காசு சேர அஞ்சறை பெட்டியில் இருக்கும் சிகப்பு ரகசியம் இது தான்.

anjarai-petti
- Advertisement -

வீட்டில் இருக்கும் பெண்கள் கையிலும் பணம் காசு சேரனும். ஆண்கள் கையிலும் பணம் காசு சேரனும். வீட்டில் இருக்கும் பெண்களும் இப்போது வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள். சில பெண்கள் வீட்டில் இருந்தபடியே சின்ன சின்ன வேலைகளை செய்து அவர்களால் முடிந்த வருமானத்தையும் தேடி கொள்கிறார்கள்.

இப்படி பல வகையில் இன்று வீட்டிற்குள் பணம் வருகிறது. ஆனால் வந்த பணம் தங்குகிறதா. வந்த பணத்தை பிரயோஜனமாக செலவு செய்கின்றோமா. கிடையவே கிடையாது. ஒரு வரவு செலவு கணக்கு இல்லாமல் போகின்றது. வந்த வருமானத்தை சேமித்து வைத்தால் தானே எதிர்காலத்திற்கு பயன்படும்.

- Advertisement -

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு இணங்க வரக்கூடிய வருமானத்தை சேமிக்கும் போது தான் நமக்கு எதிர்காலத்தில் பிரச்சனை இருக்காது. வயதான பின்பு அடுத்தவர்களுடைய கையை எதிர்பார்க்காமல் வாழ சேமிப்பு மட்டும்தான் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும். சரி இந்த சேமிப்பு தங்குவதற்கு பெண்கள் ஆண்கள் இருவரும் பின்பற்ற வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் உள்ளது. அது என்னென்ன என்பதை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

பணம் தங்க அஞ்சரைப் பெட்டி ரகசியம்

அஞ்சறைப்பெட்டியை நடுவில் ஒரு சில காலமாக நாம் மறந்து விட்டோம். ஆனால் திரும்பவும் இப்போது நம்முடைய பாட்டிமார்களின் மகத்துவத்தை அறிந்து அஞ்சறைப் பெட்டியை சமையல் அறையில் வைத்திருக்கின்றோம். அந்த அஞ்சறைப் பெட்டியில் சின்ன சின்ன கிண்ணங்கள் இருக்கும். அதில் எப்போதுமே மசாலா பொருட்களை நிறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறைய விடாதீர்கள். அந்த அடுக்கி வைத்த டப்பாக்களுக்கு மேலே ஒரு தட்டு இருக்கும். அந்த தட்டுக்கு மேலே சிவப்பு நிற வர மிளகாய்களை அந்த காலத்தில் பாட்டிமார்கள் நிரம்ப வைத்திருப்பார்கள். இப்போது நீங்கள் அந்த தட்டை எதற்கு பயன்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஆனால் அது வரமிளகாய் வைக்கக்கூடிய தட்டு தான். அந்த வரமிளகாய் வைக்கக்கூடிய தட்டின் மேல் தான் காசு பணத்தை வைத்து சேமிப்பார்கள். அஞ்சறைப்பட்டியில் வர மிளகாய் இருந்தால் பணம் காசு சேரும். நீங்களும் அஞ்சரை பெட்டியில் இருக்கும் அந்த தட்டில், மேலே வர மிளகாயை வைத்துவிட்டு அதில் காசு சேர்க்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

- Advertisement -

உங்களுடைய கையிருப்பு இரண்டு மடங்காக உயரும். அந்தத் தட்டுக்கு மேலேதான் அஞ்சறைப் பெட்டியை மூடுவதற்கு மற்றொரு தட்டு கொடுத்து இருப்பார்கள். அதை வழக்கம்போல போட்டு மூடி வைத்துக் கொள்ளலாம். சிவப்பு வரமிளகாயின் மீது நீங்கள் வைக்கக்கூடிய பணம் எந்த ஒரு கண் திருஷ்டியும் இல்லாமல் எதிர்மறை எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் இல்லாமல் உங்கள் கையை விட்டு வீண் செலவாகாமல் தங்கும் என்பது ஒரு நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

அதாவது அந்த வர மிளகாய்க்கு பக்கத்தில் ரூபாய் நோட்டுகள், ஒன்று இரண்டு கட்டாயம் இருக்கணும். மற்ற சேமிப்பை பீரோவில் வைக்கலாம். தேவைப்படுபவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். அடுத்தபடியாக ஆண்கள் பணத்தை சேமிக்க என்ன செய்ய வேண்டும்.

எந்த ஒரு ஆண் மூன்று நிமிடத்தில் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியில் வருகின்றானோ, அந்த ஆண் பிரமாண்டமான வெற்றியை பெறுகின்றான் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது தண்ணீரை யார் ஒருவர் குறைவாக செலவு செய்கின்றாரோ, அவருக்கு கையில் பணம் தங்கும். ஆண்கள் மட்டும்தான் தண்ணீரை ஊற்றுகிறாரா.

பெண்களும் தான் தண்ணீரை ஊற்றுகின்றோம். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, தண்ணீரை எந்த அளவுக்கு நம்முடைய வீட்டில் சிக்கனமாக பயன்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு நம் கையில் பணம் சேரும். தண்ணீர் மட்டுமல்ல எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை வீணாக்க கூடாது.

இதையும் படிக்கலாமே: பணமும் தங்கமும் சேர ஜாதிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

தேவைக்கு ஏற்ப தான் பயன்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் உணவுப் பொருட்கள், தண்ணீர், இவைகளை வீணாக குப்பையில் தூக்கி கொட்டாதிங்க. அது உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -