இளமையான முகத்தோற்றத்தைப் பெற

annachi poo
- Advertisement -

30 வயதை கடந்த ஆண்கள் பெண்கள் என்ற இரு பாலருக்கும் முகத்தில் லேசாக சுருக்கம் விழுக ஆரம்பிக்கும். இந்த சுருக்கத்தை நாம் சரியாக கவனித்து சரி செய்யவில்லை என்றால் இது விரைவிலேயே முதிர்ச்சி தன்மையை முகத்தில் தோற்றுவித்து விடும். இந்த சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தை பெறுவதற்கு பல கிரிம்கள் இருந்தாலும் இயற்கையான முறையில் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு பூவை மட்டும் நாம் பயன்படுத்தினால் போதும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் இளமையான தோற்றத்தை தரக்கூடிய பூவையும் அதை உபயோகப்படுத்தவும் முறையையும் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம்முடைய சருமத்தில் கொலாஜின் மற்றும் எலாஸ்டின் என்ற வேதிப்பொருட்கள் இருக்கிறது. இது எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நம்முடைய சருமத்தில் சுருக்கம் என்பது ஏற்படாது. 30 வயதை கடந்த பிறகு படிப்படியாக இது குறைய ஆரம்பிக்கும். மேலும் உடலில் இருக்கக்கூடிய எண்ணெய் பசையும் குறைய ஆரம்பிப்பதால் விரைவிலேயே சுருக்கம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

இதை நீக்குவதற்கு நம்முடைய சருமத்திற்கு அதிக அளவு கொலாஜி நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும். அந்த வகையில் நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு பூ தான் அன்னாசி பூ. அன்னாசி பூவில் ஆன்ட்டி ஆக்சைடு மற்றும் ஆன்ட்டி விரிங்ளிங் போன்ற தன்மை அதிகமாகவே இருக்கிறது. அன்னாசி பூவின் மூலக்கூறுகளை பல கிரிம்களை தயார் செய்ய பயன்படுத்துகிறார்கள். இந்த அன்னாசி பூவை எந்த முறையில் பயன்படுத்தினால் நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தை நம்மால் நீக்கி என்றும் இளமையாக இருக்க முடியும் என்று பார்ப்போம்.

முதலில் மூன்று அன்னாசி பூவை எடுத்து அதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியையும் சேர்த்து இவை இரண்டையும் பேஸ்ட் ஆக தயார் செய்வதற்கு தேவையான அளவு பன்னீரையும் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவ வேண்டும். எங்கெங்கெல்லாம் சுருக்கம் இருக்கிறதோ அந்த இடத்தில் எல்லாம் நாம் இதை தடவிக் கொள்ளலாம். 15 நிமிடம் அப்படியே உலர விட வேண்டும். பிறகு குளிந்த நீரினால் கழுவி விட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக பத்து அன்னாசி பூக்களை எடுத்து மூன்று கிளாஸ் தண்ணீர் ஊற்றி இது ஒன்னரை கிளாஸ் தண்ணீராகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு இதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஆறிய பிறகு இந்த தண்ணீரை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இந்த தண்ணீரை நாம் தினமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற விதம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் நாம் தொடர்ச்சியாக செய்யும் பொழுது நம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகம் என்றும் இளமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கூந்தல் இயற்கையான கருமை நிறத்தை பெற

மசாலா பொருட்களில் ஒன்றான அன்னாசி பூவை இந்த முறையில் பயன்படுத்தி நாமும் எவ்வளவு வயதானாலும் இளமையான தோற்றத்திலேயே இருக்கலாம்.

- Advertisement -