்களை தேடி வரும் என்பது நம்பிக்கை. இன்று மதியம் 1.11 மணிக்கு காகிதத்தில் உங்கள் வேண்டுதலை எழுதுவது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: அடகு நகையை மீட்க பரிகாரம்

முடியாதவர்கள் இன்றைய நாள் முடிவதற்குள், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் ஏமாற்றம் வராது. நல்லதே நடக்கும் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -