பணமும் தங்கமும் சேர ஜாதிக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

jathikai pariharam
- Advertisement -

மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் பணம், தங்கம் போன்றவற்றின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த ஈர்ப்பின் காரணமாக தான் நாம் அந்த பணத்தையும், தங்கத்தையும் சேமித்து வைக்க ஆசைப்படுகிறோம். நம் செலவிற்கு மிஞ்சி மீதம் இருக்கும் பணத்தை சேமித்து வைத்து அதை தங்கமாக மாற்றி சேர்த்து வைத்துக் கொள்கிறோம். அப்படி சேர்த்து வைக்கும் பணமும், தங்கமும் நிரந்தரமாக நம்மிடம் நிலைத்திருப்பதற்கும், இன்னும் அதிகமாக சேர்வதற்கும் ஜாதிக்காயை பயன்படுத்தி எப்படி பரிகாரம் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நம் முன்னோர்கள் அன்றைய காலத்தில் பண வசியம், தன வசியம், தானிய வசியம் என்று பல வசியங்களை நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை வைத்து செய்து தங்களிடம் அந்த பணத்தையும், தனத்தையும், தானியத்தையும் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் நாம் வசியத்திற்கு உபயோகப்படுத்தப்படும் பொருள்தான் ஜாதிக்காய்.

- Advertisement -

ஜாதிக்காயை நாம் முகத்தில் பயன்படுத்தும் பொழுது நம் முகத்தில் ஒருவித பொலிவு ஏற்படும். அதே போல் தான் நாம் ஜாதிக்காயை பணத்துடனும், தங்கத்துடனும் சேர்த்து வைக்கும் பொழுது அங்கு ஒருவித பிரகாசம் ஏற்பட்டு பணமும், தங்கமும் ஈர்க்கப்படுகிறது.

இந்த பரிகாரத்தை நாம் எந்த நாள் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு மூன்று ஜாதிக்காய்கள் தேவைப்படும். பூச்சி எதுவும் வைக்காத நல்ல ஜாதிக்காயாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு அடி அகலமும் நீளமும் கொண்ட மஞ்சள் நிற துணியை வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த மஞ்சள் நிற துணியை நாம் நன்றாக துவைத்து காயவைத்து பிறகு பன்னீரில் நனைத்து காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஜாதிக்காயை மஞ்சள் கலந்த பன்னீரில் நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த மஞ்சள் நிற துணியில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஜாதிக்காயை வைக்க வேண்டும். பிறகு அதனுடன் நாம் ஒரு சிறிய அளவாவது தங்கத்தை வைக்க வேண்டும். பிறகு அதை மூட்டையாக கட்டி நாம் பணம் வைத்திருக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் பணத்தின் வரவு அதிகரிக்கும். அதனால் தங்க நகை நமக்கு அளவில்லாமல் சேரும். இதே பிரயோகத்தை நாம் தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் செய்யலாம். அப்பொழுது தங்கத்திற்கு பதிலாக ரூபாய் நோட்டுகளை வைத்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நாளை பெருமாளுக்கு இதை வைத்து வழிபட்டால் சகல செல்வத்தையும் தாராளமாக பெறலாம்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த மூட்டையில் இருக்கும் ஜாதிக்காய்களை எடுத்துவிட்டு புதிதாக வேறு ஜாதிக்காய்களை நாம் வைத்துக் கொள்ளலாம். இந்த பழைய ஜாதிக்காய்களை அழகு குறிப்புக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.

- Advertisement -